ஞாயிறு, 3 மே, 2009

தமிழர்களது புதைகுழிகளின் மேலே கைகளை வைத்து...

4,795+... தமிழர்களது புதைகுழிகளின் மேலே கைகளை வைத்து...
[வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2009, 09:59 பி.ப ஈழம்] [தி.வழுதி]
தமிழர் தாயகம் மீது சிறிலங்கா மேற்கொண்டுவரும் இன-அழிப்புப் படையெடுப்பில், இந்த வருடத்தின் முதல் 101 நாட்களில் - கடந்த ஏப்ரல் 11 ஆம் நாள் வரை - மட்டும் 4,795 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டனர். 9,869 தமிழர்கள் காயமடைந்துவிட்டனர். 'இராஜதந்திரம்', 'வெளியுறவுக் கொள்கை' என்ற திரைகளுக்குப் பின்னால் மறைந்திருந்து உலகம் மௌனம் காக்க, உலகத்தை மௌனமாக்கிவிட்ட இந்திய அரசு துணை செய்ய - தமிழர்களை இன்றும் கொல்கின்றது சிறிலங்கா.
பல உலக நாடுகளிடமும், மற்றும் உலக நிறுவனங்களிடமும் - போர் ஆயுதங்களையும், போர்-சார் தொழில்நுட்ப உதவிகளையும், விடுதலைப் புலிகள் பற்றிய புலனாய்வுத் தகவல்களையும், எல்லாவற்றுக்கும் மேலாக நிதி உதவியையும், அதற்கும் மேலாக போருக்கான தார்மீக ஆதரவையும் பெற்று - இன்றைய இந்திய அரசின் பேராதரவுடன் தமிழர்களுக்கு எதிரான போரை சிறிலங்கா நடத்துகின்றது.

மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலே, மருத்தவ மற்றும் பொது நிர்வாக வட்டாரங்கள் சேர்த்த புள்ளி விபரங்களின் படி -

இந்த வருடத்தின் அந்த முதல் 101 நாட்களில் மட்டும் -

கொல்லப்பட்ட 4,795 தமிழர்களில் - 1,207 சிறுவர்களும் 51 கர்ப்பிணித் தாய்மார்களும் அடங்குகின்றனர்.

காயமடைந்த 9,869 தமிழர்களில் - 2,864 சிறுவர்களும் 149 கர்ப்பிணித் தாய்மார்களும் அடங்குகின்றனர். 1,437 தமிழர்கள் உடல் உறுப்புக்களை இழந்துள்ளனர்; அவர்களில் 394 பேர் சிறுவர்கள்.

வன்னியில் இருந்த அனைத்துலக தொண்டு நிறுவனங்களினதும், ஐ.நா. சபையினதும் செயலாட்கள் இந்திய காங்கிரஸ் அரசினது ஆலோசனைக்கு அமைவாக எப்போதோ அங்கிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார்கள்.

தனது படைகளின் கவசப் போர் ஊர்திகளின் இரும்புச் சங்கிலிகளால் - தமிழரது உடலங்களை மிதித்து கொண்டு தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்த சிறிலங்கா, அங்கு கடைசியாக எஞ்சியிருந்த அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் வெளிநாட்டுப் பணியாட்களையும் வெளியேற்றிவிட்டது.

போர்ப் பிரதேசங்களில் சேவையாற்றுவதே அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் அடிப்படைப் பணி; ஆனால் - சிறிலங்காவின் உத்தரவுக்கும், இந்திய அரசின் செல்வாக்கிற்கும் அஞ்சி அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கமும் வெளியேறிவிட்டது.

சாட்சி சொல்ல யாருமற்ற தமிழினத் துடைத்தழிப்பு (Genocide), எம் மண்ணில் அவல ஓலங்களுடன் அரங்கேறுகின்றது.

வாய் கிழிய மனித உரிமைகள் பற்றிப் பிரசங்கம் செய்யும் இந்த உலகமோ, எல்லாம் தெரிந்த போதும், கை கட்டிப் பார்த்து நிற்கின்றது.

இந்திய அரசுக்கு எதிராய் ஒரு சுண்டுவிரலைத் தானும் நீட்ட வக்கற்று இந்த உலகம், 'இராஜதந்திரம்' என்ற பெயரில் வெட்கம் கெட்டு நிற்கின்றது.

"இலங்கை விடயத்தில் இருந்து நீங்கள் வெளியில் போய் விடுங்கள்" என்று எம்.கே.நாராயணன் தன்னிடம் நேரடியாகவே சொன்னதாக, எரிக் சொல்ஹெய்ம் எனது நண்பர் ஒருவரிடம் வெளிப்படையாகவே சொல்லியுள்ளார்.

மேலும், அண்மையில் - தம்மால் "அதிசயம் எதனையும் நிகழ்த்த முடியாது" என்று சொன்ன எரிக் சொல்ஹெய்ம், "அமெரிக்காவோடு பேசுவேன், ஜப்பானோடு பேசுவேன், ஐரோப்பிய ஒன்றியத்தோடு பேசுவேன்" என்றுவிட்டு இந்தியா பற்றி வாய் திறப்பதை வேண்டும் என்றே தவிர்த்துவிட்டார்.

ஏற்கெனவே விலக்கப்பட்டிருந்த நோர்வேயை, இப்போது - சிறிலங்காவை வைத்து அதிகாரபூர்வமாகவே அங்கிருந்து வெளியேற்றிவிட்டது இந்தியா.

இன்னொரு வகைளில் சொல்லப் போனால் - 'இலங்கைப் போரை நாம் தான் நடத்துகின்றோம்; வேறு யாரும் அங்கு தலையிடத் தேவையில்லை' என்று மேற்குலகிற்கு இந்தியா அரசு சொன்ன செய்தி அது.

'போரை நிறுத்து' என்று சும்மா சொன்னால் போர் நிற்காது என்பது தெரிந்திருந்தும், 'போரை நிறுத்து' என்று புலம்புகின்றது இந்த உலகு.

ஈழத் தமிழனைக் காப்பதே தன் 'கடைசிச் சாதனை' என்று வாய்ச் சவடால் விட்ட கருணாநிதியோ, தமிழனை 'அம்போ' என்று கைவிட்டுவிட்டு, தனது ஏதோ ஒரு கடைசி ஆசைக்காக காங்கிரஸ் காரர்களின் கால்களில் விழுந்து நக்கத் தொடங்கிவிட்டார்.

எல்லோருமாகச் சேர்ந்து - தமிழனின் காதிலே பூ சுற்றி, அவனின் தலையிலே இப்போது மிளகாயும் அரைக்கின்றார்கள்.

சிங்களப் படையெடுப்பை நிறுத்தி, நடந்துகொண்டிருக்கும் மாபெரும் மனிதப் பேரவலத்தைத் தடுக்கத் திராணியற்ற உலகமோ, இப்போது - உலகத் தமிழ் செயற்பாட்டாளர்களை அழைத்து வைத்துக்கொண்டு - 'போருக்குப் பின்னான காலம்' என்றும் 'புலிகளுக்குப் பின்னான காலம்' என்றும் பசப்பு வார்த்தைகள் பேசத் தொடங்குகின்றது.

போரும் முடிந்து, புலிகளும் முடிந்த பின்னர் - ஏதோ அவர்களே இறங்கி நல்ல தீர்வு வாங்கித் தருவார்கள் என்று எம்மை நம்பவைக்கும் விதமாகப் பேசி மயக்கத் தொடங்குகின்றது உலகு.

போரும் முடிந்து, புலிகளும் முடிந்து போன பின்னர் யாரும் தமிழனை ஏறெடுத்தும் பார்க்கப் போவதில்லை என்பது, சொல்லுகின்ற அவர்களுக்கும் கேட்கின்ற எமக்கும் தெளிவாகவே தெரியும்.

யாருடைய மயக்குதலுக்கும் நாங்கள் இனி ஆளாகத் தேவையில்லை; எல்லாம் முடிந்து போன பின்னர், கருணாநிதியின் கருணையும் எமக்குத் தேவையில்லை.

இந்த உலகத்தையே இப்போது நாங்கள் உலுக்க தொடங்கிவிட்டோம்.

சிவப்பும், மஞ்சளும், புலி பாயும் எங்கள் செங்கொடியுமாக - உலகத் தலைநகரங்களை நாங்கள் நிறைத்த பின்னர்தான், எமது செய்தி என்ன என்பதை நிதானமாகக் கேட்கின்றது உலகு.

'பயங்கரவாத'ப் பட்டம் சூட்டி - நிராகரித்து - எம்மைப் பயமுறுத்தி வைத்திருந்த காலம் எல்லாம் மலையேறிப் போயே போய் விட்டது.

உலக ஊடகங்களின் படப்பிடிப்புக் கருவிகளுக்கு நேர் முன்னால் நின்று - "விடுதலைப் புலிகள் எங்கள் சுதந்திரப் பேராளிகள்!" என்று நேரடியாகச் சொல்ல நாம் துணிந்து விட்டோம்.

"புலிகளுக்கு எதிரான போர் என்பது தமிழர்களுக்கு எதிரான போரேதான்" என்று நாம் உரக்கச் சொல்லத் தொடங்கிவிட்டோம்.

புலிகளைத் தடைசெய்து விட்டு - 'பயங்கரவாதிகள்' என்று தமிழனைக் கொச்சைப்படுத்தி ஒதுக்கிய நாடுகளின் காவல்துறையும், சட்டமும் - இன்று, புலிக்கொடிகள் தாங்கி நாங்கள் லட்சக்கணக்கில் அவர்களது தெருக்களிளேயே அணிவகுக்கின்றபோது - ஒரு ஓரமாகப் பார்த்து நிற்கின்றன என்பது தான் யதார்த்தம்.

இப்படி ஒரு காட்சியை இரண்டு வருடங்களுக்கு முன்னால் நாங்கள் கற்பனை கூடச் செய்து பார்த்தது கிடையாது.

புலிக்கொடி பிடித்தாலோ அல்லது புலிகள் பற்றிக் கதைத்தாலோ இந்த உலகம் எம் கதையைக் கேட்காது என்று மிக அண்மைக்காலம் வரை நாமே எமக்குச் சொல்லிக்கொண்டு சும்மா கிடந்தோம்.

ஆனால், இவ்வளவு காலமும் எமது போராட்டங்களுக்குச் செவிமடுக்காத உலகு, இன்று - புலிக்கொடிகளோடு நாங்கள் வீதிகளில் இறங்கிய பின்னர் தான் எங்கள் கதையைக் கேட்கின்றது.

விடாப்பிடியான - ஓய்வற்ற - எங்கள் போராட்டத்தின் மூலம் உலகத்தின் மனச்சாட்சிக்குள் பெரும் பூகம்பத்தையே நாங்கள் இன்று நிகழ்த்த தொடங்கிவிட்டோம்.

இருந்தாலும் - எமக்குச் சாதகமாக உலகில் எதுவும் நடக்காதது போல எமது பார்வைக்கு இப்போது தோன்றலாம்; அதில் இப்போதைக்கு ஓரளவுக்கு உண்மையும் இருக்கலாம்.

புலிக்கொடிகளோடு நாம் அலைந்து திரிவது தான் அதற்குக் காரணம் என்று சிலர் சொல்லப்பார்க்கின்றார்கள்; ஆனால், உண்மைக் காரணம் அதுவல்ல.

எமக்குச் சாதகமான சூழல் வெளிப்படையக அமைவது தாமதம் ஆகுவதற்கு இரண்டு முதன்மையான காரணங்கள் உள்ளன:

ஒன்று -

தங்களது தலைநகரங்களை நிறைத்துப் போராடுகின்ற தமிழரது உணர்வுகளுக்கு அடிப்படையாக உள்ள தமது 'மனிதாபிமான விழுமியங்களுக்கும்' (Humanitarian Values) -

சிறிலங்காவைத் தனது கைப்பொம்மையாக வைத்து ஆட்டுகின்ற இன்றைய இந்திய அரசுடனான தமது 'வெளியுறவுக் கொள்கை'க்கும் -

தென்னாசிய, இந்த சமுத்திர பிராந்தியத்தில் தமக்கு இருக்கின்ற 'கேந்திர நலனுக்கும்' இடையில் பின்னப்பட்டிருக்கின்ற 'இராஜதந்திர' வலையில் இந்த உலகு சிக்குண்டிருக்கின்றது.

இரண்டாவது -

அங்கீகாரம் பெற்ற ஒரு நாட்டின் அரசாங்கம் (Government of a Sovereign State) என்ற வகையில் - தனது ஆட்சி எல்லைக்குள் உள்ள நிலம் மீதும், மக்கள் மீதும் தனது சக்தியையும் அதிகாரத்தையும் பிரயோகிக்கும் உரிமை சிறிலங்கா அரசிற்கு உள்ளதால், தனது அதிகார பலத்தை தனது எல்லைக்குள் மட்டும் பிரயோகிக்கும் ஒர் அரசாங்கத்திற்கு எதிராக எதுவும் செய்ய முடியாத 'சட்ட வலைக்குள்ளும்' இந்த உலகு சிக்குண்டுள்ளது.

எமக்குச் சாதகமான சூழல் உலகில் ஏற்படாதது போல தோன்றுவதற்கு இவை இரண்டுமே முதன்மைக் காரணிகள்; ஒரு அளவுக்கு மேல் எம்மால் எதனையும் இந்த உலகிடம் இப்போதைக்கு எதிர்பார்க்கவும் முடியாது.

உலகை ஆளும் இயங்கு மையம் 'மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி' நகர்ந்து தென்னாசியப் பிராந்தியத்தில் இப்போது நிலைகொள்வதாகச் செல்லப்படுகின்றது.

'ஒற்றை வல்லரசு' தகுதியை அமெரிக்கா இழந்துவர - 'பூகோள வல்லரசு' என்ற நிலைக்காக இந்தியாவும் சீனாவும் இப்போது போட்டியிடுவதாகவும் நோக்கப்படுகின்றது.

இவற்றுக்குப் பின்புலமாக - பொருளாதார, அரசியல், பாதுகாப்பு மற்றும் கேந்திர நலன்கள் கொண்ட - நுணுக்கமான பல காரணங்கள் இருக்கின்றன.

நடந்துவரும் இந்த உலக மாற்றத்தைப் பின்னணியாக வைத்தே, தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தையும் நாம் நோக்க வேண்டியுள்ளது.

இந்தியாவை மீறி இப்போதைக்கு இந்த உலகம் எதுவும் செய்ய முடியாதுள்ளது என்பதையும் இந்தப் பின்னணியை வைத்துத்தான் நாம் பார்க்க வேண்டும்.

2001 செப்ரெம்பருக்குப் பின்னான உலகச் சூழலைச் சரிவரக் கணிக்காமல் விடுதலைப் புலிகள் இயக்கம் விட்ட சில அரசியல் - இராஜதந்திர - இராணுவத் தவறுகளும் இன்றைய பின்னடைவு நிலைக்குக் காரணம் என்பதும் உண்மைதான்.

ஆனால், இன்று நிலைமை எப்படி இருந்தாலும், எமக்கான காலம் உலகில் கனிந்து வருகின்றது என்பது தான் உண்மை; ஆனால், அது சற்று காலதாமதம் ஆகின்றது.

அடுத்து வருகின்ற ஓரிரு மாத காலம் தான் தமிழினத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கப் போகின்ற காலம்.

இதுதான் உச்ச நேரம்; இந்த ஒரிரு மாத காலத்தின் ஒவ்வொரு நாளும் பெறுமதியானவை.

உலக ஓட்டத்தை உற்று நோக்கினால் ஒரு விடயம் எமக்குத் தெளிவாகப் புரியும்; இனத் துடைத்தழிப்புப் படுகொலைகள் உலகில் நிகழ்ந்த போது, எங்குமே அவை தடுக்கப்பட்டதில்லை.

இன அழிப்புக்கள் நிகழும் போது யாரும் அதில் தலையிடுவதுமில்லை: அவ்வாறு தலையிடாமல் இருப்பதற்கு அவரவருக்கு அவரவரது சொந்தக் காரணங்கள் உண்டு; யாரையும் இதில் குற்றம் சாட்டவும் முடியாது.

எல்லாம் முடிந்த பின்னர் தலையிட்டு - விசாரணை, புனர்வாழ்வு, மீள் கட்டுமானம், அது, இது என்று அடுக்கெடுப்பது தான் உலக வழமை.

அதுதான் - "Post Conflict Scenario"

இப்போது - எமது விடயத்திலும் - போரும் முடிந்து, இன அழிவும் முடிந்த பின்னர் - பெட்டி படுக்கைகளோடு வந்து இறங்குவதைத் தான் "போருக்குப் பின்னான காலம்" என்று பேசுகின்றார்கள்.

ஆனால், தமிழர்களைப் பொறுத்தவரையில் -

முன்னைய காலங்களில் இனத்-துடைத்தழிப்புக்கு உள்ளாகிய இனங்களுக்கு இருந்திருக்காத சாதகமான புற மற்றும் அகச் சூழ்நிலைகள் எமக்கு இப்போது உள்ளன என்பது தான் நாம் இங்கே கவனிக்க வேண்டிய விடயம்.

நான்கு விடயங்கள் முக்கியமானவை:

ஒன்று - எப்போதோ முடிந்துவிடும் என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்ட போதும், மிகப் பலமாக இன்னமும் தொடரும் விடுதலைப் புலிகளின் மரபுவழி ஆயுதப் போராட்டம்.

இரண்டாவது - அனைத்துலக அரங்கில் தமிழர்கள் நடத்தும் - மிக வலிமையான - உதாசீனம் செய்து ஒதுக்கிவிட முடியாத பேரெழுச்சிப் போராட்டங்கள்.

மூன்றாவது - தமிழ்நாட்டு மக்களின் - கேள்விக்கிடமற்ற - ஏகோபித்த துணையும், உலகத் தமிழினம் ஒரே குடையின் கீழ் அணிதிரண்டிருக்கும் பலமும்.

நான்காவது - உலக வல்லரசு நிலைமாற்றங்கள், தென்னாசியாவின் வளர்ந்து வரும் கேந்திர முக்கியத்துவம் என்பவற்றுடன், இந்தியத் தேர்தல்.

இந்த நான்கில் முதல் இரண்டு விடயங்களும் ஒன்றோடு ஒன்று பிணைந்துள்ளன.

இன அழிப்புப் படுகொலையைத் தடுத்து நிறுத்துங்கள் என்று போராடினால் தான் உலகத்தின் கவனத்தை நாம் ஈர்க்க முடியும் என்பது எந்த அளவுக்கு உண்மையோ, ஆயுதப் போராட்டம் உச்சமாக நிகழ்கின்ற போது முன்வைத்தால்தான் எமது அரசியல் கோரிக்கைகளும் எடுபடும் என்பதும் அதே அளவுக்கு உண்மை.

இன அழிப்பைத் தடுத்து நிறுத்துங்கள் என்று மட்டும் போராடினால், சில சமயம் இன அழிப்பைத் தடுக்க முடியாமலே கூட போய்விடலாம்; ஆனால், தெளிவான அரசியல் கோரிக்கையையும் முன்வைத்துப் போராடினால் - இன அழிவையும் தடுத்து, அரசியல் உரிமைகளையும் பெற்றுவிடும் சாதகச் சூழல் எமக்கு கனிந்து வருகின்றது.

எனவே - இன அழிப்பைத் தடுக்கும் படி போராடி உலகத்தின் கவனத்தை ஈர்த்து, ஈர்க்கப்பட்ட அந்தக் கவனத்தின் முன்னால் எமது தெளிவான அரசியல் போரிக்கைகளையும் நாம் முன்வைக்க வேண்டும்.

அதற்கு இது தான் மிகச் சரியான நேரம்.

அடிப்படையான எமது அரசியற் கோரிக்கைகள் இரண்டே இரண்டு தான்.

அந்த இரண்டு அடிப்படை அரசியல் கோரிக்கைகளில் எந்தவித மாற்றங்களும் இருக்கக் கூடாது; ஏனெனில், அவை இரண்டுமே, மேற்குலகு போற்றும் 'ஜனநாயக' வழிமுறைகளினூடாகத் தமிழர்களால் ஏற்கெனவே தெளிவாகச் சொல்லப்பட்டுவிட்ட விடயங்கள்.

ஒன்று - 'தமிழீழத் தனியரசே எமக்கான தீர்வு': 1977 நாடாளுமன்றத் தேர்தலில், அந்தத் தீர்வுக்கு வக்களித்து, நாம் அதனைத் தெளிவாகச் சொல்லியாகிவிட்டது. அதில் இப்போது எந்த மாற்றமும் இல்லை; தமிழர்களுக்கு என்ன தேவை என்பதைத் தீர்மானிக்க இனி ஒரு பொதுவாக்கெடுப்பும் (Referendum) தேவையில்லை.

இரண்டாவது - தமிழீழ விடுதலைப் புலிகளே எமது ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் (Authentic representatives): 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அந்த அங்கீகாரத்திற்கு வாக்களித்து, விடுதலைப் புலிகள் பற்றிய தமிழர்களின் நிலைப்பாடு தெளிவாகச் சொல்லப்பட்டுவிட்டது. அதில் எந்த மாற்றத்திற்கும் இனி இடமில்லை.

இந்த இரண்டு அடிப்படை அரசியல் கோரிக்கைளையும் இந்த உலகம் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளும் விதமான புறச்சூழல் நிச்சயமாக ஏற்படும்.

- 'புலிகள் எங்கள் சுதந்திரப் போராளிகள்' என்பதை இந்த உலகத்தின் செவிப்பறை கிழிய நாம் தொடர்ந்து சொல்லிக்கொண்டேயிருக்க -

- சிங்களப் படைகளின் முன்னேற்றங்களுக்கு எதிராகப் புலிகள் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்க -

- காங்கிரஸ் - கருணாநிதி கூட்டணியைத் தோற்கடித்துத் தமிழ்நாட்டு மக்கள் புறந்தள்ள -

இந்த மூன்று விடயங்களும் ஒருசேர நடக்கின்றபோது - எமக்கான ஒருநாள் நல்லவிதமாக விடிந்தே ஆகும்.

இந்த மூன்று விடயங்களும் ஒருசேர நடக்கின்ற போது - இந்த உலகம் எமது குரலைக் கேட்டுத்தான் ஆகும்; எமக்குச் சாதகமான முடிவுகளை எடுத்துத்தான் ஆகும்.

வன்னிப் போரைப் புலிகளும், இந்தியத் தேர்தலை எம் தமிழ்நாட்டு மக்களும் பார்த்துக்கொள்ள - எமக்குச் சாதகமான உலகச் சூழலை ஏற்படுத்த வைக்கும் உலகளாவிய எமது போராட்டங்கள் இதே முனைப்புடனும், இதைவிட அதிக முனைப்புடனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்க வேண்டும்.

சிலையாய் நிற்கின்ற நேரு மாமாவின் தலையை உடைத்து, சும்மா கிடக்கின்ற சிறிலங்கா தூதரகத்தை நொருக்கி - எமது நோக்கத்தையும், கவனத்தையும் வன்முறைகளில் சிதறவிடாமல் - தெளிந்த நோக்குடன் எமது போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

இதுவரை நாம் வந்து சேர்ந்துவிட்ட இந்த அரசியல் உச்ச நிலையில் இருந்து இனி நாம் திரும்பிப் போக முடியாது.

ஒட்டுமொத்தமாக - எங்களது அரசியல் விடுதலைக்கான காலம் நிச்சயமாகக் கனிந்து வருகின்றது.

எல்லா வழிகளிலும், எல்லா முனைகளிலும், நாம் எல்லோருமாகச் சேர்ந்து போராடி இந்தப் போராட்டத்தை வென்றே தீருவோம் என உறுதி எடுப்போம்....

படுகொலை செய்யப்பட்டுவிட்ட அந்த 4,795+... தமிழர்களின் புதைகுழிகளின் மேல் கைகளை வைத்து;

எங்கள் தேசத்தையும், இனத்தின் கௌரவத்தையும் காக்கும் போரிலே இன்றும் வீழ்ந்துகொண்டிருக்கும் எங்கள் விடுதலை வீரர்களின் புதைகுழிகளின் மேலே கைகளை வைத்து;

தமிழர் படையின் ஈடு இணையற்ற போர்த் தளபதி பிரிகேடியர் தீபனின் புதைகுழியின் மேலே கைகளை வைத்து!

தி.வழுதி

சிறிலங்காவுக்கு பணம் கொடுக்காதீர்கள்: அகாசியிடம் த.தே.கூ. வலியுறுத்தல்

[ஞாயிற்றுக்கிழமை, 03 மே 2009, 09:15 மு.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]
வன்னிப்பெரு நிலப்பரப்பை இராணுவ பிரதேசமாக்கி தமிழர் தாயக கோட்பாட்டை நில ரீதியாக பிளவுபடுத்தி தமிழ் இன அழிப்பில் ஈடுபட்டும் சிறிலங்கா அரசாங்கத்திடம் இடம்பெயர்ந்த தமிழ்மக்களின் நிவாரணப் பணிகளுக்காக 480 மில்லியன் நிதி வழங்கப்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜப்பான் தூதுவர் யசூசி அகாசியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.
சிறிலங்காவின் தலைநகர் கொழும்புக்கு சென்றுள்ள ஜப்பான் தூதுவர் யசூசி அகாசியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான அரியநேந்திரன், கனகசபை, அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் ஆகியோர் நேற்று சந்தித்து கலந்துரையாடியபோதே இவ்வாறு வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.

இச்சந்திப்பு மிகவும் காரசாரமான விவாதங்களுடன் இடம்பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

ஜப்பான் தூதுவர் யசூசி அகாசியுடன் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்ததாவது:

இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு ஜப்பான் மகிந்த அரசாங்கத்திடம் கையளிக்கவுள்ள 480 மில்லியன் நிதி போருக்கே செலவிடப்படும். ஆகவே, சிறிலங்கா அரசாங்கத்தின் பொய்யான பரப்புரைகளை ஏற்று தமிழின அழிப்பு போருக்கு ஜப்பான் உதவி அளிக்கக்கூடாது.

வவுனியாவில் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள இடம்பெயா்ந்த மக்களை ஐந்து வருடங்களுக்கு நிரந்தரமாக அப்படியே வைத்திருப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்து 150 மைல்களுக்கு அப்பால் உள்ள காடுகளை அழித்து நிரந்தரமாக கொட்டில்களை அமைத்து அங்கு இடம்பெயர்ந்த மக்களை குடியமர்த்தி அடிமைகளாக வைத்திருக்க முற்படும் சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டத்தை ஊக்கப்படுத்தும் வகையில் ஜப்பான் நிதி வழங்குகின்றமை வேதனைக்குரியது.

இந்த மக்கள் வன்னியில் சொந்த நிலபுலங்களுடன் வாழ்ந்தவர்கள்; தொழில் புரிந்தவர்கள். மக்களை அவர்களின் சொந்தக் கிராமங்களில் மீளக்குடியமர்த்தினாலே போதும்.

அவர்கள் தாங்களாகவே உழைத்து வாழ்வார்கள். மக்களிடம் மாடுகள் பண்ணைகள் உண்டு. நீங்கள் நிதி கொடுக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.

ஆனால், போரினால் அவர்களின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் அழிந்துள்ளன; தேசமடைந்துள்ளன. அவற்றைத் திருத்துவதற்கு நிதி வழங்கி நட்ட ஈட்டையும் வழங்குங்கள் என விளக்கி கூறியதாக சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

அதேவேளையில் இதற்கு பதிலளித்த யசூசி அகாசி, சிறிலங்கா அரசாங்கம் ஜனநாயக ரீதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டது. அத்துடன், இடம்பெயர்ந்தவர்கள் படிப்படியாக மீளக்குடியமர்த்தப்படுவார்கள் என்று மகிந்த அரசாங்கம் தன்னிடம் உத்தரவாதம் அளித்ததாக கூறியிருக்கின்றார்.

யசூசி அகாசி, அவ்வாறு கூறியதை மறுத்துரைத்த இரா.சம்பந்தன், சிறிலங்கா அரசாங்கத்தின் ஜனநாயகம் பற்றி எங்களுக்கு ஜப்பான் கூறவேண்டிய அவசியம் இல்லை என்று ஆவேசமாக கூறியுள்ளார்.

சிறிலங்காவின் ஜனநாயகம் பற்றி யசூசி அகாசி கூறிய விடயம் தொடர்பில் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டிய விடயங்கள் குறித்து சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் தெரிவித்ததாவது:

லசந்த விக்கிரமதுங்க உட்பட இதுவரை 20 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படவில்லை.

அரச படைகளுடன் சேர்ந்தியங்கும் ஆயுதக்குழுக்களும் சிறிலங்காவின் புலனாய்வுத்துறையினரும் இக்கொலைகளை செய்துள்ளனர். வேறு யாரும் அல்ல. அதற்கான ஆதாரங்களை கூட்டமைப்பினராகிய நாங்கள் அரச தலைவரிடம் நேரடியாக கையளித்தும் இன்னமும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

சிறிலங்கா அரசாங்கம் 1948 ஆம் ஆண்டில் இருந்து பல உறுதிமொழிகளை தமிழர்களுக்கு வழங்கியுள்ளது. ஆனால் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை

கனரக ஆயுதங்களை பாவிக்கமாட்டோம் என இந்தியாவிற்கு வழங்கிய உறுதிமொழியைக்கூட சிறிலங்கா அரசாங்கம் இன்று மீறியுள்ளது.

உத்தரவாதங்களை சிறிலங்கா அரசாங்கம் தாராளமாக வழங்கும். அதில் பிரச்சினை இல்லை. ஆனால் அந்த உறுதிமொழிகள் அனைத்தும் வெற்றுக் காகிதங்கள்தான்.

முள்ளிவாய்க்காலில் இயங்கிவந்த தற்காலிக மருத்துவமனை கூட இன்று (நேற்று) படையினரின் எறிகணைத்தாக்குதலுக்கு உள்ளாகி 64 நோயாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுதான் சிறிலங்கா அரசாங்கத்தின் ஜனநாயகம் என்று சம்பந்தன் இடித்துரைத்தார்

அதேவேளையில் ஜப்பான் போன்ற அனைத்துலக நாடுகள் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நேரடியாக உதவிபுரிவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும என்று சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்ததாக சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இரண்டாம் உலக போரின்போது ஜப்பான் கிரோசிமா, நாகசாகி போன்ற நகரங்களில் அணுக்குண்டுகள் வீசப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட அவலமும் அதன் தாக்கம் இன்றுவரை நீடிப்பதும் ஜப்பானுக்கு புரியும்.

இந்நிலையில் போரில் தமிழ் மக்கள் படும் அவலங்கள், வேதனைகள் பற்றி உங்களுக்கு சொல்லவேண்டிய அவசியம் இல்லை என காரசாரமாக எடுத்து விளக்கியதாகவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறினார்.

இச்சந்திப்பு கடுமையான வாக்குவாதத்துடன் இடம்பெற்றமையினால் எதிர்வரும் காலங்களில் யசூசி அகாசி கொழும்புக்கு வரும்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்காது என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

திங்கள், 23 மார்ச், 2009

தேசியத் தலைவர் பிரபாகரனின் எண்ணக்கதிர்

தேசியத் தலைவர் பிரபாகரனின் எண்ணக்கதிர்

பண்டைய இதிகாசங்கள் புனைந்துவிட்ட புரளிகளாற்
சிங்கள இனம்
வழிதவறிச்சென்று
தொடர்ந்தும் பேரினவாதச்
சகதிக்குள் வீழ்ந்துகிடக்கிறது.

13 சதுர கி.மீ. பரப்பளவில் 150,000 மக்கள்; வாராந்தம் 300 பேர் படுகொலை:

13 சதுர கி.மீ. பரப்பளவில் 150,000 மக்கள்; வாராந்தம் 300 பேர் படுகொலை:

'த ரைம்ஸ்' நாளிதழ்

[திங்கட்கிழமை, 23 மார்ச் 2009, 07:03 மு.ப ஈழம்] [பி.கெளரி]

வன்னி நிலப்பரப்பில் 13 சதுர கிலோ மீற்றர் பரப்பளவில் 150,000 மக்கள் வாழ்ந்து வருகின்றனர்; வாராந்தம் 300 பேர் படுகொலை செய்யப்படுகின்றனர்; மருந்து, உணவு, குடிநீர் இல்லாமல் மக்கள் உயிரிழக்கின்றனர் என்று லண்டனில் இருந்து வெளிவரும் 'த ரைம்ஸ்' நாளிதழ் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் 'த ரைம்ஸ்' இதழுக்காக எழுதிய கட்டுரையில் ஊடகவியலாளர் மாரீ கொல்வின் மேலும் தெரிவித்துள்ளதாவது:

அவையவங்களை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைந்த மக்களுடன் இலங்கையின் வடக்கு - கிழக்கு கடற்கரையில் காத்திருக்கின்றனர் என தொண்டர் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

புதுமாத்தளன் கடற்கரைப் பகுதியில் காத்திருக்கும் மக்கள் எறிகணைத் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகின்றனர். அவர்கள் பதுங்குகுழிகளில் அடைக்கலம் புகுந்து வருகின்றனர். 26 வருடப் போரில் தற்போது அதிக பாதிப்புக்களை சந்தித்து வரும் மக்கள் இவர்கள்.

கடந்த வாரம் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் காயமடைந்த 460 மக்களை மருத்துவமனைகளுக்கு எடுத்துச் சென்றிருந்தது. உள்ளூர் மீனவர்களின் துணையுடன் மரத்திலான டிங்கி படகுகளில் கொண்டு செல்லப்பட்ட இந்த மக்கள் 'கிறீன் ஓசின்' கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அதிகளவான மக்கள் காயமடைகின்ற போதும் எடுத்துச் செல்லப்படும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கைகள் மிகவும் குறைவானது எனவே நாம் படுகாயமடைந்தவர்களையே அகற்றி வருகின்றோம்.

ஏனைய காயமடைந்த மக்களை அங்கேயே விட்டுள்ளோம். இது வேதனையானது என அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதி சோபி றோமனின்ஸ் தெரிவித்துள்ளார்.

படை நடவடிக்கை காரணமாக 13 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுள்ள பகுதிகளில் 150,000 மக்கள் தங்கியுள்ளனர். அங்கு நடைபெறும் வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களினால் ஒவ்வொரு வாரமும் 300 பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். அங்குள்ள மக்கள் மருந்து, உணவு, குடிநீர் பற்றாக்குறை காரணமாகவும் இறப்புக்களை சந்தித்து வருகின்றனர்.

வன்னியில் இயங்கிவந்த கடைசி மருத்துவமனையும் சிறிலங்கா இராணுவத்தின் குண்டு வீச்சுக்களுக்கு இருமுறை உட்பட்டதனால் மூடப்பட்டுள்ளது.

புதுமாத்தளனில் உள்ள சிறிய மருத்துவமனையே தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அங்கு நோயாளர்கள் நிலத்தில் நீர் உட்புகாத துணிகளில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர். மருந்து பொருட்களிளின் பாவனைக்கு மரத்தின் கிளைகளே பயன்படுத்தப்படுகின்றன. இந்த வருடம் ஜனவரி மாதத்தில் இருந்து 2,800 மக்கள் அங்கு கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

வன்னியில் உடனடியான போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் எமக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்துடன் நிபந்தனையற்ற பேச்சுக்களுக்கு தயார் எனவும் சிறிலங்கா அரசாங்கத்தினால் நாளாந்தம் மேற்கொள்ளப்படும் குண்டு வீச்சுக்கள் ஒரு இன அழிப்பு நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கான மனிதாபிமான உதவிகளை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக தடுத்து வருவதுடன் தொடர்ச்சியாக வான்குண்டு மற்றும் பீரங்கித் தாக்குதல்களையும் மேற்கொண்டு வருகின்றது.

இது வன்னியில் பெரும் மனித அவலங்களை ஏற்படுத்தியுள்ளது. அனைத்துலக கண்காணிப்பாளர்கள் வன்னிக்கு வந்து நிலமைகளை கண்காணிக்க வேண்டும் என நடேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் 24 மணி நேரத்தில் பதில் கூறாது விட்டால் சிறிலங்காவை பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இருந்து பிரித்தானியாவின் பிரதமர் கோர்டன் பிறவுன் நீக்க வேண்டும் என பிரித்தானியாவின் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் றயன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா தொடர்பான விவாதம் நாளை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு கண்டனம்

ஐ.நா. மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடரில் சிறிலங்காவுக்கு கண்டனம்

[ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2009, 07:54 பி.ப ஈழம்] [சுவிஸ் நிருபர்]

சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் பத்தாவது கூட்டத்தொடரில் சிறிலங்கா பல நாடுகளினால் கண்டிக்கப்பட்டதுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரினது கண்டனத்திற்கும் உள்ளாகியுள்ளது.
இதேவேளையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் பத்தாவது கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் பலவிதப்பட்ட அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களின் கண்டனத்திற்கும் சிறிலங்கா ஆளாகியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் பிரதான கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருக்கும் அதேவேளையில் ஐக்கிய நாடுகள் சபை மண்டபத்திற்குள் அனைத்துலக அரச சார்பற்ற வேறு நிறுவனங்களின் கூட்டங்களும் நடைபெறுகின்றன.




இவற்றில் குறிப்பாக கடந்த திங்கட்கிழமை, வியாழக்கிழமை ஆகிய நாட்களில் அல்காக நிறுவனம், ஹிமாலயன் கலாச்சார நிறுவனம், அனைத்துலக சர்வ நம்பிக்கை ஆகிய அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களினால் இரு முக்கிய கூட்டங்கள் நடத்தப்பட்டன.

இக்கூட்டங்களில் 'பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமும் மனித பாதுகாப்பும்', 'தென் ஆசியாவில் மக்களின் கூட்டாச்சியை நோக்கி' போன்ற தலைப்புக்களில் விவாதங்கள் இடம்பெற்றன.

கூட்டங்களில் பல அனைத்துலக மனித உரிமையாளார்கள், பேராசிரியர்கள், அரசியல்வாதிகள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள், ஐரோப்பா, பிரித்தானியா, அமெரிக்கா, ஆசியா, ஆபிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வருகை தந்து உரையாற்றியிருந்தனர்.




இதில் மனித உரிமை மீறல், சுயநிர்ணய உரிமை போன்ற விடயங்கள் வேறுபட்ட விவாதங்களுடன் ஆராயப்பட்டன.

இந்த நிகழ்ச்சிகளில் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களின் மிக நீண்டகால அங்கத்தவரும், தமிழர் மனித உரிமைகள் மையத்தின் பொதுச் செயலாளருமான ச.வி.கிருபாகரனும் உரையாற்றியிருந்தார்.

அத்துடன் பிரபல அரசியல் ஆய்வாளரும் இளைப்பாறிய சிவில் நிர்வாகியுமான வன்னித்தம்பி கனகரட்னம் மூத்த ஊடகவியலாளர் கனகரவி, எஸ்.ஜே.இமானுவேல் அடிகளாருடன் வேறு பல தமிழ்ப் பிரதிநிதிகளும் சமுகமளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைத் தமிழர்களையும், அவர்களது நலன்களையும் கைகழுவிவிட்டார் கருணாநிதி: பாமக ராமதாஸ்

இலங்கைத் தமிழர்களையும், அவர்களது நலன்களையும் கைகழுவிவிட்டார் கருணாநிதி: பாமக ராமதாஸ்

[ செவ்வாய்க்கிழமை, 24 மார்ச் 2009, 01:50.15 AM GMT +05:30 ]

இலங்கைத் தமிழர்களையும், அவர்களது நலன்களையும் கை கழுவிவிட்டார் கருணாநிதி என்று குற்றம் சாட்டியுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். இது தொடர்பாக ராமதாஸ் அவர்கள் நேற்று திங்கட்கிழமை ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

திங்கட்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

இலங்கை இனப் படுகொலைப் போரைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுங்கள் என்ற உலகத் தமிழர்களின் குரல் இப்போதுதான் உலக நாடுகளின் காதுகளில் எட்டத் தொடங்கி இருக்கிறது.

அதன் விளைவாக, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா போன்ற நாடுகள் போரை நிறுத்தும்படி ஓங்கி குரல் கொடுக்கத் தொடங்கி இருக்கின்றன.
வெறும் மனிதாபிமான அடிப்படையில், உலக நாடுகள் செயல்படத் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில் ஈழத் தமிழர்களைப் பாதுகாப்பதில் உணர்வுபூர்வமாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்திய அரசு இதுவரை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது.

ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கும் கடமையைத் தாமதமின்றி இந்திய அரசு ஆற்ற வேண்டும் என்று வலியுறுத்த வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், ""இலங்கை ஓர் இறையாண்மை மிக்க நாடு, அப்படி இறையாண்மை மிக்க ஒரு நாட்டின் மீது ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் அழுத்தத்தைக் கொடுக்க முடியுமே தவிர அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது'' என்ற ரீதியில் தமிழக முதல்வர் கூறியிருப்பது ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

இதற்கு மேல் எதுவும் செய்வதற்கில்லை என்று இலங்கைத் தமிழர்களையும், அவர்களது நலன்களையும் தமிழக அரசும், முதல்வரும் கை கழுவி விட்டனர் என்பதையே முதல்வர் கருணாநிதியின் கருத்து எடுத்துக் காட்டுகிறது.
இறையாண்மை மிக்க அண்டை நாட்டில் நடைபெறும் பயங்கர நிகழ்வுகளில், இந்தியா ஓரளவுக்கு மேல் தலையிட முடியாது என்ற தவறான கருத்து இதுவரை தில்லியில்தான் இருந்தது.

இப்போது, சென்னைக்கும் அது பரவிவிட்டது என்பதையே முதல்வரின் கருத்து எடுத்துக் காட்டுகிறது. ஒரு நாட்டின் இறையாண்மை என்பதில், அந்த நாட்டில் வாழும் எல்லா தரப்பு மக்களையும், பாதுகாப்பதற்கான முதன்மையான பொறுப்பு அடங்கி இருக்கிறது.

இதனை பல ஆண்டுகளுக்கு முன்பே ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தி இருக்கிறது. ஒரு நாட்டின் அரசு திட்டமிட்டு மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் விளைவாக, இனப் படுகொலை செய்யும் நோக்கில் அல்லது வேறு நோக்கில் பெருமளவு உயிரிழப்பு ஏற்படும்போது அல்லது ஏற்படலாம் என்று சந்தேகப்படும்போது, இதர நாடுகளின் போர்ப் படையின் தலையீடும் அவசியமாகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை வகுத்துத் தந்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

உள்நாட்டுப் போர், கலகம், அடக்குமுறை அல்லது அரசின் தோல்வியின் விளைவாக மக்கள் துன்பப்பட்டால், சம்பந்தப்பட்ட நாடு, அதைத் தடுக்க அல்லது தவிர்க்க விரும்பவில்லையானால் அல்லது இயலவில்லையானால் அங்கு தலையிடாமைக் கொள்கை என்பது பாதுகாப்பதற்கான பன்னாட்டுப் பொறுப்புக்கு வழிவிட்டு விலகுகிறது என்றும் ஐக்கிய நாடுகள் சபை சாசனத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில்தான் இதுவரையில் உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு நாடுகள் தலையிட்டு இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்தி இருக்கின்றன.

இலங்கை அரசின் பொருளாதாரத் தடையினால், ஈழத் தமிழர்கள் பட்டினியால் வாடியபோது, இந்தியா தனது போர் விமானங்களை அனுப்பி, உணவுப் பொருள்களை விநியோகம் செய்திருக்கிறது.

ஈழப் போராளிக் குழுக்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. அவையெல்லாம், இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில்தான். அப்போதெல்லாம், இலங்கை ஒரு இறையாண்மை மிக்க நாடு என்று இந்தியா கருதவில்லை.

ஈழத் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்தியா அப்போது செயல்பட்டது. அத்தகைய உணர்வும், துணிச்சலும் இப்போது இந்திய அரசுக்கு வேண்டும்.

அத்தகைய உணர்வை இந்திய அரசு பெறவும், துணிச்சலோடு செயல்படவும் தமிழக அரசும், முதல்வரும் குரல் கொடுக்க வேண்டும்.

போரை நிறுத்தாவிட்டால் காமன்வெல்த் போன்ற அமைப்புகளில் இருந்து இலங்கையை வெளியேற்ற வேண்டும் என்ற குரல் இப்போது பிரிட்டனில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இத்தகைய நடவடிக்கைகளுக்கு இந்தியா துணை நிற்க வேண்டும்'' என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பா.நடேசன் வழங்கிய நேர்காணலின் முக்கிய பகுதிகள்:

இந்தியாவின் நலன்களுக்கு எதிராக நாம் ஒருபோதும் செயற்பட்டதில்லை; இந்தியா எம்மோடு இருக்க வேண்டும்: பா.நடேசன்

[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2009, 04:50.41 PM GMT +05:30 ]

இந்தியாவின் நலன்களுக்கு எதிராக நாம் ஒருபோதும் செயற்பட்டதில்லை; அவ்வாறு செயற்படும் நோக்கமும் எமக்கு கிடையாது; இந்தியா எமக்கு அருகில் இருந்து தமிழர் பிரச்சினையில் தலையிட வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்தியாவில் இருந்து ஒளிபரப்பாகும் சி.என்.என் ஐ.பி.என் தொலைக்காட்சிக்கு

பா.நடேசன் வழங்கிய நேர்காணலின் முக்கிய பகுதிகள்:

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிக்கியுள்ள மக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு விடுதலைப் புலிகள் தடையாக இருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவிப்பது தொடர்பாக உங்களின் கருத்து என்ன?

முதலில், 'சிக்கியுள்ள மக்கள்' என்ற சொல் பயன்படுத்தப்படுவது முறையானது அல்ல. இது அவர்களின் நிலம் அவர்கள் தலைமுறை தலைமுறையாக அங்கு வாழ்ந்து வருகின்றனர். சிறிலங்கா அரசு அந்த மக்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து துரத்தும் வரை அங்கு மக்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள். அவர்கள் 'சிக்கியுள்ள மக்கள்' அல்ல. தமது பழைய வாழ்க்கையை மீண்டும் பெற்றுக்கொள்ள அவர்கள் போராடி முயற்சித்து வருகின்றனர்.

பிரபாகரன் இப்போது எங்கே இருக்கின்றார் என்பதை உறுதிப்படுத்த முடியுமா?

நீங்கள் தெரிவித்ததை போல அவை வதந்திகள் தான். தலைவர் இங்கு எமது மக்களுடன் தான் வாழ்கின்றார் என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்.

தற்போதைய சிக்கலில் இந்தியாவின் நிலைப்பாட்டை விடுதலைப் புலிகளால் மாற்ற முடியுமா? இது தொடர்பாக உங்களின் கருத்து என்ன?

இந்தியாவின் நலன்களுக்கு எதிராக நாம் எப்போதும் செயற்பட்டதில்லை, அவ்வாறு செயற்படும் நோக்கமும் எமக்கு கிடையாது. இந்தியாவின் தென்முனையினது பாதுகாப்பு, தமிழீழ மக்களின் அரசியல் நல்வாழ்வோடும் பாதுகாப்போடும் தான் பின்னிப் பிணைந்துள்ளது.

இந்திய அரசின் அதிகாரிகளை சந்தித்து பேச்சுக்களை நடத்துவதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் விரும்புவாரா?

நிபந்தனைகள் அற்றதும், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளை உள்ளடக்கிய அரசியல் தீர்வை கொண்டதுமான பேச்சுக்களில் ஈடுபட நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம்.

இந்த பிராந்தியத்தின் வலிமை மிக்க நாடு இந்தியா. அது எங்களின் நண்பன். இந்தியா எப்போதும் எமது பக்கத்தில் இருந்து தமிழர் பிரச்சினையில் தலையிட வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.

தமிழகத்தின் அரசியல் தலைவர்கள் ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினையை தமது அரசியல் நலன்களுக்கு பயன்படுத்தி வருவதாக விடுதலைப் புலிகள் கருதுகின்றார்களா?

உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பாக எல்லாக் கட்சிகளும் மாறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருப்பது உண்டு. ஆனால், அவை தொடர்பாக நான் கருத்துக் கூறுவது பொருத்தமானதாக இருக்காது. இருந்த போதும் ஈழத் தமிழ் மக்களுக்காக எல்லா தமிழக மக்களும் ஒன்றிணைந்து இருப்பது தமிழீழ மக்களுக்கு மகிழ்வைத் தருகின்றது.

இன்று ஈழத் தமிழ் மக்களின் பலமாக இருப்பது தமிழக மக்களினதும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களினதும் ஆதரவுகள் தான் என்றார் பா.நடேசன்.

இலங்கை போர் நிறுத்தத்துக்கு இணங்காவிடில்

இலங்கை போர் நிறுத்தத்துக்கு இணங்காவிடில் பொதுநலவாய அமைப்பில் இருந்து இடைநிறுத்த வேண்டும்: பிரிட்டன் எம்பி் எம்.பி.ஜோவான் ரியான்

[ திங்கட்கிழமை, 23 மார்ச் 2009, 02:53.11 AM GMT +05:30 ]

விடுதலைப் புலிகள் தரப்பில் விடுக்கப்பட்டுள்ள போர் நிறுத்தக் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாவிடில், அந்த நாட்டை பொதுநலவாய அமைப்பில் இருந்து இடைநிறுத்தி வைக்க வேண்டும் என்று தொழிற்கட்சி எம்.பி யான யோவான் றியான், பிரதமர் கோர்டன் பிறவுனிடம் கேட்டுள்ளார்.
லண்டனிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தாம் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறியுள்ளார்.

அவர்களின் (புலிகளின்) கோரிக்கையை ஏற்று 24 மணி நேரத்துக்குள் போர் நிறுத்தம் குறித்து இலங்கை அரசாங்கம் அறிவிக்காவிட்டால், அந்த நாட்டை பொதுநலவாய அமைப்பில் இருந்து இடைநிறுத்த வேண்டும் என்று ஆளுங்கட்சியைச் சேர்ந்த யோவான், பிரதமருக்கு அவரசக் கடிதம் ஒன்றை நேற்று அனுப்பி வைத்தார்.

இதேவேளை, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை இலங்கை நிலைமை தொடர்பான விவாதம் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.

கொளத்தூர் மணி பேச்சு தடை செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

கொளத்தூர் மணி பேச்சு அடங்கிய டி.வி.டி. விற்பனை: தடை செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2009, 04:04.52 PM GMT +05:30 ]

பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் திண்டுல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் தேசிய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதாவதற்கு முன்பு கொளத்தூர்மணி பேசிய பேச்சுக்கள் டி.வி.டி. மற்றும் “சி.டி.”கேசட்டுகளாக தயாரிக்கப்பட்டு சேலம் மாவட்டம் கொளத்தூர், மேட்டூர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இலங்கையில் தமிழர்களை அழிக்க சிங்கள ராணுவத்துக்கு உதவி செய்த இந்திய (காங்கிரஸ்) அரசுக்கு எதிராக ஓட்டு போட வேண்டும் என்று கொளத்தூர் மணி பேசி உள்ளார்.

இந்த டி.வி.டி. மற்றும் சி.டி. கேசட்டுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக மேட்டூர் நகர காங்கிரஸ் தலைவர் வெங்கடேசுவரன் மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவானந்தத்திடம் ஒரு மனு கொடுத்து உள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல்லில் தந்தை பெரியார் திராவிட கழக தலைவர் கொளத்தூர்மணி தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக பேசிய பேச்சு அடங்கிய டி.வி.டி. சட்ட விரோதமாக வெளியிடப் பட்டு உள்ளது. இந்த டி.வி.டி. மேட்டூர் பகுதியில் உள்ள சில முக்கிய இடங்களில் விற்கப்பட்டு வருகிறது. எனவே பாராளுமன்ற தேர்தலை சீர்குலைக்கும் நோக்கத்தோடு விற்கப்படும் இந்த டி.வி.டி.க்களை உடனடியாக பறிமுதல் செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி உள்ளார்.

ஞாயிறு, 22 மார்ச், 2009

நவநீதம்பிள்ளை இன்று இந்தியாவுக்கு விஜயம்

நவநீதம்பிள்ளை இன்று இந்தியாவுக்கு விஜயம்

[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2009, 01:20.53 PM GMT +05:30 ]

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இரு நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தியா செல்கிறார்.
இலங்கையில் மோதல் பகுதிகளிலுள்ள மக்களின் மனித உரிமைகள் தொடர்பாக அண்மையில் கடுமையாக விமர்சித்திருந்த நவநீதம்பிள்ளையின் இந்திய விஜயம், அரசியல் அவதானிகளாலும் மனித உரிமை ஆர்வலர்களாலும் கூர்ந்து அவதானிக்கப்படுவதுடன் எதிர்பார்ப்புகளையும் தோற்றுவித்துள்ளது.

இலங்கையின் அயல்நாடும் பிராந்தியத்தில் வல்லரசுமான இந்தியாவுடன் இலங்கையின் மோதல் பகுதியில் சிக்கியுள்ள மக்களின் மனித உரிமைகள் , மனிதாபிமான நெருக்கடி என்பன தொடர்பாக இந்திய அதிகாரிகளுடன் நவநீதம்பிள்ளை ஆராய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது.

இந்த விஜயத்தின் போது தேசிய, பிராந்திய, சர்வதேச மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக அரசாங்க அதிகாரிகளுடனும் இந்திய மனித உரிமை ஆணைக்குழு பிரதிநிதிகளுடனும் விரிவான பேச்சுவார்த்தைகளை அவர் நடத்தவுள்ளதாக ஜெனீவாவிலுள்ள அவரின் அலுவலக உத்தியோகபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் உரிமைப்போர்





தமிழீழ விடுதலைப்புலிகளை அங்கீகரிக்கக் கோரி நியூசிலாந்தில் 'உரிமைப்போர்"

[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2009, 02:06.56 AM GMT +05:30 ]

தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் சர்வதேசம் அங்கீகரிக்கக்கோரி நியூசிலாந்தில் 'உரிமைப்போர்" நடாத்தப்பட்டுள்ளது.

ஒக்கிலாந்து நகரில் நேற்று சனிக்கிழமை (21.03.2009) நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மக்கள் பெரும் திரளாக வந்து தங்கள் உரிமைக்கான குரலை வெளிப்படுத்தினர்.

'தமிழீழ விடுதலைப் புலிகள் எமது பாதுகாப்பு அரண்"

'எமக்குத் தேவை தமிழீழம்"

'பிரபாகரன்தான் எமது தலைவர்"

என்ற பல கோசங்களையிட்டவாறு மக்கள் ஊர்வலத்தில் பங்குபற்றினர்.

இங்குள்ள சிங்களவர்கள், இது நடைபெறுவதற்கு முன்பதாக நியூசிலாந்தின் ஒக்கிலாந்து நகரத்தின் பிரதான வீதிகளில் தமது வாகனங்களில் சிங்கக் கொடியையும் நியூசிலாந்து கொடியையும் இணைத்தவாறு வலம் வந்தமை குறிப்பிடத்தக்கது.

நியூசீலாந்து தமிழ் மக்கள் இந்த 'உரிமைப்போரில்" , தாயகத்தில் உணவு மருந்து வசதி இன்றி அல்லல்படும் மக்களின் அவலத்தையும் போரின் கொடுமைகளையும் சித்தரிக்கும் புகைப்படங்களையும் பதாகைகளையும் கொண்டுசென்றனர்.

நியூசீலாந்தே எமக்கு உதவு" 'உலகமே எமக்குத் தேவை சமாதானம்" எனவும் கோசமிட்டனர். இதில் பங்குபற்றிய நியூசீலாந்துவாழ் தமிழ் மக்கள் முதன்முறையாக நூற்றுக்கும் மேற்பட்ட தமிழீழத் தேசியக்கொடிகளை ஏந்தியவாறு பங்குபற்றியமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இங்குள்ள வேறு இனத்தவர்களும் இவர்களுடன் இணைந்துகொண்டு தங்கள் ஆறுதலைiயும் ஆதரவையும் தெரிவித்தனர். பேரணியின் இறுதியின்போது, நியூசீலாந்து தமிழ் சங்கம் சார்பாக டாக்டர். சிவா வசந்தன் உரையாற்றினார்: 'ஐ.நா இன் செயலாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை சிங்கள அரசை உலுக்கியுள்ளது.

அதனால், அனைத்து நாடுகளிலுமுள்ள சிங்களவர்களை எமது போராட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்குமாறு வற்புறுத்தி வருகிறது. இதனை நாம் எம் கண்முன்னே காணுகிறோம். எனவே, புலம்பெயர் தமிழ் மக்கள் இன்னும் விழிப்புணர்வு அடைந்து எமது விடுதலைப் போராட்டத்திற்கு பக்கபலமாக நின்று தமிழீழத்தை வென்றெடுக்கவேண்டும். இந்திய அரசு ஏப்பிரல் 14 ஆம் திகதிக்கு முன் போரை முடிவுக்குக் கொண்டுவரக் கேட்டுக்கொண்டதையடுத்து சிங்கள அரசு கொடூரமாக மேலும் பொதுமக்களை தாக்கி வருகிறது.

இதனால், இன்னும் நாம் எமது போராட்டங்களை வலுப்பெறச்செய்து நியூசீலாந்து மற்றும் வெறிநாடுகளின் கவனத்தையீர்த்து 'தமிழீமே" எமக்கு உண்மையான விடுதலையைப் பெற்றுத்தரும் என அவர்களை உணரச் செய்யவேண்டும். புலம்பெயர் வாழ் தமிழரிலேயே எமது தமிழீழ விடுதலையின் வெற்றியும் பலமும் தங்கியுள்ளது" என்றார்.

இவரைத் தொடர்ந்து, மகளிர் அணி சார்பாகப் பேசிய திருமதி நர்மதா : 'தமிழர்கள் பலம்பெற்ற இராச்சியங்களைக்கொண்டு சுயநிர்ணய உரிமையோடு சுதந்திரமாக வாழ்ந்த வரலாற்றைக்கொண்டவர்கள். அந்த வரலாற்றை மீளவும் பெறுவதற்கு எமது தேசியத் தலைவர் வே.பிரபாகரன் தலைமையில் தமிழீழம் பெறவேண்டும்" என்றார்.

கொழும்பு துறைமுகப் பகுதியில் பாரிய குண்டுச் சத்தங்கள்

கொழும்பு துறைமுகப் பகுதியில் பாரிய குண்டுச் சத்தங்கள்:

மக்கள் பதற்றம்; கடற்படை ஒத்திகை என தெரிவிப்பு

[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2009, 02:25.41 AM GMT +05:30 ]

கொழும்பில் இன்று காலையில் பாரிய குண்டுச் சத்தங்களும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் துறைமுகப் பகுதியில் கேட்டவண்ணம் இருந்தன. மக்கள் ஏதோ தாக்குதல் நடைபெறுகின்றது என பதற்றமடைந்தனர். சற்றுநேரத்தின் பின் கடற்படையினரின் ஒத்திகை என அறிவிகககப்பட்டது. இதன் பின்னர்தான் மக்களின் பதற்றம் தணிந்தது.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 6:30 மணி தொடக்கம் சுமார் 7.15 மணி வரை தொடர்ச்சியாக இந்தச் சத்தங்கள் கேட்டன.

கொழும்புத் துறைமுகத்தை அடுத்துள்ள பகுதிகளில் திடீரென கடற்படையினரும் குவிக்கப்பட்டு வீதிகளும் மூடப்பட்டிருந்தன.

கொழும்பு துறைமுகத்தின் மீது தாக்குதல் ஒன்று மேற்கொண்டால் அதனை எவ்வாறு முறியடிப்பது என்பது குறித்து போர் ஒத்திகை ஒன்றே நடைபெற்றதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக தெரியவந்தது.

நிபந்தனைகளற்ற பேச்சுவார்த்தை

அரசாங்கத்துடன் நிபந்தனைகளற்ற பேச்சுவார்த்தை நடத்த தமிழீழ விடுதலைப் புலிகள் தயார் - பா.நடேசன்

[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2009, 09:33.18 AM GMT +05:30 ]

அரசாங்கத்துடன் நிபந்தனைகள் எதுவுமின்றி பேச்சுவார்த்தை நடத்த தமிழீழ விடுதலைப் புலிகள் தயாராக உள்ளதாக புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இங்கிலாந்திலிருந்து வெளியாகும் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த செவ்வியின் போது தெரிவித்துள்ளார்.
உடனடியாக யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்த அவர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வதன் காரணமாகவே தம்மை ஒர் தடை செய்யப்பட்ட இயக்கமாக பிரித்தானியா அறிவித்துள்ளதென குறிப்பிட்டார்.

நாள்தோறும் மேற்கொள்ளப்படும் வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களினாலும், மனிதாபிமான உதவிகளை வழங்க அனுமதியளிக்கப்படாமை சிவிலியன்கள் பேரவலங்களை எதிர்நோக்கி வருவதாகவும் இதனால் சிவிலியன் பாதுகாப்பை கருத்திற் கொண்டு தெளிவாகவும் உரக்கவும் யுத்த நிறுத்த கோரிக்கையை உலகின் முன் வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனித் தமிழீழம் குறித்து நடத்தப்படும் வெகுசன வாக்கெடுப்பில் மக்கள் அளிக்கும் எந்தவொரு தீர்ப்பிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் பூரணமாக தலைசாய்க்கத் தயார் என நடேசன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் நிலவரம் குறித்து சர்வதேச சமூகம் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய காலம் உதயமாகியுள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலனாய்வுப் பிரிவின் முக்கிய செய்தி

பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய விடுதலைப் புலித் தலைவர்கள் முல்லைத்தீவில்

[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2009, 08:41.12 AM GMT +05:30 ]

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், கடற்படைத் தளபதி சூசை மற்றும் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் பொட்டு அம்மான் ஆகிய முக்கிய தலைவர்கள் முல்லைத்தீவில் மறைந்திருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாயராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலித் தலைவர்கள் மோதல் தவிர்ப்பு வலயத்தில் சஞ்சரித்தமையை பொதுமக்கள் அவதானித்துள்ளதாக இராணுவ தகவல்கள் குறிப்பிடுகின்றன.

விடுதலைப் புலிகளிடமுள்ள பகுதிகளை பூரணமாக மீட்டெடுப்பது குறித்த கால வரையறைகளை வெளியிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் ஓரிரு வாரங்கள் அல்லது மாதங்களில் விடுதலைப் புலிகளிடமிருந்து முற்றாக பகுதிகளை மீட்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஈழத்தமிழருக்காக மேலும் ஒரு தேமுதிக பிரமுகர் தீக்குளித்து மரணம்

ஈழத்தமிழருக்காக மேலும் ஒரு தேமுதிக பிரமுகர் தீக்குளித்து மரணம்

[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2009, 09:14.14 AM GMT +05:30 ]

புதுக்கோட்டை மாவட்டம் கொத்த மங்களம பகவான் தெருவைச் சேர்ந்தவர் பால சுந்தரம். 35 வயதான இவர் தேமுதிகவின் கிளைச்செயலாளராக உள்ளார். சமையல் தொழிலாளியான இவர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்று எந்தக் கட்சி சார்பில் நடந்தாலும், கட்சி பாகுபாடின்றி கலந்து கொள்வார்.
கீரமங்கலம், கொத்தமங்களம், வடகாடு ஆகிய ஊர்களில் ஈழத்தமிழர்ளின் அவல நிலையை விளக்கும் தட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அனுமதி பெற்று வைக்கப்பட்டிருந்த இந்த தட்டிகளை காவல்துறையினர் அகற்றினர். இதை தாக்க முடியாத பால சுந்தரம், தனது கட்சிகாரர்களிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக ஈழத்தமிழர்களின் நிலைமை குறித்து தனது குடும்பத்தாரிடமும், கட்சிக்காரர்களிடம் கவலை தெரிவித்து வந்த பாலசுந்தரம், இன்று மதியம் 12 மணி அளவில், தனது வீட்டிற்கு வெளியே ஓடிவந்து மண்ணெண்ணெய்யை தனது மேல் ஊற்றி தீயிட்டுக்கொண்டார்.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் பாலசுந்தரத்தை காப்பற்ற முயன்றனர். ஆனால் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மரணம் அடைந்த பாலசுந்தரம் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக கொத்தமங்களலத்தில் வைக்கப்பட்டுள்ளது. பாலசுந்தரம் உடலுக்கு தமிழின உணர்வாளர்கள், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இலங்கையில் போரில் இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை



இலங்கையில் போரில் இறந்த பொதுமக்களின் எண்ணிக்கை விவர ஐ.நா. ஆவணம் வெளியிடப்பட்டது

[ ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2009, 02:13.31 AM GMT +05:30 ]

இலங்கையில் இவ்வருடம் ஜனவரி 20ஆம் திகதியில் இருந்து மார்ச் 7ஆம் திகதி வரையில் 2683 பொதுமக்கள் கொல்லப் பட்டுள்ளார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை தனது அறிக்கை ஒன்றில் தெரிவித் திருக்கின்றது.

ஐ.நாவின் ஆவணம் ஒன்று தற்செய லாக (உத்தியோகபூர்வமற்ற வகையில்) வெளிப்பட்டுவிட்டதில் இந்த விவரம் காணப்படுகிறது. இன்னர் சிற்றி பத்திரிகையில் இந்த ஆவணம் வெளியிட்டுள்ளது.

இப்போது இந்த ஆவணம் பல பாதுகாப்பு சபையில் அங்கம் வகிக்கும் இராஜதந்திரிகள், தூதுவர்கள் கைகளிலும் மூத்த ஐ.நா. அரசியல் மற்றும் மனித உரிமை அதிகாரிகளின் கைகளுக்கும் கிடைத்துள்ளது. வன்னிப் போரினால் பொதுமக்கள் இறந்ததற்காக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் தெரிவித்த தகவலை கொழும்பில் மனித உரிமைகள் அமைச்சர் மறுத்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அண்மையில் ஐ.நா. மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை விடுத்த ஓர் அறிக்கையில் இலங்கையில் அரசாங்கமும் தமிழ்ப் புலிகளும் போர்க்குற்றங்கள் புரிந்திருப்பதற்கு சாத்தியம் என்ற வகையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

போர்க்குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடுக்க இயலாது.

நவநீதம் பிள்ளையின் அறிக்கையின் அடிப்படையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இலங்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசித்து வருகின்றீர்களா என்று அந்த நீதிமன்றத்தின் வழக்குத் தொடுனரான லூயிஸ் மோரேனோ ஏகாம்போவிடம் இன்னர் சிற்றிப் பிளேஸ் செய்தியாளர் கேட்டார்.

ஒகாம்போ அதற்கு பதிலளிக்கையில் அவர்கள் சர்வதேச நீதிமன்றத்துக்குக் கட்டுப்பட்ட தரப்பினராக இல்லை என்றார்.

மேலும் மிக அண்மையில் தாம் ஆபிரிக்காவில் மாத்திரமே போர்க்குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கு முயற்சிப்பதாக ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் தம்மீது குற்றஞ்சாட்டியிருந்தாகக் கூறினார்.

இலங்கையில் போர்க் குற்றங்கள் தொடர்பான நவநீதம்பிள்ளையின் குற்றச்சாட்டுகளை அடுத்து இலங்கை தொடர்பான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கோப்பு ஒன்றை அல்லது விவர ஆவணம் (Data Base) ஒன்றைத் திறந்திருக்கிறது என்ற தகவலை ஒகாம்போவுடன் பிரயாணங்களில் ஈடுபடும் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அலுவலர் ஒருவர் இன்னர் சிற்றி பத்திரிகைக்குத் தெரிவித்தார்.

ஆனால் இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்புரிமை பெற்றிருக்காமையால் சட்ட சிக்கல்கள் ஏற்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

மேலும் பாலஸ்தீனியர்களைப் போன்று இலங்கைத் தமிழர்கள் தமக்கு நியாயாதிக்கம் அதாவது சட்டப் பாதுகாப்பு (Jurisdiction) வழங்கும்படியாகவும் கூட இன்னும் ஒரு கோரிக்கையை முன்வைத்திருக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியல் ஆவேசங்கள்




அரசியல் ஆவேசங்கள்

தமிழ்நாட்டுத் தலைவர்கள் சிலர் தில்லிக்கு வந்ததோ, பாராளுமன்றத்தின் முன் இலங்கைத் தமிழர் சார்பாகக் கோஷமிட்டதோ தில்லி தினசரிகளில் முக்கியத்துவம் பெறவில்லை. அதை வேடிக்கை பார்க்கக்கூட தெருவில் யாருமில்லை.

- வாஸந்தி


இலங்கையா? இலங்கைத் தமிழரா? தாடி பற்றி எரியும்போது பீடிக்கு நெருப்புக் கேட்ட கதையாக, தமிழ்நாடு சம்பந்தமே இல்லாத ஒரு பிரச்சினையை முன்னிறுத்துவதாக வடக்கில் தோற்றம் ஏற்படுத்திற்று. இலங்கையில் நடக்கும் போருக்கு இந்தியா உதவுவதாகத் தமிழகத் தலைவர்கள் சொல்வது சரியான கேலிக்கூத்து என்றார் ஒரு அரசு அதிகாரி என்னிடம்.வட கிழக்கு எல்லையைப் பாதுகாக்கவும், பயங்கரவாதத்தை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபடவுமே நமது ராணுவத் தளவாடங்கள் போதாமையில் திண்டாடும்போது இலங்கையில் நடக்கும் உள்நாட்டுப் போரில் ஈடுபட நமக்குப் பைத்தியமா என்றார். அப்பாவித் தமிழருக்கு உதவ நம்மால் இயன்ற அளவுக்கு மருந்தும் மருத்துவமும் உணவுப் பொருளும் அனுப்புகிறோம். இதற்கு மேல் என்ன செய்யமுடியும்? இருக்கிற தலைவலி போதாது என்று இலங்கையுடன் சண்டைக்குச் செல்ல முடியுமா? தமிழ்நாட்டுத் தலைவர்கள் சிலர் தில்லிக்கு வந்ததோ, பாராளுமன்றத்தின் முன் இலங்கைத் தமிழர் சார்பாகக் கோஷமிட்டதோ தில்லி தினசரிகளில் முக்கியத்துவம் பெறவில்லை. அதை வேடிக்கை பார்க்கக்கூட தெருவில் யாருமில்லை. மரியாதை நிமித்தம் வந்தவர்களை சோனியா காந்தி சந்தித்தார். 40 சீட்டின் பலத்துடன் செல்வாக்குடன் இருக்கும் கூட்டணி நண்பரான கருணாநிதிக்கே எதுவும் செய்யமுடியாமல் போனபோது இவர்களால் என்ன சாதிக்கமுடியும்?

சாமானியன் எட்ட முடியாத உயரத்துக்கு ஆசைப்படமுடியாது என்கிற அர்த்தத்தில் வடக்கத்தியர்கள் சொல்வார்கள் -"தில்லி பஹுத் தூர் ஹை!" [தில்லி இருப்பது வெகு தூரம்!] முகலாயர்கள் தில்லியை ஆண்ட காலத்தில் அந்தச் சொற்றொடர் ஏற்பட்டிருக்கும். சாமானியன் அதிகாரவர்க்கத்துடன் உறவோ நெருக்கமோ வைத்துக்கொள்வது இயலாது என்கிற நிதர்சனப் புரிதல் அது. சமீபத்தில் பத்து நாட்கள் தில்லிக்குச் சென்று வந்ததில் ஒன்று துல்லியமாக விளங்கிற்று. யாருக்கு 'தில்லி பஹுத் தூர் ஹை'யாக இருக்கிறதோ இல்லையோ சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகளுக்குப் பின்னும் தமிழ் நாட்டவருக்கு தில்லி வேறு உலகம்.

அதன் மறுபக்கமாக இப்படியும் சொல்லலாம். வடக்கிற்குமட்டுமல்ல, இந்தியாவின் மற்றப் பாகங்களுக்கு தமிழ்நாடு வேறு உலகம். அது வெளிப்படுத்தும் ஆவேசங்கள் புரிந்து கொள்ள முடியாதவை. சம்பந்தமில்லாதவை. நான் அங்கு இருந்த பத்து நாட்களில் தமிழ்நாடு அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்த விஷயம் எந்த தேசிய தினசரியிலும் வரவில்லை. வழக்கறிஞர்களின் போராட்டத்தைத்தவிர. அங்கு நான் சந்தித்த எல்லாருமே அவர்களது செயலைக் கண்டித்து தமிழ்நாட்டின் நீதித்துறை இந்த அளவுக்குத் தரமிறங்கிப் போயிற்றா என்று அதிர்ச்சியையும் சலிப்பையும் வெளிப்படுத்தினார்கள்.

எல்லா பத்திரிகையும் தினசரியும் ஸ்ரீ கிருஷ்ணா மிக மரியாதைக்குரியவர், அவர் சொல்லையும் எதிர்ப்பார்களா என்கிற கருத்தைத் தெரிவித்தன. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகத் தமிழ் நாட்டில் எல்லாக் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு தினம் ஒரு போராட்டமும் ஊர்வலமுமாகச் சென்று கொண்டிருந்தது அதீதமானதாக, பொறுப்பற்றதாக, கவனம் பெறவேண்டிய முக்கியத்துவம் அற்றதாகக் கருதப்பட்டுவிட்டதாகத் தோன்றிற்று.

தமிழகத்து அரசியல் பாசாங்குத்தனம் இனம் கண்டு கொள்ளப்பட்டுவிட்டதாக செய்திகள் ஓரங்கட்டப்பட்டன.

தில்லியில் தலைவர்களைக் கவலையில் ஆழ்த்தும் விஷயங்கள் ஏராளம். இந்திய எல்லையைத் தொட்டுக்கொண்டிருக்கும் பாகிஸ்தானில் நடக்கும் அரசியல் அதிர்வுகள் எல்லாமே இங்கு நேரடியான அதிர்வு தரக்கூடிய விஷயம். மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. நாம் எடுக்கும் முயற்சிகளுக்கெல்லாம் பாகிஸ்தான் அரசு சால்ஜாப்பு சொல்லி நழுவுகிறது. அங்கு யாரிடம் உண்மையான அதிகாரம் இருக்கிறது என்று புரியவில்லை. இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் இருப்பதாக இந்தியா டுடே Conclave அமர்வுக்கு வந்து உரையாற்றிய பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃப் குண்டைத் தூக்கிப்போட்டார். அதோடு காஷ்மீர் மக்களுக்கு விடுதலை கிடைக்கும் வழியினாலேயே இந்திய- பாக் பிரச்சினை தீரும் என்று பழைய பல்லவி பாடினார். அது இரண்டு நாட்களுக்கு எல்லாத் தொலைக்காட்சிச் சானல்களிலும் அலசப்பட்டது.

இதற்கிடையில் பாராளுமன்ற தேர்தலுக்கு நாள் குறிக்கப்பட்டுவிட்ட சேதி வந்தது. நிமிஷத்துக்கு நிமிஷம் எல்லா சானல்களிலும் அதைப் பற்றின அலசல். விவாதங்கள். தொட்டுக்கொள்ள பாகிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் அரசியல் கொந்தளிப்பு, மீண்டும் அங்கு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றுமோ, ஜர்தாரி தலைமறைவாகிவிட்டாரா என்ற பரபரப்பான செய்தி. பங்களாதேசத்தில் ராணுவத்தில் கலகம். தரம்சாலாவில் தலாய்லாமா இந்திய அடைக்கலம் கேட்டு வந்து அறுபது ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி மாபெரும் கூட்டம். உணர்ச்சிபெறுக்கெடுக்கும் புலம்பெயர்ந்தவர்களின் பேச்சுகள்.

இலங்கையா? இலங்கைத் தமிழரா? தாடி பற்றி எரியும்போது பீடிக்கு நெருப்புக் கேட்ட கதையாக, தமிழ்நாடு சம்பந்தமே இல்லாத ஒரு பிரச்சினையை முன்னிறுத்துவதாக வடக்கில் தோற்றம் ஏற்படுத்திற்று. இலங்கையில் நடக்கும் போருக்கு இந்தியா உதவுவதாகத் தமிழகத் தலைவர்கள் சொல்வது சரியான கேலிக்கூத்து என்றார் ஒரு அரசு அதிகாரி என்னிடம். வட ,வட கிழக்கு எல்லையைப் பாதுகாக்கவும், பயங்கரவாதத்தை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபடவுமே நமது ராணுவத் தளவாடங்கள் போதாமையில் திண்டாடும்போது இலங்கையில் நடக்கும் உள்நாட்டுப் போரில் ஈடுபட நமக்குப் பைத்தியமா என்றார். அப்பாவித் தமிழருக்கு உதவ நம்மால் இயன்ற அளவுக்கு மருந்தும் மருத்துவமும் உணவுப் பொருளும் அனுப்புகிறோம். இதற்கு மேல் என்ன செய்யமுடியும்? இருக்கிற தலைவலி போதாது என்று இலங்கையுடன் சண்டைக்குச் செல்ல முடியுமா? Give me a break!

தமிழ்நாட்டுத் தலைவர்கள் சிலர் தில்லிக்கு வந்ததோ, பாராளுமன்றத்தின் முன் இலங்கைத் தமிழர் சார்பாகக் கோஷமிட்டதோ தில்லி தினசரிகளில் முக்கியத்துவம் பெறவில்லை. அதை வேடிக்கை பார்க்கக்கூட தெருவில் யாருமில்லை. மரியாதை நிமித்தம் வந்தவர்களை சோனியா காந்தி சந்தித்தார். 40 சீட்டின் பலத்துடன் செல்வாக்குடன் இருக்கும் கூட்டணி நண்பரான கருணாநிதிக்கே எதுவும் செய்யமுடியாமல் போனபோது இவர்களால் என்ன சாதிக்கமுடியும்? பிரச்சினை வெளியுறவு சம்பந்தப்பட்டது. பாகிஸ்தான் நமது வாசலை இடிக்கப் பார்க்கும்போது, பயங்கரவாதத்தைப் பரப்பி காஷ்மீரில் சில்மிஷம் செய்யும் போது, இலங்கையில் நாம் குறுக்கிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனநாயக அரசை எந்த வகையிலும் நிர்ப்பந்திக்கமுடியாது என்று சொல்லப்பட்டது. அப்பாவித் தமிழர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப் படவேண்டும் என்று நமது கருத்தை வலியுறுத்துவதைத் தவிர வேறு எதுவும் செய்வது இயலாது என்று உணர்த்தப்பட்டது.

சோனியாகாந்தியின் பேச்சு தனக்குத் திருப்தி அளிக்கவில்லை என்று காட்டமாகச் சொன்ன பா.ம.க. தலைவர், தமிழனின் உணர்வைப் புரிந்துகொள்ளாத அரசில் தொடர்ந்து மந்திரிப் பதவி வகிக்க வேண்டாம் என்று மகன் அன்புமணியிடம் சொன்னாரா? ரோசம் எல்லாம் தமிழகத்து வீதிகளில் உரத்துக் கத்தும் கோஷங்களில் தான். அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இலங்கைத் தமிழரின் பிரச்சினையே முக்கியமாக முன்னிறுத்தப்படும் என்று எல்லாக் கட்சிகளும் சவால் விடுகின்றன. எல்லாரும் இன்று தமிழினத் தலைவர்கள். திராவிடப் போராட்டம் துவங்கிய காலத்திலிருந்து காங்கிரஸ்ஸுக்கு எதிராகக் கொடிபிடித்து, பிரிவினை கோஷமெழுப்பி, ஹிந்தி ஒழிக என்று நாடே அதிர கூக்குரலிட்டு, தண்டவாளத்தில் படுத்து மறியல் செய்து, ஆட்சியைப் பிடித்து திராவிட ஆட்சியை ஆரம்பித்து, தமிழகத்தில் காங்கிரஸ்ஸின் மீள் வரவுக்கு சமாதிகட்டிய கட்சியின் தலைவரும், தமிழினத்தலைவர் என்று வரலாறு சொல்லும் என்ற நம்பிக்கையில் இருந்தவருமான கருணாநிதியை இன்று ஒரு பார்ப்பனப் பெண், பரம வைரி ஜெயலலிதா, தமிழினத் துரோகி என்கிறார். அந்தச் சாடலே வரும் தேர்தலில் தனக்கு வெற்றியைக் கொடுக்கப் போகும் மந்திரச் சொல் என்று நம்புகிறார்.

கருணாநிதிக்கு, தினமும் ஜெயலலிதாவுக்கு முரசொலியில் மறுப்புச் சொல்வதும் 1981இல், 85இல், 95இல் 2001இல் ஜெயலலிதா என்ன செய்தார் என்ற புள்ளிவிவரம் கொடுப்பதுமே இடுப்பை ஒடிக்கிறது. காங்கிரஸ்ஸுடன் கூட்டணிசேர்ந்து நிறைய லாபம் பார்த்தாயிற்று. நடு ஆற்றிலிருந்து திரும்பமுடியாது. பாஜக பலமாக இல்லை. காங்கிரஸ் திரும்பினாலும் திரும்பலாம். அதனால் அணி மாற்றம் என்கிற பேச்சுக்கே இடமில்லை. கூட்டணி பலத்தைக் கூட்டுவது முக்கியம். அது இருந்தால் ஜெயலலிதா கொக்கரிக்கமுடியாது.தமிழகத்தில் எந்தத் தேர்தலானாலும் அவருக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே இருக்கும் விரோதமே முக்கியப் பிரச்சினையாக இருக்கும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முப்பது நாட்களில் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்போம் என்று இந்தச் சந்தையில் ஆசைகாட்டி கூப்பாடு போடுகிறது பாஜக. இலங்கைத் தமிழர் பிரச்சினை என்கிற தமிழக அரசியலின் கோஷமே ஒரு பம்மாத்து என்று தில்லி வட்டாரங்கள் நமக்கு முன்னால் புரிந்துகொண்டுவிட்டன.

விந்திய மலைக்கு அப்பால் இந்த கோஷங்கள் காதில் விழாது. மைய தேசியக் கட்சிகளுக்கு அவற்றைப்பற்றின எந்த அபிப்பிராயமும் இல்லை. கோஷம் எதுவானால் என்ன? எதைச்சொல்லியாவது வாக்கு கிடைத்தால் என்ன பிரச்சினை?

ஆங்கிலத்தில் 'disconnect' என்ற சொல் உண்டு. யதார்த்தத்திலிருந்து தொடர்பற்ற தன்மை. ஒரு பத்திரிகை நண்பர் ஒரு முறை சென்னையில் அங்கலாய்த்தார். தமிழ் அரசியல்வாதிகளுக்கும் பாமர மக்களுக்கும் இருக்கும் தொடர்பற்ற தன்மையைப் பற்றி. இன்றைய இளைஞர்களுக்கு தமது வாழ்க்கையில் முன்னேற என்ன வழி என்பது மட்டுமே பிரச்சினை. அதுவே அவர்களது இலக்கு. அவர்களது பார்வை இப்போது உலகளாவியது. தமிழ் நாட்டுக்கு அப்பால் விரிகிறது, சுய முன்னேற்றத்திற்காக. தமிழ்ப் பற்றோ வேறு எதுவோ அவர்களது agenda இல்லை. இந்த அரசியல்வாதிகள் யாரை ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்றார். இந்த'disconnect' ஏதாவது ஒரு ரூபத்தில் எல்லா மாநிலத்து எல்லா அரசியல்வாதிகளுக்கும் இருப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் தமிழ் நாடு ஒரு விதத்தில் தீவிரமாக முரண்படுகிறது.

மத்தியில் கூட்டணி ஆட்சி ஆரம்பித்த நாட்களிலிருந்து, நமது மாநிலக் கட்சிகள் வாய்ப்புக் கிடைத்த மாத்திரத்தில் மந்திரிப் பதவிக்குப் போட்டி போட்டுக்கொண்டு ஆட்சியில் பங்கு பெறுகின்றன. அதனால் பலவகையில் லாபம் கண்டிருக்கின்றன. தனி நபர்கள் அடைந்திருக்கும் செல்வாக்கு அளப்பற்றது. ஆனால் அது சொந்த லாபத்துக்கான குறுகிய நோக்கிலேயே நடந்த பங்காற்றல் என்று தெளிவாகிவிட்டது. தமிழ்நாட்டுக்கு வெளியே என்ன நடக்கிறதென்று யாருக்கும் அக்கறையில்லை. நாட்டைத் தாக்கும் அவசரப் பிரச்சினைகள் என்ன என்பதில் நாட்டமில்லை. அவற்றைத் தமிழ்த் தொலைக்காட்சி சானல்கள் விவாதிப்பதில்லை.

தேசிய நோக்கு, தேசப்பற்று என்பவை இன்று காலாவதியான கருத்தாக்கங்கள் என்றாலும் , மக்கள் நலன் என்பது கூட அவர்களுக்குக் காலாவதியான கருத்தாக்கமாகப் படுகிறது. பாமர அடிமை ஸாங்கோபான்ஸா சொல்லச் சொல்லக் கேட்காமல் அவனது எஜமானன் காற்றாலைகளை நான்கு கைகள் கொண்ட ராட்சசஸர்கள் என்று தாக்கச் சென்றதுபோல இலங்கைத் தமிழர் பிரச்சினை என்கிற அஸ்திரத்தை மாநிலப் பிரச்சினையாக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.யாருக்காக கோஷம் எழுப்புகிறார்களோ அவர்களுக்கு இதனால் ஏதும் லாபமில்லை என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இதனால் யாருக்கு நன்மை என்பது அவர்களுக்கும் சர்வ வல்லமை பொருந்திய ஈசனுக்குமே வெளிச்சம்.

மக்கள் வாக்கு மகேசன் வாக்கு என்றும் ஒப்புக்கொள்பவர்கள் இவர்கள். பின் , இத்தனைப் பாசாங்குத்தனம் செய்வதற்கு எப்படித் துணிகிறார்கள்? ஸான்கோபான்ஸாவின் எஜமானனுக்கும் [Don Quixote] இவர்களுக்கும் வித்யாசமில்லை.


நன்றி: உயிர்மை

சனி, 21 மார்ச், 2009

மாவீரர் நாள் உரை- மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்





உலக நாடுகள் எம்மீதான தடையை நீக்க வேண்டும்; இந்தியாவுடன் நட்புறவு:
தேசியத் தலைவர்
[வியாழக்கிழமை, 27 நவம்பர் 2008, 06:00 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்]
எம்மை தடை செய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டும் என்றும் இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம் என்றும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இன்று வியாழக்கிழமை ஆற்றிய மாவீரர் நாள் உரை:

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
நவம்பர் 27, 2008.

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!

இன்று மாவீரர் நாள்.

தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம் நினைவு கூர்ந்து கௌரவிக்கும் புனித நாள்.

ஆண்டாண்டு காலமாக அந்நிய ஆதிக்கப் பிடிக்குள் அடங்கிக்கிடந்த எமது தேசத்தை, ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிபணியாத அடங்கா மண்ணாக மாற்றிவிட்ட எமது வீரமறவர்களைப் பூசித்து வணங்கும் திருநாள்.

எமது தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாக, தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற சத்திய இலட்சியத்திற்காக மடிந்த எமது மான வீரர்களை எமது நெஞ்சப் பசுமையில் நிறுத்திக்கொள்ளும் தேசிய நாள்.

எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.

எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள்.

இந்த மண்ணிலேதான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்றும் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம் காலாதிகாலமாக,கொப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறது.

சிங்களத்தின் கனவுகள் நிச்சயம் கலையும்

எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள். அவர்கள் பள்ளி கொள்ளும் இந்த மண் எமக்கேயுரித்தான மண். எமக்கே சொந்தமான மண். இந்த வரலாற்று மண்ணை ஆக்கிரமித்து, அடக்கியாள சிங்களம் திமிர்கொண்டு நிற்கிறது; தீராத ஆசை கொண்டு நிற்கிறது.

மனித துயரங்களெல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஆசையின் பிடியிலிருந்து மீட்சி பெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபட முடியாது.

மண் ஆசை பிடித்து, சிங்களம் அழிவு நோக்கிய இராணுவப் பாதையிலே இறங்கியிருக்கிறது. உலகத்தையே திரட்டி வந்து எம்மோடு மோதுகிறது. இராணுவ வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது திண்ணம்.



எனது அன்பான மக்களே!

என்றுமில்லாதவாறு இன்று தமிழீழத் தேசம் ஒரு பெரும் போரை எதிர்கொண்டு நிற்கிறது. இப்போர் வன்னி மாநிலமெங்கும் முனைப்புப்பெற்று உக்கிரமடைந்து வருகிறது.

சிங்கள அரசு இராணுவத்தீர்வில் நம்பிக்கைகொண்டு நிற்பதால், இங்கு இப்போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து விரிவாக்கம் கண்டு வருகிறது. தமிழரின் தேசிய வாழ்வையும் வளத்தையும் அழித்து, தமிழர் தேசத்தையே சிங்கள இராணுவ இறையாட்சியின் கீழ் அடிமைப்படுத்துவதுதான் சிங்கள அரசின் அடிப்படையான நோக்கம்.

தனித்து நின்று போராடுகிறோம்

இந்த நோக்கத்தைச் செயற்படுத்தி விடும் எண்ணத்தில், தனது போர்த்திட்டத்தை முழுமுனைப்போடு முன்னெடுத்து வருகிறது. தனது முழுப் படை பலத்தையும் ஆயுத பலத்தையும் ஒன்றுதிரட்டி, தனது முழுத் தேசிய வளத்தையும் ஒன்றுகுவித்து, சிங்கள தேசம் எமது மண் மீது ஒரு பாரிய படையெடுப்பை நிகழ்த்தி வருகிறது.

சிங்கள இனவாத அரசு ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை வீரர்கள் வீராவேசத்தோடு போராடி வருகின்றனர்.

உலகின் பல்வேறு நாடுகளும் தமிழ் இன அழிப்புப் போருக்கு முண்டுகொடுத்து நிற்க, நாம் தனித்து நின்று, எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்று, எமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம்.

நெருக்கடிகள் நிறைந்த வரலாற்றுப் பயணம்

இன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம்.

எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களை எல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம்.

பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களை எல்லாம் தனித்து நின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம்.

இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்.



இந்த மண் எங்களின் சொந்த மண்

சிங்கள தேசம் ஆக்கிரமித்து அடிமை கொள்ளத் துடிக்கும் இந்த மண் அதற்கு என்றுமே சொந்தமானதன்று. இந்த மண் எமக்குச் சொந்தமான மண்; பழந்தமிழர் நாகரீகம் நீடித்து நிலைபெற்ற மண்; வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே எமது மூதாதையர் வாழ்ந்து வளர்ந்த மண்.

இந்த மண்ணிலேதான் எமது ஆதிமன்னர்கள் இராச்சியங்களும் இராசதானிகளும் அமைத்து அரசாண்டார்கள். எமது இன வேர் ஆழவேரோடியுள்ள இந்த மண்ணிலே, நாம் நிம்மதியாக, கௌரவமாக, அந்நியரின் அதிகார ஆதிக்கமோ தலையீடுகளோ இன்றி, எமது வாழ்வை நாமே அமைத்து வாழ விரும்புகிறோம்.

ஆங்கிலேய காலனியாதிக்கம் அகன்று, சிங்கள ஆதிக்கம் எம்மண் மீது கவிந்த நாள் முதல், நாம் எமது நீதியான உரிமைகளுக்காக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடி வருகிறோம்.

சுயநிர்ணய உரிமைக்கான எமது இந்த அரசியல் போராட்டம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துச்செல்கிறது. இந்த நீண்ட படிநிலை வரலாற்றில், வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களாக எமது போராட்டம் வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டு வந்திருக்கிறது.

ஆரம்பத்தில் அமைதியாக, மென்முறை வடிவில், ஜனநாயக வழியில் அமைதி வழிப்போராட்டங்கள் வாயிலாக எமது மக்கள் நீதிகேட்டுப் போராடினார்கள். அரசியல் உரிமை கோரி, தமிழ் மக்கள் தொடுத்த சாத்வீகப் போராட்டங்களைச் சிங்கள இனவாத அரசு ஆயுத வன்முறை வாயிலாக மிருகத்தனமாக ஒடுக்க முனைந்தது.

அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரம் அடைந்து, அதன் தாங்க முடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்தபோதுதான், வரலாற்றின் தன்னியல்பான விதியாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது.

சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வு செய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது.

சமாதானத்துக்கு எப்போதும் நாம் தயார்

தவிர்க்கமுடியாத தேவையின் நிர்ப்பந்தமாக ஆயுதப் போராட்டத்தை வரித்துக்கொண்ட போதும், நாம் எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குப் போரை நிறுத்தி, அமைதி வழியில் தீர்வுகாணவே விரும்புகிறோம். இதற்கு எமது விடுதலை இயக்கம் என்றுமே தயாராக இருக்கிறது. நாம் சமாதான வழிமுறைகளுக்கு என்றுமே எதிரானவர்கள் அல்லர்.

அதேநேரம், நாம் சமாதானப் பேச்சுக்களிற் பங்குபற்றத் தயங்கியதும் இல்லை. சமாதான வழிமுறை தழுவி, எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க, திம்புவில் தொடங்கி, ஜெனீவா வரை பல்வேறு வரலாற்றுச் சூழல்களில் பேச்சுக்களில் பங்குபற்றி வந்திருக்கிறோம்.

எமது மக்களின் தேசியப் பிரச்சினைக்குச் சமாதான வழியில் தீர்வுகாண நாம் முழுமனதுடனும் நேர்மையுடனும் செயற்பட்ட போதும் பேச்சுக்கள் எல்லாம் தோல்வியிலேயே முடிந்தன. சிங்கள அரசுகளின் விட்டுக்கொடாத கடும்போக்கும், நாணயமற்ற அரசியல் அணுகுமுறைகளும் இராணுவ வழித் தீர்விலான நம்பிக்கைகளுமே இந்தத் தோல்விகளுக்குக் காரணம்.



அனைத்துலகத்தை ஏமாற்றவே பேச்சுவார்த்தை நாடகம்

பிரமிப்பூட்டும் போரியற் சாதனைகளைப் படைத்து, சிங்கள ஆயுதப் படைகளின் முதுகெலும்பை முறித்து, படைவலுச் சமநிலையை எமக்குச் சாதகமாகத் திருப்பியபோதும், நாம் நோர்வேயின் அனுசரணையிலான அமைதிப் பேச்சுக்களிற் கலந்துகொண்டோம்.

போருக்கு முடிவுகட்டி, ஆறு ஆண்டுகளாகத் தொடர்ந்த அமைதிப் பேச்சுக்களில் நேர்மையுடனும் பற்றுறுதியுடனும் பங்குகொண்டோம். ஆயுதப் படைகளின் அத்துமீறிய செயல்களையும் ஆத்திரமூட்டும் சம்பவங்களையும் பொறுத்துக்கொண்டு, அமைதி பேணினோம்.

இத்தனையையும் நாம் செய்தது, சிங்கள இனவாத அரசு எமது மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று நீதி செய்யும் என்ற நம்பிக்கையினால் அன்று. சிங்கள அரசின் சமாதான முகமூடியைத் தோலுரித்துக்காட்டி, சமாதானத்தில் எமக்குள்ள பற்றுறுதியை உலகத்திற்கு வெளிப்படுத்தவே நாம் பேச்சுக்களில் கலந்துகொண்டோம்.

உலக அரங்கில் பல்வேறு நாடுகளின் தலைநகரங்களில் அரங்கேற்றப்பட்ட இந்த அமைதிப் பேச்சுக்கள், தமிழ் மக்களின் அன்றாட அவசர வாழ்க்கைப் பிரச்சினைகளையோ இனப்பிரச்சினையின் மூலாதாரப் பிரச்சினைகளையோ தீர்ப்பவையாக அமையவில்லை.

புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, தமிழர் தேசத்தையும் அனைத்துலக சமூகத்தையும் ஏமாற்றுவதற்கே சிறிலங்கா அரசு இப்பேச்சுவார்த்தைகளைப் பயன்படுத்தியது.

பேச்சு என்ற போர்வையில், சிங்கள அரசு தமிழர் தேசம் மீது ஒரு பெரும் படையெடுப்பிற்கான ஆயத்தங்களைச் செய்தது. போர் ஓய்வையும் சமாதானச் சூழலையும் பயன்படுத்தி, தனது நலிந்து போன பொருளாதாரத்தை மீளக்கட்டி, தனது சிதைந்துபோன இராணுவப் பூதத்தை மீளவும் தட்டியெழுப்பியது.

பெருந்தொகையில் ஆட்சேர்ப்பு நிகழ்த்தி, ஆயுதங்களைத் தருவித்து, படையணிகளைப் பலப்படுத்தி, போர் ஒத்திகைகளைச் செய்தது. தமிழர் தேசம் சமாதான முயற்சியில் ஈடுபட்டிருக்க, சிங்கள தேசம் போர்த் தயாரிப்பு வேலைகளிலேயே தன்னை முழுமையாக அர்ப்பணித்தது.

சமாதான முயற்சிகளுக்கு ஊறுவிளைவித்த உலக நாடுகளின் தடை

இதேநேரம், சமாதான முயற்சிகளின் காவலர்கள் எனத் தம்மை அடையாளப்படுத்திய உலக நாடுகளில் ஒரு பகுதியினர் அவசரப்பட்டு அதிரடி நடவடிக்கையில் இறங்கியமை, சமாதான முயற்சிகளுக்கே ஊறுவிளைவிப்பதாக அமைந்தது.

எமது சுதந்திர இயக்கத்தை இந்நாடுகள் ஒரு பயங்கரவாதக் குழுவாகச் சிறுமைப்படுத்திச் சித்திரித்து, தடை செய்யப்பட்ட இயக்கங்களின் வரிசையில் பட்டியலிட்டு, எம்மை வேண்டத்தகாதோராக, தீண்டத்தகாதோராக ஒதுக்கி ஓரங்கட்டி, புலம்பெயர்ந்து வாழும் எம்மக்கள் மீது வரம்பு மீறிய வரையறைகளை விதித்து, கட்டுப்பாடுகளைப் போட்டு, எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக அவர்கள் முன்னெடுத்த அரசியற் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டைகள் போட்டன.

தாம் வாழும் நாடுகளின் அரசியல் சட்டவிதிகளுக்கு அமைவாக, நீதிநெறி வழுவாது எம்மக்கள் மேற்கொண்ட மனிதாபிமானப் பணிகளைக் கொச்சைப்படுத்தி சிங்கள அரசின் இன அழிப்புக்கு ஆளாகி, மனிதப் பேரவலத்திற்கு முகம் கொடுத்து நின்ற தமது தாயக உறவுகளைக் காக்க எமது மக்கள் முன்னெடுத்த மனிதநேய உதவிப் பணிகளைப் பெரும் குற்றவியற் செயல்களாக அடையாளப்படுத்தி, தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைது செய்து, சிறைகளிலே அடைத்து, அவமதித்தன.

இந்நாடுகளின் ஒரு பக்கச்சார்பான இந்த நடவடிக்கைகள்; பேச்சுக்களில் நாம் வகித்த சமநிலை உறவையும் சமபங்காளி என்ற தகைமையையும் வெகுவாகப் பாதித்தன. இது சிங்கள தேசத்தின் இனவாதப்போக்கை மேலும் தூண்டிவிட்டது. சிங்கள இனவாத சக்திகள் உசாரடைந்து, எமக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தின. இது சிங்கள தேசத்தை மேலும் இராணுவப் பாதையிலே தள்ளிவிட்டது.



அனைத்துலக நாடுகளின் பாராமுகம்

சிங்கள தேசம் சமாதானக் கதவுகளை இறுகச் சாத்திவிட்டுத் தமிழர் தேசத்தின் மீது போர் தொடுத்தது. அனைத்துலகத்தின் அனுசரணையோடு கைச்சாத்தான போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் ஒருதலைப்பட்சமாகக் கிழித்தெறிந்தது. அப்போது சமாதானம் பேசிய உலக நாடுகள் ஒப்புக்குத்தானும் இதனைக் கண்டிக்கவில்லை; கவலை கூடத் தெரிவிக்கவில்லை.

மாறாக, சில உலகநாடுகள் சிங்கள தேசத்திற்கு அழிவாயுதங்களை அள்ளிக்கொடுத்து, இராணுவப் பயிற்சிகளையும் இராணுவ ஆலோசனைகளையும் இலவசமாக வழங்கி வருகின்றன. இதனால்தான் சிங்கள அரசு தமிழருக்கு எதிரான இன அழிப்புப் போரைத் துணிவுடனும் திமிருடனும் ஈவிரக்கமின்றியும் தொடர்ந்து வருகிறது.

இன்று சிங்கள தேசம் என்றுமில்லாதவாறு இராணுவ பலத்திலும் இராணுவ அணுகுமுறையிலும் இராணுவ வழித் தீர்விலும் நம்பிக்கைகொண்டு செயற்படுகிறது.

தமிழினத்துக்கு எதிரான போர்

தமிழர் தாயகத்தில் இராணுவ மேலாதிக்கத்தை நிலைநாட்டி, ஆயுத அடக்குமுறையின் கீழ் தமிழர்களை ஆட்சிபுரிய வேண்டும் என்ற அதன் ஆசை அதிகரித்திருக்கிறது. இதனால் போர் தீவிரம் பெற்று, விரிவுபெற்று நிற்கிறது.

இந்தப் போர் உண்மையில் சிங்கள அரசு கூறுவது போல, புலிகளுக்கு எதிரான போர் அன்று. இது தமிழருக்கு எதிரான போர்; தமிழ் இனத்திற்கு எதிரான போர்; தமிழின அழிப்பை இலக்காகக் கொண்ட போர்; மொத்தத்தில் இது ஓர் இன அழிப்புப் போர்.

இந்தப் போர் எமது மக்களைத்தான் பெரிதும் பாதித்திருக்கிறது. போரின் கொடூரத்தை மக்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, மக்கள் மீது தாங்கொணாத் துன்பப்பளுவைச் சுமத்தி, மக்களைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராகத் திருப்பிவிடலாம் என்ற நப்பாசையிற் சிங்கள அரசு செயற்பட்டு வருகிறது.

பாதைகளை மூடி, உணவையும் மருந்தையும் தடுத்து, எமது மக்களை இறுக்கமான இராணுவ முற்றுகைக்குள் வைத்துக்கொண்டு, கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களையும் எறிகணை வீச்சுக்களையும் நடாத்தி வருகிறது.

சொந்த நிலத்தை இழந்து, அந்த நிலத்தில் அமைந்த வாழ்வை இழந்து, அகதிகளாக அலையும் அவலம் எம்மக்களுக்குச் சம்பவித்திருக்கிறது. பிறப்பிலிருந்து இறப்பு வரை சதா துன்பச்சிலுவையைச் சுமக்கின்ற மக்களாக எம்மக்கள் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். நோயும் பிணியும் உடல்நலிந்த முதுமையும் சாவுமாக எம்மக்களது வாழ்வு சோகத்தில் தோய்ந்து கிடக்கிறது.

வரலாறு காணாத கொடூர அடக்குமுறை

எமது மக்களின் உறுதிப்பாட்டை உடைத்து விடவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு எமது எதிரியான சிங்கள அரசு இன்று எம்மக்கள் மீது எண்ணற்ற கொடுமைகளைப் புரிந்து வருகிறது. பெரும் அநீதிகளை இழைத்து வருகிறது.

உலகில் எங்குமே நிகழாத கொடூரமான அடக்குமுறைகளைப் பிரயோகிக்கிறது. எமது தேசத்தின் மீது ஒரு பெரும் பொருண்மியப்போரை தொடுத்து, எம்மக்களின் பொருளாதார வாழ்வைச் சிதைத்து அவர்களது நாளாந்த சீவியத்தைச் சீர்குலைக்கின்ற செயலிலே இறங்கியிருக்கிறது.

சிறிலங்கா படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழீழ நிலப்பரப்பில் மாதந்தோறும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போகின்றனர்; கொல்லப்படுகின்றனர். சிங்களப் பகுதிகளில் தமிழர் காணாமல் போவதும் கொல்லப்படுவதும் வழமையான நிகழ்ச்சியாகி விட்டது.

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமிழர் பகுதிகளிலே ஒரு மறைமுகமான இன அழிப்புக் கொள்கை இன்று வேகமாகச் செயற்படுத்தப்படுகிறது. சாவும் அழிவும் இராணுவ அட்டூழியங்களும் சொந்த மண்ணிலேயே சிறைப்பட்ட வாழ்வுமாக எம்மக்கள் நாளாந்தம் அனுபவிக்கும் துயரம் மிகக்கொடியது.

கைதுகளும் சிறை வைப்புக்களும் சித்திரவதைகளும் பாலியல் வல்லுறவுகளும் கொலைகளும் காணாமல் போதல்களும் புதைகுழிகளுக்குள் புதைக்கப்படுவதுமாக ஒரு நச்சு வட்டத்திற்குள் எமது மக்களது வாழ்வு சுழல்கிறது.



எமது மக்களின் விடுதலை வேட்கையை அழிக்க முடியாது

இருந்தபோதும், எமது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை. சுதந்திர தாகம் கொண்டு, எழுச்சி கொண்ட எம்மக்களை எந்தத் தடைகளாலும் எதுவும் செய்துவிடமுடியாது. ஆகாயத்திலிருந்து வீழும் குண்டுகளாலும் அவர்களது விடுதலை வேட்கையை அழித்துவிட முடியாது.

எம்மக்கள் துன்பச்சிலுவையைச் சதா சுமந்து பழகியவர்கள். அழிவுகளையும் இழப்புக்களையும் நித்தம் சந்தித்து வாழ்பவர்கள். இதனால் அவர்களது இலட்சிய உறுதி மேலும் உரமாகியிருக்கிறது. விடுதலைக்கான வேகம் மேலும் வீச்சாகியிருக்கிறது.

பெரும் போருக்கு முகம் கொடுத்தவாறு, நாம் இத்தனை காலமாக இத்தனை தியாகங்களைப் புரிந்து போராடி வருவது எமது மக்களின் சுதந்திரமான, கௌரவமான, நிம்மதியான வாழ்விற்கே அன்றி வேறெதற்காகவும் அன்று.

எமது விடுதலைப் போராட்டம் எந்தவொரு நாட்டுக்கும் எதிரானதல்ல

உலகத் தமிழினத்தின் ஒட்டுமொத்தப் பேராதரவோடு நாம் இந்தப் போராட்டத்தை நடாத்தி வருகிறோம். அதுமட்டுமன்று, எமது போராட்டம் எந்தவொரு நாட்டினதும் தேசிய நலன்களுக்கோ அவற்றின் புவிசார் நலன்களுக்கோ பொருளாதார நலன்களுக்கோ குறுக்காக நிற்கவில்லை.

எமது மக்களது ஆழமான அபிலாசைகளும் எந்தவொரு தேசத்தினதும் எந்த மக்களினதும் தேசிய நலன்களுக்குப் பங்கமாக அமையவில்லை. அத்தோடு இந்த நீண்ட போராட்ட வரலாற்றில், நாம் திட்டமிட்டு எந்தவொரு தேசத்திற்கு எதிராகவும் நடந்துகொண்டதுமில்லை.

உலக நாடுகளுடனும் இந்தியாவுடனும் நட்புறவு கொள்ள விரும்புகிறோம்

எமது விடுதலை இயக்கமும் சரி எமது மக்களும் சரி என்றுமே உலக நாடுகளுடனும் எமது அண்டை நாடான இந்தியாவுடனும் நட்புறவை வளர்த்துச் செயற்படவே விரும்புகிறோம்.

இதற்கான புறநிலைகளை உருவாக்கி, நட்புறவுப் பாலத்தை வளர்த்துவிடவே சித்தமாக இருக்கிறோம். எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, காத்திரமான உறவுகளைக் கட்டியெழுப்புவதற்குக் காத்து நிற்கிறோம். எம்மை தடைசெய்துள்ள நாடுகள், எமது மக்களது அபிலாசைகளையும் ஆழமான விருப்பங்களையும் புரிந்துகொண்டு, எம்மீதான தடையை நீக்கி, எமது நீதியான போராட்டத்தை அங்கீகரிக்கவேண்டுமென அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

இந்தியாவுடனான உறவுகளை புதுப்பிக்க விரும்புகிறோம்

இன்று இந்திய தேசத்திலே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கு அடங்கிக்கிடந்த எமது போராட்ட ஆதரவுக்குரல்கள் இன்று மீளவும் ஓங்கி ஒலிக்கின்றன.

எமது போராட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற ஏதுநிலைகள் வெளிப்படுகின்றன. கனிந்து வருகின்ற இந்தக் கால மாற்றத்திகேற்ப, இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம்.

அன்று, இந்தியா கைக்கொண்ட நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் தலையீடுகளும் ஈழத்தமிழருக்கும் அவர்களது போராட்டத்திற்கும் பாதகமாக அமைந்தன.

இனவாத சிங்கள அரசு தனது கபட நாடகங்களால் எமது விடுதலை இயக்கத்திற்கும் முன்னைய இந்திய ஆட்சிப்பீடத்திற்கும் இடையே பகைமையை வளர்த்து விட்டது.

இந்தப் பகைப்புலத்தில் எழுந்த முரண்பாடுகள் மேலும் முற்றிப் பெரும் போராக வெடித்தது. இதன் ஒட்டுமொத்த விளைவாக எமது மக்கள் பெரும் அழிவுகளைச் சந்திக்க நேர்ந்தது.

நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால்தான் எமது இயக்கத்திற்கும் இந்திய அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது.

எனினும், இந்தியாவை நாம் ஒருபோதும் பகை சக்தியாகக் கருதியதில்லை. இந்தியாவை எமது நட்புச் சக்தியாகவே எமது மக்கள் என்றும் கருதுகிறார்கள். எமது தேசியப் பிரச்சினை விடயத்தில் இந்தியப் பேரரசு ஒரு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கும் எனப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.

தமிழக உறவுகளுக்கு நன்றி

காலமும் கடல் கடந்த தூரமும் எம்மைப் பிரிந்து நிற்கின்ற போதும், எமது மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்து, தமிழகம் இந்தவேளையிலே எமக்காக எழுச்சிகொண்டு நிற்பது தமிழீழ மக்கள் அனைவருக்கும் எமது விடுதலை இயக்கத்திற்கும் பெருத்த ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

எம்மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி, அன்புக்கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் இந்தியக் தலைவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதேநேரம், எமது தமிழீழத் தனியரசுப் போராட்டத்திற்கு ஆதரவாக வலுவாகக் குரலெழுப்புவதோடு, இந்தியாவிற்கும் எமது இயக்கத்திற்கும் இடையிலான நல்லுறவிற்குப் பெரும் இடைஞ்சலாக எழுந்து நிற்கும் எம்மீதான தடையை நீக்குவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.

எனது அன்பான மக்களே!

சிங்கள அரசியல் உலகத்தில் பெரும் மாற்றங்களோ திருப்பங்களோ நிகழ்ந்து விடவில்லை. அங்கு அரசியல், போராகப் பேய் வடிவம் எடுத்து நிற்கிறது.

போருக்கு குரல் கொடுக்கும் சிங்கள தேசம்

அன்பையும் அறத்தையும் போதித்த புத்த பகவானைப் போற்றி வழிபடும் அந்தத் தேசத்திலே இனக்குரோதமும் போர் வெறியும் தலைவிரித்தாடுகின்றன. அங்கு போர்ப் பேரிகைகளைத்தான் எம்மால் கேட்க முடிகிறது.

போரை கைவிட்டு, அமைதி வழியில் பிரச்சினையைத் தீர்க்குமாறு அங்கு எவரும் குரல் கொடுக்கவில்லை. சிங்களத்தின் அரசியல்வாதிகளிலிருந்து ஆன்மீகவாதிகள் வரை, பத்திரிகையாளர்களிருந்து பாமர மக்கள் வரை போருக்கே குரல் கொடுக்கிறார்கள்.

தமிழர் தேசம் போரை விரும்பவில்லை. வன்முறையை விரும்பவில்லை. அகிம்சை வழியில் அமைதி வழியில் நீதி வேண்டி நின்ற எம் மக்களிடம் சிங்கள தேசம்தான் போரைத் திணித்திருக்கிறது.

எமது பிராந்தியத்தைச் சேர்ந்த சார்க் நாட்டுத் தலைவர்கள் கொழும்பிலே கூடியபோது, எமது தேசத்தின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி நாம் அறிவித்த பகைமைத் தவிர்ப்பையும் ஏற்க மறுத்து, அதனை ஏளனம் செய்து போரைத் தொடர்ந்து நிற்பதும் சிங்கள தேசம்தான். ஏற்றுக்கொள்ளவே முடியாத அவமதிப்பூட்டும் நிபந்தனைகளை விதித்துப் போரைத் தொடர்வதும் சிங்கள தேசம்தான்.

சிங்கள தேசம் ஒரு பெரும் இன அழிப்புப் போரை எமது மண்ணிலே நிகழ்த்தி வருகிறது. இந்த உண்மையை மூடிமறைத்து, உலகத்தைக் கண்கட்டி ஏமாற்ற சிங்கள அரசுகள் காலங்காலமாகப் பல்வேறு அரசியல் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன.

வட்டமேசை மாநாட்டில் தொடங்கி, இன்று அனைத்து கட்சிக் கூட்டம் என இந்த ஏமாற்று நாடகத்தின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

கடந்து சென்ற இந்த நீண்ட கால ஓட்டத்தில், சிங்கள அரசுகள் உலகத்தை ஏமாற்றியதைத் தவிர, தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு உருப்படியான எந்தவொரு தீர்வினையும் முன்வைக்கவில்லை.

மாறாக, சிங்கள தேசம் தனது படைக்கல சக்தியால் தமிழர் நிலங்களைப் பற்றியெரிய வைத்திருக்கிறது. தமிழரது அமைதியைக் கெடுத்து, அவர்களது நிலத்தில் அமைந்த வாழ்வை அழித்து, அவர்களை அகதிகளாக அலைய வைத்திருக்கிறது.

சிங்களம் யாருக்கு தீர்வை முன்வைக்கப் போகிறது?

தமிழரின் மூலாதாரக் கோரிக்கைகளை ஏற்க மறுத்து, தமிழர் தேசத்தை இரண்டாகப் பிளந்து, அங்கு தமிழர் விரோத ஆயுதக்குழுக்களை ஆட்சியில் அமர்த்தி, இராணுவப் பேயாட்சி நடாத்துகிறது.

புலிகளைத் தோற்கடித்த பின்னர்தான் தமது தீர்வுத்திட்டத்தை அறிவிப்போம் எனக்கூறிக்கொண்டு, போரை நடாத்துகிறது. தமிழர்களைக் கொடுமைப்படுத்திக் கொன்றொழித்த பின்னர், சிங்களம் யாருக்கு தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் உண்மையான பிரதிநிதிகளை, அவர்களது பேரம் பேசும் சக்தியை அழித்துவிட்டு, எப்படிச் சிங்களம் தீர்வை முன்வைக்கப்போகிறது? தமிழரின் வரலாற்றுச் சொத்தான தாயக நிலத்தையே ஏற்க மறுக்கும் சிங்களம், எப்படி எமது மக்களுக்கு ஒரு நீதியான தீர்வை முன்வைக்கப்போகிறது?

தமிழரின் தேசியப் பிரச்சினை விடயத்தில், சிங்களம் அடக்குமுறை என்ற ஒரே பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறது. இராணுவ வன்முறைப் பாதையைக் கைவிட்டு, சிங்களம் நீதி வழங்கும் என எமது மக்கள் வைத்திருந்த சிறிய நம்பிக்கையும் இன்று அடியோடு அழிந்துவிட்டது.

சிங்கள தேசத்திலே கடந்த அறுபது ஆண்டுகளாக நிகழாத அரசியல் மாற்றம் இனிவரும் காலங்களில் நிகழ்ந்துவிடப் போவதுமில்லை, அப்படி நம்பி ஏமாறுவதற்கு எமது மக்களும் தயாராக இல்லை.

ஆக்கிரமிப்புக்கு என்றுமே இடமளிக்கப்போவதில்லை

பூமிப்பந்திலே ஈழத்தமிழினம் ஒரு சிறிய தேசமாக இருக்கின்றபோதும் நாம் பெரும் வலிமை வாய்ந்த ஒரு சக்திமிக்க இனம். தன்னிகரற்ற ஒரு தனித்துவமான இனம். தனித்துவமான மொழியையும் பண்பாட்டு வாழ்வையும் வரலாற்றையும் கொண்ட ஒரு பெருமைமிக்க இனம்.

இப்படியான எமது அருமை பெருமைகளையெல்லாம் அழித்து, தமிழீழ தேசத்திலே தமிழரின் இறையாண்மையைத் தகர்த்துவிட்டு, இராணுவப் பலத்தாற் சிங்களம் தனது இறையாண்மையை திணித்துவிடத் துடிக்கிறது. தமிழரின் சுதந்திர இயக்கம் என்ற வகையில், நாம் எமது மண்ணில் சிங்கள ஆக்கிரமிப்பிற்கோ சிங்கள ஆதிக்கத்திற்கோ என்றுமே இடமளிக்கப்போவதில்லை.

தொடர்ந்து போராடுவோம்

எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.

புலம்பெயர் இளைய சமுதாயத்துக்கு பாராட்டு

இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களைப் பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகிறேன்.

அத்துடன், தங்களது தாராள உதவிகளை வழங்கித் தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். இந்த சந்தர்ப்பத்திலே தேச விடுதலைப் பணியைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக்கொள்வோமாக.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

(வே. பிரபாகரன்)
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.

ஈழத்தமிழருக்கு ஆதரவாக பேசிய குற்றம்: இயக்குனர் சீமான் ஜாமீனில் வர மறுப்பு




ஈழத்தமிழருக்கு ஆதரவாக பேசிய குற்றம்: இயக்குனர் சீமான் ஜாமீனில் வர மறுப்பு; 15 நாள் காவல் நீட்டிப்பு

[ சனிக்கிழமை, 21 மார்ச் 2009, 05:53.01 AM GMT +05:30 ]
ஈழத்தமிழருக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகம் பேசியதாக குற்றஞ்சாட்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இயக்குனர் சீமான் ஜாமீனில் வர மறுப்புத் தெரிவித்துள்ள நிலையில் அவருக்கு மேலும் 15 நாள் காவல் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக இயக்குனர் சீமான் புதுச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்க பட்டுள்ளார்.

அவரது காவல் நேற்றுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து, நேற்று காலை சீமான் தலைமை குற்றவியல் நீதிபதி பொங்கியப்பன் முன் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது நீதிபதி, அவரிடம் ஜாமீன் கேட்டுள்ளீர்களா என்று கேட்டார். அதற்கு சீமான் அது பற்றி விவாதிக்க விரும்பவில்லை என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து சீமானுக்கு வருகிற 2-ந் தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

பாளையங்கோட்டை பொலிஸார் தொடர்ந்த வழக்கிலும் சீமானுக்கு நேற்றுடன் காவல் முடிந்தது. இதையடுத்து சீமானை கடலூர் ஜெயிலுக்கு கொண்டு சென்றனர்.

அங்கு இருந்து வீடியோ கான்பிரன்சிங் மூலம் பாளையங்கோட்டை 1-வது மாஜிஸ்திரேட்டு (பொறுப்பு) ஹேமா விசாரணை நடத்தி அவரது காவலை மேலும் 15 நாட்களுக்கு (ஏப்ரல் 3-ந்தேதி வரை) நீட்டித்து உத்தரவிட்டார்.

இந்த விசாரணை 40 நிமிடம் நடந்தது. பின்னர் அவர் மீண்டும் புதுச்சேரி ஜெயிலுக்கு கொண்டு வரப்பட்டு அடைக்கப்பட்டார்.

ஈழத்தின் இனவன்முறைகள் வரலாறு தெரியுமா ?

1983 வரை இலங்கை வரலாற்றில் தடம்பதித்த இனவன்முறைகள்:

நாட்டில் இனக்குரோதம் சுதந்திரத்தின் பின் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு பொருளாதார ரீதியான காரணிகள் சிறிதளவே செல்வாக்குச் செலுத்தியுள்ளன. பல இனங்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில் இனரீதியான பிரச்சினையின் தீவிரத்திற்கு கடந்தகால அனுபவங்களை வெளிக்காட்டும் வெறுப்பான சம்பவங்களைக் கொண்ட வரலாறே காரணமாக இருந்துள்ளது என்பது தெளிவு. காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்ட அகிம்சாவாதிகளின் போராட்டங்களினால் கிடைத்த கசப்பான அனுபவங்கள் மற்றும் ஏமாற்றங்கள், ஒதுக்கு முறைகள், ஒடுக்கு முறைகள் போன்றவற்றை வெளிக்காட்டிய வரலாறு இலங்கையின் தமிழர் தாயகப் போராட்டத்தை தீவிரப்படுத்திக்கொண்டு செல்வதில் பெரும்பங்களிப்பைச் செலுத்தியுள்ளன. இதனை வரலாறு மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.



இலங்கை வரலாற்றை அறிய உதவும் நூல்களில் மகாவம்சம் முதன்மையானது. இந்நூலின் கூற்றுப்படி கி.மு. 06 ஆம் நூற்றாண்டின் பின்பே இங்கு மனிதக் குடியேற்றங்கள் இடம்பெற்றன. அந்த குடியேற்றங்கள் வட இந்தியாவிலிருந்தே மேற்கொள்ளப்பட்டன. அதுமட்டுமல்ல, ஆரியர் என்ற இனத்தவர்களே இங்கு முதலில் குடியேறினர் என்பதும் மகாவம்சம் தரும் தகவலாகும். ஆனால், ஆரியர் வருகைக்கு முன்பே இங்கு மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதனை தொல்லியல் ஆய்வுகள் வெளிக்காட்டியுள்ளன. ஆரியர் வருகைக்கு முன்பு இங்கு வாழ்ந்தவர்களை அமானுஷர் என்று (நாகரிகமடையாதவர்) மகாவம்சத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இந்த அமானுஷர்கள் யார்? என்பதனை ஆய்வாளர்கள் தொல்லியல், மானிடவியல், வரலாறு ரீதியாக மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் திராவிடர் என்பதனை தற்காலத்தில் நிறுவியுள்ளனர்.

மகாவம்சத்தை எழுதிய மகாநாமர், தன் இனம் (சிங்களவர்), தன்மதம் (தேரவாத பௌத்தம்), தன்மொழி (சிங்களம்) என்பனவற்றின் மீது கொண்டே உயர்ந்த பற்றுக்காரணமாக, பக்கச்சார்பான கருத்தை இந்நூலின் மூலம் வெளியிட்டுள்ளார். இவை மறுக்கமுடியாத உண்மை. எனவேதான், தான் சார்ந்த இனம், மதம், மொழி என்பனவற்றை உயர்வாகக் காட்டிய அதேவேளை, தமிழர்கள் தொடர்பான உண்மைக்கு புறம்பான தகவல்களை கொடுத்து அவர்களைப் புறம்தள்ளி சிங்களவர்களை உயர்வாக காட்ட முற்பட்டுள்ளார்.

அதுமட்டுமல்ல, குறித்த காலத்தில் வாழ்ந்த ஏனைய மக்களின் மதம், மொழி, பண்பாடு தொடர்பான தகவல்களைத் திரிபுபடுத்தி உண்மைக்குப் புறம்பாக காட்டியுள்ளார். அதாவது, கி.மு. 247 இல் பௌத்தம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட பின்னர்தான் இங்கு வாழ்ந்த மக்கள் நாகரிகமடைந்தனர் என்ற கருத்துப்பட கூறியுள்ளார். அக்காலத்தில் காணப்பட்ட ஏனைய மதங்கள் தொடர்பான தகவல்களை மறைத்து தேரவாத பௌத்த மதம் தொடர்பான தகவல்களை முதன்மைப்படுத்தியுள்ளார்.

பௌத்த மதத்தில் தேரவாதம், மகாஜனம் எனும் இரண்டு பிரிவுகள் காணப்படுகின்றன. மகாவிகாரையை மையமாகக்கொண்டு வளர்க்கப்பட்ட, தான்சார்ந்த தேரவாத பௌத்த பிரிவு பற்றி சிறப்பித்து மகாநாமதேரர் குறிப்பிட்டுள்ளார். அபயகிரி விகாரையை மையப்படுத்திய மகாஜன பௌத்த பிரிவு பற்றியோ, ஏனைய மதங்கள் பற்றியோ உண்மையான தகவல்களை அவர் மறைத்து விட்டார்.

இதேபோன்றுதான் தமிழ் மன்னன் எல்லாளன் என்பவருக்கும் துட்டகைமுனுவுக்குமிடையில் நடைபெற்ற அரசியல் ரீதியான ஆதிக்கப் போராட்டத்தை, தமிழருக்கும் சிங்களவருக்குமிடையில் நடைபெற்ற இனப்போராட்டமாக மகாநாமதேரர் காட்டியுள்ளார். உண்மையில், கி.பி. 15 ஆம் நூற்றாண்டின் இறுதிவரை இந்த நாட்டில் இன, மத, மொழி அடிப்படையிலான போராட்டங்கள் இடம்பெற்றதற்கான வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கவில்லை என்று கூறிக்கொள்ளலாம்.

துட்டகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் இடையில் பெரும் யுத்தம் ஒன்று நடைபெற்றதாகவும், அதில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் மகாவம்சம் தகவல்களைத் தருகின்றது. பேராசிரியர் பி.புஸ்பரட்ணம் போன்ற வரலாறு, தொல்லியல் துறைசார் ஆய்வாளர்கள், இந்த யுத்தம் இன, மத, மொழி ரீதியாக நடந்ததற்குச் சான்றுகள் இல்லை என்றும் மாறாக அரசியல் ஆதிக்கமே பிரதானமாக இருந்ததென்றும் காட்டுகின்றனர். எனவே, இனரீதியான வன்முறைகள் 1915 இன் வரை நடைபெற்றதாக தெரியவில்லை. அரசியல் ரீதியான ஆதிக்கமே காலத்துக்கு காலம் யுத்தங்கள் நடைபெறப் பிரதானமான காரணமாக இருந்தன என்பது நோக்கத்தக்கது.

ஐரோப்பியர் இலங்கையை ஏறத்தாழ 450

வருடகாலம் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து ஆட்சி செலுத்தினர். ஆங்கிலேயர் 1796 இல் இலங்கையில் தமது ஆட்சியை நிறுவிய பின்னர் 1815இல் கண்டி உட்பட முழுநாட்டையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். இவர்கள் அதிகாரம் செலுத்திய காலத்திலேதான், இரண்டு இனங்களுக்கிடையிலான இனவன்முறை மோதல் முதன் முதலாக நடைபெற்றது. இது முஸ்லிம், சிங்கள இனங்களுக்கிடையிலான கலவரமாகும். எனவே, முதல் இனரீதியான அடி தமிழருக்கு அல்ல, மாறாக 1915 இல் சிங்களவர்களால் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டதென்பது உண்மை.

1833 இல் ஆங்கிலேயரால் சட்டசபை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 1835 இல் அரசாங்க மொழி பெயர்ப்பாளராக இருந்த சிங்களவர் ஒருவர் மற்றும் தமிழர், பேகர் இனங்களில் தலா ஒருவர் வீதம் மொத்தம் மூன்று உறுப்பினர்கள் இனரீதியில் நியமிக்கப்பட்டனர்.இனரீதியான நியமனங்கள் 1835 ஆம் ஆண்டுதான் முதன்முதலாக இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டதென்பது மற்றோர் முக்கிய விடயமாகும். இந்த சட்டசபையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்ளவேண்டி தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இனரீதியான பிரதிநிதித்துவத்தின் ஆபத்தினை உணர்ந்ததாலோ என்னவோ, 1910 இல் பிராந்திய பிரதிநிதித்துவத்தினை இலங்கையர் கோரலாயினர். இக்கோரிக்கையினை ஆங்கிலம் கற்ற வகுப்பினர் மேற்கொண்டனர். இதற்காக அகிம்சை போராட்டங்களையும் கிளர்ச்சிகளையும் அவர்கள் நடத்தினர். 1833 இல் கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பில் திருத்தங்கள் கோரி தொடர்ச்சியாக ஆங்கில அரசாங்கத்திற்கு எதிராகக் கிளர்ச்சிகளில் ஈடுபட்ட காலம். 1910 1915 இல் இக்கிளர்ச்சி தீவிரமடைந்திருந்தது. 1915 இல் பௌத்த மத ஊர்வலம் ஒன்றை நடத்தும் போது குறிப்பிட்ட கம்பளை முஸ்லிம் பள்ளிவாசலைக் கடக்கும் சந்தர்ப்பத்தில் 100 யார் தூரத்துக்கு எந்தவித ஆரவாரமும் இன்றி செல்ல வேண்டுமென்ற உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளிக்காது ஊர்வலத்தில் ஈடுபட்ட பௌத்த சிங்களவர் செயற்பட்டுக் கொண்டனர். இதனால், இந்திய முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையே மோதல்கள் வெடித்தன.

ஏற்கனவே முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் சமூக, பொருளாதார ரீதியாகக் காணப்பட்ட போட்டியானது இந்த கலவரத்திற்கு மற்றொரு காரணமாகவும் கூறப்படுகின்றது.எது எவ்வாறாக இருந்தபோதும், சமயம் சம்பந்தமான இந்த முரண்பாடானது முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயலுக்கு காரணமாயிற்று. இந்த வன்செயலினால், கம்பளையிலுள்ள முஸ்லிம்களின் கடைகள், சொத்துக்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வன்செயல் கொழும்பு, குருநாகல் போன்ற இடங்களுக்கும் பரவிக்கொண்டது. இந்த நிலையைக் கண்டு ஆங்கில அரசு அச்சமøடந்தது. இந்த அச்சத்திற்கு மற்றொரு முக்கிய காரணமும் இருந்தது. அப்போது முதலாம் உலக மகாயுத்தம் தீவிரமடைந்திருந்தது. இந்த யுத்தத்தில் பிரித்தானியா முக்கிய பங்கு வகித்திருந்தது.

இதனால் சிங்கள முஸ்லிம் குழப்பத்தின் பின்னணியில் அரசாங்கத்திற்கு விரோதமான சக்திகள் இருப்பதாக ஆளுநர் றொபட்தோமஸ் அச்சமும் ஐயமும் கொண்டார். இதனை அடக்க கடும் நடவடிக்கை எடுத்தார். ஏறக்குறைய நாட்டில் எல்லாப் பகுதிகளுக்கும் பரவிய முஸ்லிம்களுக்கெதிரான வன்செயல்களை அடக்க இராணுவச் சட்டத்தை (மார்ஷல்லோ) பிரகடனப்படுத்தினார். எவ்.ஆர். சேனநாயக்க அவரின் சகோதரர், டி.எஸ். சேனநாயக்க போன்ற பல சிங்களத் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதுமட்டுமல்ல, கலகத்தை அடக்க எடுத்த கடும் நடவடிக்கையினால் வில்லியம்பதிரிஸ் உட்பட பல சிங்களவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

முஸ்லிம் சிங்கள இனமோதல் மூலம் அவர்களிடையே காணப்பட்ட உறவுகள் திருப்தியற்றனவாக மாறிக்கொண்டன.தற்போது இலங்கையில் தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்படும் வன்முறையானது சிங்களவர்களாலும் அவர்களின் ஆட்சியாளர்களினாலும் காலத்துக்குக் காலம் கட்டவிழ்த்து விடப்பட்டன என்பது தெளிவானது. ஆனால், 1915 இல் இடம்பெற்ற முஸ்லிம் சிங்கள வன்முறையானது தாய்நாட்டவர்களுக்கிடையிலானதாக அமைந்த போதும் அவற்றினை அடக்கியவர்கள் அந்நியரான ஆங்கில ஆட்சியாளர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே, இலங்கையின் இன ரீதியான வன்முறையானது தமிழருக்கு எதிராக அல்லாமல் முதன் முதல் முஸ்லிம்களுக்கெதிராகவே நடத்தப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. சிங்களவர்கள், சிறுபான்மைத் தமிழர்களுக்கெதிராக இன்று மேற்கொள்ளும் இனவன்முறையின் முதற்படி 1915 இல் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களவர்களால் நடத்திக் காட்டப்பட்டதென்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

தனிச் சிங்களச் சட்டமும் தமிழர்களுக்கு எதிரான முதல் இனக்கலவரமும் 1956

இலங்கை சுதந்திரமடைந்த பின்பு சிறுபான்மையோர் புறக்கணிக்கப்பட்ட முதல் வரலாற்றுச் சம்பவம் 1956 இல் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டமாகும். அப்போதைய பிரதம மந்திரி எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க சிங்களம் மட்டும் சட்டத்தைக் கொண்டுவந்து கறைபடிந்த இலங்கை வரலாற்றை உருவாக்கினார். இதன் மூலம் தமிழ் மொழியையும் புறக்கணித்தனர்.

இதனை எதிர்த்து 1956 ஜூன் 5 ஆம் நாள் காலிமுகத்திடலில் உண்ணாவிரதம் இருந்த தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் சிங்களமொழி மட்டும் சட்டத்திற்கு ஆதரவான குண்டர்களினால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டனர். தமிழர்கள் பலர் கொல்லப்பட்டனர். தமிழர்களுடைய சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. சுதந்திர இலங்கையில் சிறுபான்மை இனத்தவரான தமிழருக்கு எதிராக சிங்களவர் மேற்கொண்ட முதல் இனக்கலவரம் இதுவாகும். இதன் பின்பு இரண்டு இனங்களும் இரு துருவங்களாக ஒருவரை ஒருவர் சந்தேகத்துடன் நோக்கும் நிலை தொடரும் நிலை ஏற்பட்டுக்கொண்டது.

1958 இனக்கலவரம்

1957 ஜூலை 26 ஆம் நாள் தமிழரசுக்கட்சியின் தலைவர் எஸ்.ஜே. செல்வநாயகம் மற்றும் அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவுக்குமிடையில் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டது. இது பண்டா செல்வா ஒப்பந்தம் என அழைக்கப்பட்டது.

ஒப்பந்தம் செய்யப்பட்டு 5 மாதங்கள் கடந்த பின்பு அது நிறைவேற்றப்படவில்லை. ஒப்பந்தம் தேங்கிக் கிடந்தது. இது ஒருபுறமிருக்க 1957 நவம்பர் சிங்கள “ஸ்ரீ’ சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் தமிழரசுக்கட்சியினர் கடுமையான எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தியிருந்தனர். 1958 ஏப்ரல் 9 ஆம் நாள் விமல விஜயவர்த்தன தலைமையிலான குழுவினர் ஒப்பந்தத்தைக் கிழித்தெறியும்படி கோரி பிரதம மந்திரியின் இல்லத்தை முற்றுகையிட்டுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கிழித்துத் தூக்கி வீசப்பட்டது. இதனால், நாடு முழுவதும் தமிழருக்கெதிரான இனக்கலவரத்தை சிங்களவர் ஏற்படுத்தினர். இக்கலவரம் 1958 மே 26, 27, 28 ஆம் திகதிகள் வரை நீடித்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகள் முகாமுக்குள் புகுந்துகொள்ள நேர்ந்தது.

தமிழாராய்ச்சி மாநாடும் தாக்குதலும்

1974 ஜனவரி 3 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நான்காவது தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பல வெளிநாட்டுப் பிரமுகர்களும் கல்விமான்களும் கலந்து கொண்டனர்.

1974 ஜனவரி 10 ஆம் நாள் மாநாட்டில் புகுந்த பொலிஸார் பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தினர். எந்தவித காரணமும் இன்றி தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது 9 தமிழ்ப் பொதுமக்கள் கொலை செய்யப்பட்டனர். இது மற்றொரு இனரீதியான ஒடுக்குமுறைத் தாக்குதலாகும். இது ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அம்மையார் பிரதம மந்திரியாக இருந்த காலத்தில் இடம்பெற்றது.

1977 இன் இனக்கலவரம்

ஐ.தே.க.வினர் ஆட்சிப் பொறுப்பேற்று ஒரு மாதம் கடக்கும் முன்னர் தமிழருக்கு எதிரான மற்றொரு வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வின் போது பாடசாலை மாணவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மூன்று மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதன் பின்னணியில் இரண்டு பொலிஸார் சுட்டுக்கொல்லப்பட்டனர். இச்சம்பவம் காட்டுத்தீ போல் பரவியது. 1977 ஆகஸ்ட் 17 இல் அனுராதபுர புகையிரத நிலையத்தில் வைத்து தமிழர்கள் தாக்கப்பட்டனர். இதனையடுத்து இனக்கலவரம் ஒன்று வெடித்தது.

இக்கலவரம் இரண்டு வாரகாலம் நீடித்தது. தமிழர்களின் உடைமைகள், உயிர்கள் பறிக்கப்பட்டன. சொத்துக்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. இக்கலவரம் 1958 ஐ விட சற்று விரிவாக நடத்தப்பட்டது. மலையகத்திற்கும் பரவியது. இலங்கைவாழ் தமிழர்கள் கடும் இன்னல்களுக்கு முகம் கொடுத்ததோடு, இடம்பெயர்ந்தனர். இந்த துயரச் சம்பவங்கள் இலங்கைத் தமிழர் வரலாற்றில் ஜீரணிக்க முடியாதவையாகும்.

1981 ஆகஸ்ட் செப்டெம்பர் மாத இனக்கலவரம்

இதேபோன்று 1981 ஆகஸ்ட் செப்டெம்பர் மாதங்களில் தமிழருக்கு எதிரான வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. ஐ.தே.க. அரசாங்க காலத்தில் இடம்பெற்ற இரண்டாவது இன வன்முறை இதுவாகும். அதாவது, ஜே.ஆர். ஆட்சிப் பொறுப்பேற்று நடந்த மற்றொரு துயரச் சம்பவமாகும்.

ஐ.தே.கட்சியின் சார்பில் யாழ்ப்பாணத்தில் மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் போட்டியிட்ட தியாகராசா சுட்டுக்கொல்லப்பட்டார். அதுமட்டுமல்ல தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இருவர் வேறொரு சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழருக்கு எதிரான வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் காரியாலயம் உடைக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டது. 96 ஆயிரம் புத்தகங்களுடன் கூடிய யாழ். நூலகம் திட்டமிட்டு எரிக்கப்பட்டது. தமிழர்களின் அறிவியல் பொக்கிசம் எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டதை எந்தத் தமிழராலும் ஜீரணிக்க முடியுமா?

யாழ்ப்பாணத்துக்கென நிரந்தர இராணுவ அணி ஒன்று நிறுத்தி வைக்கப்படுவது தொடர்பிலும் அதற்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்கள் பற்றியும் செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தன. அத்துடன், 1981 ஜூலை 28 ஆம் நாள் ஆனைக்கோட்டைப் பொலிஸ் நிலையம் தமிழ்ப் போராளிகளினால் தாக்கியழிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புகைந்துகொண்டிருந்த தமிழருக்கெதிரான மற்றொரு வன்செயல் 1981 ஜூலை 31 ஆகஸ்ட் 1 ஆம் திகதிகளில் திட்டமிட்டு ஐ.தே.க.வில் செல்வாக்குமிக்கவர்களால் இந்த இனவன்முறை முன்னெடுக்கப்பட்டிருந்தமையும் நாம் நினைவு கூரத்தக்கது. கிழக்கு மற்றும் தென் பகுதிகளில் வாழ்ந்த தமிழ்மக்கள் தாக்கப்பட்டனர். மலையகத்திலும் திட்டமிட்டு தோட்டத் தொழிலாளர்கள் தாக்கப்பட்டனர். தமிழர்களின் சொத்துக்கள், உடைமைகள் சேதமாக்கப்பட்டன. இந்த இனவன்முறையினை அனுபவித்த தமிழர்களால் இதனை மறக்க முடியுமா?

1983 ஜூலை இனக்கலவரம்

1983 ஜூலை 23 ஆம் நாள் இரவு யாழ்ப்பாணத்தில் ரோந்து சென்ற படையினரின் வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து மறுநாள் குண்டர்களால் இனவன்முறை மேற்கொள்ளப்பட்டது. இந்த இனக்கலவரத்தின் போது வெலிக்கடைச் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 52 தமிழர்கள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். சிறைச்சாலையில் குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை உட்பட்டவர்களும் அடங்கியிருந்தனர். ஆயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். கோடிக்கணக்கான பெறுமதியான பொருட்சேதம் ஏற்பட்டது. தமிழர்களால் என்றென்றும் மறக்கமுடியாத துயரச் சம்பவமாக 1983 ஜூலைக் கலவரத்தைக் குறிப்பிடமுடியும். இந்தக் கலவரத்தினால் இழப்புக்களைச் சந்தித்துக்கொண்டவர்களால் என்றும் இந்தக் கலவரத்தை மறக்க முடியுமா? 1983க்கு பிற்பட்ட காலத்திலும் பல இன ரீதியான தாக்குதல் சம்பவங்கள் வரலாற்றில் இருப்புக்கொண்டுள்ளன என்பதனை நாம் குறித்துக்கொள்ள முடியும்.

நன்றி
குவைதில் இருந்து சுப்ரமணியன் .நா

வெள்ளி, 20 மார்ச், 2009

தேசியத் தலைவர் பிரபாகரன் வார்த்தைகள்

எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை.

- தேசியத் தலைவர் பிரபாகரன்

prabhakaran voice

எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள்.

prabhakaran

prabhakaran

சிங்களப் பேரினவாதத்தின் கடுமையான போக்கு, தனியரசு என்ற ஒரேயொரு பாதையைத்தான் இன்று தமிழீழ மக்களுக்குத் திறந்துவைத்திருக்கிறது.

இனங்களின் தனித்துவத்தை அழித்தொழிக்க நடத்திய நிலச் சூறையாடல்

Written by பி.இரயாகரன் Wednesday, 27 August 2008 19:48 அரசியல்/சமூகம் பி.இரயாகரன் 2001-2003

நிலச் சூறையாடலில் தமிழ், முஸ்லீம், மலையக மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களையும், பொருளாதார அடிப்படைகளையும் பரந்த தளத்தில் சிங்கள இனவாதிகள் அழித்தொழித்துள்ளனர். இதைத் தமிழ் தேசியம் இன்று வரை எதிர்த்துப் போராடவில்லை. குறுந் தேசியமல்லாத தேசிய போராட்டம் இந்த நிலம் சார்ந்தும், அந்த மக்களின் உழைப்பு சார்ந்தும் போராடியிருக்க வேண்டும். பிரதானமாக கல்வி மற்றும் வேலை வாய்ப்பை அடிப்படையாக கொண்டு யாழ் தேசியமாகவே குறுந் தேசியம் வளர்ச்சி பெற்றது. சூறையாடப்பட்ட நிலத்தில் வாழ்ந்த மக்களையிட்டும், அவர்களின் அடிப்படை பொருளாதார வளங்கள் சார்ந்தும் தேசியத்தை முன்னெடுக்கத் தவறி, குறுந் தேசியத்தை தனது அரசியலாக்கியது.




தேசிய அழிப்பில் பாரம்பரிய நிலம், அதன் மேலான பொருளாதாரம், அது சார்ந்த பண்பாடுகள், அதை அடிப்படையாகக் கொண்ட மொழி அழிக்கப்பட்டது. தேசிய அழித்தொழிப்பு வரலாற்றில் முக்கியமான இரண்டில் இது ஒன்றாகும். மற்றையது மலையக மக்கள் மேல் நடத்தப்பட்ட ஒடுக்குமுறையாகும். இவை இரண்டிலும் தொடங்கிய இனவழிப்பு விரிவாகி பல்வேறு துறைகளிலும் மாறிச்சென்றது. பெரும்பான்மை சிங்கள இனம் சார்ந்த இனவாதிகள், நீண்ட ஒரு திட்டமிட்ட அழித்தொழிப்பாக இதை நடத்தினர். இதை தமிழ் தேசிய மேட்டுக் குடியினர் ஆதரித்து நின்றதும், அதையே இன்று வரை தேசிய கொள்கையாகக் கொண்டிருப்பதும் இன்றைய தேசிய வரலாறாகும். இனவாதம் தனது முதல் முயற்சியாக தமிழ் இனம் என்ற அடிப்படையை அழிப்பதில் தொடங்கியது. ஒரு இனம் இனமாக இருக்க அவசியமான அடிப்படையான நிபந்தனையான ஒரு நிலத் தொடர், அது சார்ந்த பொருளாதாரம், அதன் மேலான பண்பாட்டு கலாச்சார பிணைப்பு, இதைப் பேணும் வகையில் ஒரு மொழி என்பனவாகும். இவை அற்ற ஒரு இனம் தேசியமாக இருப்பதில்லை. இதை சுயமாக கொண்டிராத இனம, தனது தேசியத்தை ஒருக்காலும் பாதுகாக்க முடியாது.


இதை தகர்ப்பதில் சிங்கள் இனவாதிகள் முழுமுனைப்பாக சுதந்திரத்துக்கு முன்பிருந்தே தொடங்கினர். பெரும்பான்மையாக தமிழ் விவசாயிகளை அடிப்படையாகக் கொண்ட எமது சமூகத்தின் தேசிய பொருளாதாரம் சார்ந்த நிலத்தை பறிப்பதன் மூலம், நிலத் தொடரையும், அதன் மேலான பொருளாதாரத்தையும் தகர்க்க முடியும் என்று கருதினர். இதன் மூலம் பண்பாட்டு கலாச்சாரம் முதல் மொழிவரை சிதைக்க முடியும் என்று கண்டனர். இந்த வகையில் அவர்கள் திட்டமிட்ட நிலப்பறிப்பை நடத்தி, திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை நடத்துவதில் தொடர்ச்சியான வன்முறையை சிறுபான்மை இனங்களுக்கு எதிராக நடத்தினர். எல்லைப் புறங்களில் இனச் செறிவுகள் பாரிய மாற்றத்தை தொடர்ச்சியாக மாற்றியமைக்கப்பட்டது. இயற்கையான குடிபரவல் என்பது மாறாக திட்டமிட்ட இன அழிப்பை நடத்தி, சிறுபான்மை இனங்களின் சொந்த பிரதேசங்களை சிங்கள பிரதேசமாக்கினர். இதன் போது எமது போராட்டம் எழத் தவறியதே, எமது தேசியத்தின் அடிப்படையான மையத் தவறாகும். இந்த நிலத்தொடர் மீதான போராட்டம் தான், தமிழ் மக்களின் அடிப்படையான மையப் பிரச்சனையும் கூட.


டி.எஸ்.சேனநாயக்காவே திட்டமிட்ட குடியேற்றத்தை தொடக்கிவைத்தார். இலங்கையின் அபிவிருத்தி என்ற பெயரிலும், தேசிய மயமாக்கல் என்ற பெயரிலும் எல்லைப்புற தமிழ் கிராமங்களை சிங்கள குடியேற்றம் மூலம் கைப்பற்றும் முயற்சியை சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ச்சியாக நடத்தினர். 1931 இல் உருவாக்கப்பட்ட முதல் மந்திரி சபையில் காணி அமைச்சராக இருந்த டி.எஸ். சேனநாயக்காவே, 1948 இல் நாட்டின் பிரதமரானார். இவரே மலையக மக்களின் வாக்குரிமையை பறிக்கவும், நாடற்றவராக்கும் பிரஜாவுரிமை சட்டத்தை இனவாத கண்ணோட்டத்தில் அழுல்படுத்தினார். இதே காலத்தில் தான் தமிழ் தேசிய தலைவர் ஐp.ஐp பொன்னம்பலம் இனவாத அரசுக்கு முண்டு கொடுத்து கைத்தொழில் அமைச்சரானார். இதன் தொடர்ச்சியில் தேர்தல் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தவர்கள், இனவாத அடிப்படையில் சிங்கள ஆட்சிக்கு நிரந்தரமாக வழிவகுத்தனர். இதில் சில கூறுகளை எதிர்த்தே ஜே.வி. செல்வநாயகம் தனி கட்சியை ஆரம்பிக்கின்றார். ஆனால் இன்று தேசிய தலைவர்களாக இருவரையும் குறிப்பிடுமளவுக்கு இன்றைய தேசியம் சீரழிந்து காணப்படுகின்றது. (பார்க்க அண்மையில் பிரபாகரன் செய்தியாளர்களுக்கு வழங்கிய பேட்டியை) 1948 சுதந்திரம் என்பது பிரிட்டனின் காலனித்துவ தொடர்ச்சியையும், அவர்களின் நலனையும் பேண உறுதியளித்து பெற்றுக் கொண்டதே. இதைத் திசைதிருப்ப இனவாத பிளவை வித்திடுவது மட்டுமே, ஆட்சியை தொடர இருந்த ஒரு நெம்பு கோலாகும். இந்த வகையில் இனச் சிதைவை உருவாக்க சிங்கள இனவாதிகள் திட்டமிட்டனர். தமிழ் அதிகார வர்க்கத்தை பாதுகாக்க தமிழ் இனவாதத்தை எதிர் நிலையில் கைக்கொண்ட வரலாற்று தொடர்ச்சியில், சிங்கள இனம் பெரும்பான்மையாக இருந்ததால் சிங்கள இனவாதம் கொழுவேற்றது.



காலனித்துவ அடிப்படையாகக் கொண்டு ஆட்சியேறிய இனவாதிகள் ஏற்றிய கொடியே இனவாதத்தை பறைசாற்றியது. இலங்கை கொடி ஒரு சிங்கள ஆதிக்க மத அடிப்படைவாத இனவாத கொடியாகும். இக் கொடியின் முக்கிய பகுதி 1815 ம் ஆண்டு நிலப்பிரபுத்துவ கண்டி ஆட்சியின் கொடியில் இருந்தே எடுக்கப்பட்டது. 1948ம் ஆண்டு போலிச் சுதந்திரத்தை ஏற்றபோது கண்டிக் கொடியே பறக்கவிடப்பட்டது. இன்று உள்ள கொடி 1952ம் ஆண்டு இனவாதிகளால் மீளமைக்கப்பட்டது. வாள் ஏந்திய சிங்கம், சிங்கள அரசின் பரம்பரை வழியை உறுதி செய்கின்றது. சிங்கத்தைச் சுற்றி உள்ள நான்கு மூலையில் உள்ள அரச மரம் பௌத்த சமயத்தை முதன்மைப் படுத்துகின்றது. இதற்கு அடுத்து காணப்படும் நீள் சதுர செம்மஞ்சள் பகுதி தமிழர்களையும், அடுத்துள்ள பச்சை முஸ்லீம் மக்களையும் குறிக்கின்றது. மலையக மக்களை ஒட்டு மொத்தமாகவே நிராகரிக்கின்றது. இந்த கொடியின் எழில் ஒருபங்கு செம் மஞ்சளும், இது போன்று பச்சையும் அமைய வேண்டும். இதைச் சுற்றி மஞ்சள் ஓரம் உண்டு. இந்தக் கொடி பௌத்த மதத்துக்கும், சிங்கள பரம்பரைக்கும் முதன்மை வழங்கிய, ஒரு பௌத்த சிங்க இனவாதக் கொடியாக திகழ்கின்றது. இதற்கு மாற்றாகவே இன்றைய தமிழ் தேசியத்தின் பெயரில் உள்ள புலிக் கொடியும் காணப்படுகின்றது. அனைத்திலும் பச்சை இனவாதமும், சிறுபான்மை இனங்கள் மேலான இன வெறுப்பும் மண்டிக்கிடக்கின்றது. மக்களின் உழைப்பு, மக்களின் ஐக்கியம் என்று எதையும் முன்வைத்து, இந்தக் கொடிகளை பறக்கவிடப்படவில்லை.



இனவாத கொடியை பறக்க விட்டவர்கள், இனவொடுக்கு முறையை சிறுபான்மை இனங்கள் மேல் சமூக மயமாக்கினர். இந்த திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் சார்ந்து 1931 க்கும் 1943 க்கும் இடையில் 115 லட்சம் ரூபா விவசாய அபிவிருத்திக்கும், 33 லட்சம் குடியேற்றத்துக்கும் என அன்றைய பெறுமதிப்படி ஒதுக்கிய டி.எஸ். சேனநாயக்கா, தமிழ் எல்லையோர குடியேற்றத்தை தொடங்கினார். திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தின் ஊடாக அம்பாறை 1960ம் ஆண்டு மட்டக்களப்பில் இருந்து பிரிக்கப்பட்டது. 1947க்கும் 1974 க்கும் இடையில் காணி அபிவிருத்தி, நீர்ப்பாசன திட்டம், குடியேற்றத்துக்கு அன்றைய பெறுமதிப்படி 370 கோடி ரூபாவை செலவு செய்துள்ளது. இதில் பெருமளவில் சிங்கள குடியேற்றத்தை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டது.


1952 இல் கல்லோயத் திட்டம் மூலம் பட்டிப்பளை ஆறுக்கு குறுக்கே கட்டிய அணை சேனநாயக்கா சமுத்திரமாகியது. இது திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை விரிவாக்கும் அடிப்படையில் உருவாக்கியது. அழகியபாறை அம்பாறை மாவட்டமாகவும் திரிபடைந்தது போல், சிங்கள குடியேற்றம் சார்ந்து உருவான தேர்தல் தொகுதி திகமடுல்லையானது. 1952 இல் தொடங்கிய கல்லோய குடியேற்றத் திட்டம் போல் திருகோண மலையில் அல்லை - கந்தளாய் குடியேற்ற திட்டம் உருவாக்கப்பட்டது. முசலி - மணலாறு குடியேற்றம் மன்னார் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டது. அத்துடன் கொண்டைச்சி திட்டம் மூலம் மரமுந்திரிகை திட்டம் அறிமுகமானது. கடற் கரையோர மீன் பிடி சார்ந்தும், முந்திரிகை தோட்டம் என்ற பெயரிலும் சிங்கள குடியேற்றம் உருவாக்கப்பட்டது. வாவுனியாவில் பாவற்குள திட்டம் உருவானது.



1941ம் ஆண்டு டி.எஸ். சேனநாயக்கா கல்லோயத் திட்டத்தை அழுலுக்கு கொண்டு வந்தார். இதன் மூலம் 44 குடியேற்றக் கிராமம் உருவாக்கப்பட்டது. இதில் 38 சிங்கள கிராமமாகும். மிகுதியான ஆறு கிராமங்கள் தமிழ் மொழி பேசுவோருக்கு வழங்கிய போதும், குடியேற்றுத்துக்கு திட்டமிட்டே நீர் வழங்கப்படவில்லை. அல்லது சிங்களப் பகுதியூடாகவே நீர் வழங்கப்படுவதாக இருந்தது. கல்லோயத் திட்டம் தொடங்கும் முன்பு அங்கு 3000 சிங்களவரே இருந்தனர். இது இன்று 146 371 யாக மாறிவிட்டது. 1901 இல் கந்தளாய் பிரதேசத்தில் மொத்த சனத்தொகையில் தமிழர் 79 பேரும், 55 முஸ்லிம்களும், 16 சிங்களவரும் இருந்தனர். 1921 குடிசன மதிப்பீட்டில் ஒரே ஒரு சிங்களவரே அங்கு இருந்தார். 1981 குடிசன மதிப்பீட்டில் சிங்களவர் 31206 பேரும், முஸ்லீம்கள் 4323பேரும், தமிழர் 2001பேருமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட குடியேற்றங்கள் பாரம்பரியமாக வாழும் மக்களை சொந்த மண்ணில் இருந்தும், அவர்களின் பொருளாதார வாழ்வில் இருந்தும் துரத்துவதன் மூலம் தேசிய பண்புகளை அழித்தொழிப்பதை மையமாகக் கொண்டு இருந்தது. இது அம்பாறை மாவட்டத்தின் மொத்த இனவிகிதத்தையே மாற்றியமைத்தது. அம்பாறை மாவட்ட வாக்காளர் எண்ணிக்கையையே தலைகீழாக்கியது.



ஆண்டு முஸ்லீம் வாக்களர் சிங்கள வாக்களர்

1947 37000 2394

1952 42000 3119

1956 44000 3905

1960 52000 23000

1965 57000 31000

1970 62000 39000

1977 68000 46000

1982 87236 75378



இனஅழிப்பில் முஸ்லீம் மக்களின் மண்ணையும் அபகரித்தனர். இனவாதம் மலையக மக்களில் தொடங்கி முஸ்லீம் தமிழ் என்று அனைத்து சிறுபான்மை இனங்களின் பாரம்பரிய பிரதேசங்களை அழித்தொழிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால் தமிழ் குறுந்தேசியம், அனைத்து சிறுபான்மை இனங்களின் நலன்களை உயர்த்தத் தவறியது. மாறாக அவர்களை எதிரியாகக் காட்டியும், பண்பாட்டு பொருளாதார கூறுகள் மூலம் அவர்களை இழிவாக்கியும் சுரண்டவும், அவர்களை அழித்தொழிக்க சிங்கள இனவாதிகளுடன் ஒரே அணுகுமுறையையே கையாண்டனர், கையாளுகின்றனர். தமிழ் மக்களினதும், சிறுபான்மை தேசிய இனங்களினதும் பாரம்பரிய பிரதேசங்கள் சூறையாடப்பட்ட போது, இதற்காகவும் அந்த ஏழை எளிய மக்களுக்காகவும் யாரும் போராடவில்லை. இடதுசாரிகள் போல் இனத் தேசியவாதிகளும் பாராளுமன்றத்தில் ஒரு கண்டன அறிக்கை விடுவதுடன் இதை ஊக்குவித்தனர். அதே நேரம் காலத்துக்குக் காலம் பாராளுமன்றத்தில் இனவாத அரசுக்கு பக்கபலமாகவும், ஆட்சியில் பங்கேற்றும் பன்றியைப் போல் திகழ்ந்தனர். இந்த இன அழிப்பு இந்த பன்றிகளின் சாக்கடை நாற்றத்தில் செழித்து வளர்ச்சி பெற்றது. அம்பாறை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 1752.4 சதுர மைல்களாகும். இதில் 1005.96 சதுர மைல்கள் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் மூலம் தனி சிங்கள பிரதேசமாக்கப்பட்டது. அம்பாறை மாவட்டத்தின் சனத் தொகை பரம்பல் இதை துல்லியமாகத் தெளிவாக்குகின்றது. 1981ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு எமக்கு திட்டமிட்ட குடியேற்றம் மூலம் மாற்றியமைத்த ஒரு இன அழிப்பை நிறுவுகின்றது.



இனப்பிரிவு சனத் தொகை விகிதாசாரம்

முஸ்லீம்கள் 161 481 41.6

சிங்களவர் 146 371 37.6

தமிழர் 78 315 20.1


1981 க்கு முந்திய மக்கள் தொகை இனரீதியாக எப்படி திட்டமிட்டு அழிக்கப்பட்டது என்பதை புள்ளிவிபரங்கள் தெளிவாக்குகின்றன. மட்டக்களப்பு மாவட்டம் இன்றைய அம்பாறை மாவட்டம் உள்ளடக்கிய ரீதியாக காணப்படும் இனம், பரம்பல், தெளிவாகவே இனவாதிகளின் இன அழிப்பையும் மௌனம் காத்த தமிழ் குறுந் தேசிய இனவாதிகளிள் யாழ் மையவாத தேசியத்தையும் அம்பலம் செய்கின்றது.



ஆண்டு தமிழ் மொழி பேசுவோர் சதவீதம் சிங்கள மொழி பேசுவோர். சதவீதம்

1827 99.62 0.00

1881 93.27 4.75

1891 93.20 5.21

1901 92.34 5.21

1911 92.95 3.74

1921 93.12 4.56

1946 92.55 5.83

1953 87.54 11.52



அம்பாறை மாவட்டம் (1963 க்கு பின் தனி மாவட்டமானது)



ஆண்டு தமிழ் மொழி பேசுவோர் சதவீதம் சிங்கள மொழி பேசுவோர். சதவீதம்

1963 70.22 29.37

1971 69.47 30.18

1981 62.03 37.64



மட்டக்களப்பு மாவட்டம் (புதிய அம்பாறை மாவட்டம் நீங்களாக)

ஆண்டு தமிழ் மொழி பேசுவோர் சதவீதம் சிங்கள மொழி பேசுவோர். சதவீதம்

1963 95.60 3.35

1971 94.66 4.49

1981 95.95 3.21


திட்டமிட்ட இன அழிப்பை திட்டமிட்ட குடியேற்றம் மூலம் மட்டக்களப்பு எல்லையோரங்களில் தொடங்கிய இனவாதிகள், அதை இன ரீதியாக அறுவடை செய்ய அம்பாறையை தனிமாவட்டமாக்கினர். சுதந்திரத்துக்கு பின் பாரிய குடியேற்ற திட்டங்கள் மூலம், தமிழ் முஸ்லீம் பாரம்பரிய பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டன. தமிழ், முஸ்லீம் விவசாயிகள் அந்த மண்ணில் இருந்து படிப்படியாகத் திட்டமிட்டே அகற்றப்பட்டனர். ஆனால் இந்த இனவாதத்தை எதிர்த்து போலி இடதுசாரிகள் முதல் இனத் தேசியவாதிகள் வரை போராடவில்லை. பாராளுமன்ற கதிரை கிடைக்கும் என்ற ஒரு நிலைகளில் போராடும் போலி இடதுசாரிகள் முதல் இனத் தேசியவாதிகளே இனங்களை பிளந்து குளிர்காய்ந்தனர். நிலத்துடன் வாழ்வை நடத்தி உழைக்கும் விவசாய மக்கள் மேல் கொண்டிருந்த இழிவான சமூக கண்ணோட்டமும், வர்க்க வெறுப்பும் அந்த மக்களையிட்டும், மக்களின் தேசிய மற்றும் பொருளாதார நலனை முன்வைத்தும் போராடவில்லை. மாறாக இந்த இனவாத வர்க்க சமூக அழிப்பின் மேல் குளிர்காய்ந்தார்கள். இந்த திட்டமிட்ட குடியேற்றம் பல்வேறு பிரதேசங்களின் ஒரு தொடர் கதையாக இருந்த போது, போலி இடதுசாரிகள் முதல் போலி தேசியவாதிகள் ஈறாக இதில் கும்மாளம் போட்டனர். இது இன்றுவரை இந்த அடிநிலை மக்களின் வாழ்வின் ஆதாரங்கள் மேல், இந்த தேசியத்தை முன்வைக்கவில்லை, முன்வைக்கப் போவதுமில்லை. தேசிய இனங்கள் மற்றும் சிறுபான்மை இனங்களின் பாரம்பரிய வாழ்விடங்கள், அவர்களின் பொருளாதாரங்கள் இன வரலாற்றில் அழிக்கப்பட்டது. இதை மேலும் ஆராய்வோம்.


திருகோணமலையில் கந்தளாய், மொறவேவ, அல்லை, பதவியா போன்ற சிங்கள குடியேற்றம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. கந்தளாய், மொறவேவத் திட்டமிட்ட இனக் குடியேற்றத்தில் 2300 சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டனர். இப்படித் தொடர்ச்சியான குடியேற்றங்கள் நடத்தப்பட்டன. திருகோணமலையில் 1880 இல் 935 சிங்கள மக்களே வாழ்ந்தனர். இது 1981 இல் 86341 யாக அதிகரித்துள்ளது. சிங்கள மக்கள் இன்று இந்த மாவட்டத்தில் பெருபான்மை இனமாகிவிட்டனர். 1880 இல் 14 மடங்கு தமிழ் இனத்தைவிட குறைவாக இருந்த சிங்களவர், இன்று பெரும்பான்மை இனமாகிவிட்டனர். திருகோணமலையில் நடந்த திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை ஆராய்வோம்.



ஆண்டு சிங்களவர் தமிழர் முஸ்லிங்கள்

1881 935 14394 5746

1891 1109 17117 6426

1901 1203 17 069 8258

1911 1138 18 913 9529

1921 1496 18138 12662

1946 15706 30433 22136

1953 15296 34035 27748

1963 39950 51060 41950

1971 55308 67516 60698

1981 86341 86743 74403



சிறுபான்மை இனங்களை திட்டமிட்டு பெரும்பான்மை இனம் சார்ந்து இனவாதிகள் நடத்திய அழித்தொழிப்பு ஒரு தொடர்ச்சியான ஒரு சமூக நடவடிக்கையாக நடந்து வந்துள்ளது. சிறுபான்மை இனங்களின் நிலப்பறிப்பு நடந்தபோதும், அந்த மக்களின் பொருளாதாரம் சூறையாடப்பட்ட போதும் எமது தேசியம் எழுச்சி பெறவில்லை. மாறாக யாழ் நலன்களில் இருந்தே தேசியம் முன்வைக்கப்பட்டது. அதையே இன்றும் தேசியம் கோரி ஆயுதமேந்தியுள்ளது. ஒரு இனஅழிப்பின் வரலாறு பாரிய இனவழிப்பு ஊடாகவே நகர்ந்து வந்துள்ளது. 1901 ஆண்டு இலங்கையை ஒன்பது மாகாணங்களாக பிரித்த போது வடக்கு 8700 சதுரக் கிலோ மீற்றராகவும் (இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 13 சதவீதமாக), கிழக்கு 10 440 சதுர கிலோ மீற்றராகவும் (மொத்த நிலப்பரப்பில் 16 சதவீதமாகவும்) இருந்தது. இங்கு வாழ்ந்த சனத்தொகை முறையே 340 936 யாகவும் (இலங்கை சனத்தொகையில் 10 சதவீதமாகவும்), 173 602 யாகவும் (இலங்கை சனத்தொகையில் 5 சதவீதமாகவும்) இருந்தனர். 1948 போலிச் சுதந்திரத்தை தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் இருந்து 509 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பு நீக்கப்பட்டு, புதிய மாகாண அமைப்பு உருவானது. 1901இல் தமிழரின் மரபுவழித் தாயகமான 29 சதவிகித நிலப்பரப்பு இருந்தது. இது 1995 இல் 17 வீதமாக குறைந்து போனது. அதாவது சுதந்திரத்தின் பின்பு கிழக்கில் 7 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் பரப்பையும், வடக்கில் இருந்து 500 சதுர கிலோ மீற்றர் பரப்பையும் திட்டமிட்ட இனக் குடியேற்றம் மூலம் சிங்கள மயமாக்கினர். 1901 இல் தமிழர் வாழ் நிலப்பரப்பு 19100 ச.கிலோ மீற்றராக இருந்தது. 1901 இல் 65 சதவீத கடற்கரைகளும் தமிழர் நிலப்பரப்பில் காணப்பட்டது. ஆனால் இன்று அவை முற்றாக குறைக்கப்பட்டுள்ளது. 1948 இல் கிழக்கு மாகாணத்தில் 5 சதவீதமாக இருந்த சிங்கள மக்கள், 1995 இல் 24 சதவீதமாக அதிகரித்துள்ளனர். கிழக்கு மற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்தில் திட்டமிட்ட குடியேற்றத்தினை ஆராய்வோம்.



கிழக்குமாகாணம் % கிழக்குமாகாணம் % திருகோணமலை% திருகோணமலை %
தமிழ் மொழி சிங்கள மொழி தமிழ் மொழி சிங்கள மொழி

1827 99.24 0.53 98.45 1.53

1881 93.82 4.66 90.72 4.21

1891 93.89 5.06 91.44 4.3

1901 91.80 5.05 89.04 4.22

1911 93.40 3.76 90.54 3.82

1921 93.95 4.53 92.13 4.38

1946 87.80 9.87 75.09 20.68

1953 85.50 13.11 78.8 18.22

1963 79.25 19.6 69.89 28.9

1971 78.61 20.7 70.2 28.8

1981 74.40 24.92 65.38 33.62



கிழக்கு மாகாணத்தில் மாவட்ட ரீதியாக இனங்களின் இயல்புத் தன்மையும் திட்டமிட்ட குடியேற்றமும்



திரு திரு திரு திரு மட்ட-அம் மட்ட-அம் மட்ட-அம் மட்ட-அம்

சிங்களவர் தமிழர் முஸ்லீம் ஏனையோர் சிங்களவர் தமிழர் முஸ்லீம் ஏனையோர்

1921 3 % 55.2 % 38.1 % 3.5 % 4.5 % 53.3 % 39.7 % 2.3 %

1946 20.6 % 44.5 % 30.5 % 3.7 % 5.9 % 50.3 % 42.2 % 1.6 %

1971 28.8 % 38.2 % 32 % 1 % 17.7 % 46.4 % 35.2 % 0.6 %



கிழக்கு மாகாணத்தின் மக்கள் தொகை



ஆண்டு சிங்களவர் வீதம் தமிழர் வீதம் முஸ்லீம் வீதம்

1827 250 1.3 34758 75.65 11533 23.55

1881 5947 4.5 75408 61.53 43.001 30.65

1891 7512 4.75 87701 61.55 51206 30.75

1901 8778 4.7 96926 57.5 62448 33.15

1911 6906 3.75 101181 56.2 70409 36.0

1921 8744 4.5 103551 53.5 75992 39.4

1946 23456 8.4 146 059 52.3 109024 39.1

1953 46470 13.1 167898 47.3 135322 38.1

1963 109690 20.1 246 120 45.1 185750 34.0

1971 148 572 20.7 315 560 43.9 248567 34.61

1981 243 358 24.9 409 451 41.9 315201 32.2



கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட குடியேற்றம் பாரம்பரியமாக வாழ்ந்த மக்களை படிப்படியாக சொந்த மண்ணில் இருந்து அகற்றுவதாக இருந்தது. இதன் மூலம் பல செறிவான இனக் குடியேற்றத்தை நடத்தியதன் மூலம், குறித்த பிரதேசங்களை பிரித்தெடுக்கவும் இனவாத அடிப்படையில் பெரும்பான்மையினரின் நலனை மையமாகக் கொண்ட மாகாணங்களும் உருவாக்கப்பட்டது. திட்டமிட்ட சிங்கள குடியேற்றமும் அதன் அதிகரிப்பும்.



தமிழர் தமிழர் சிங்களவர் சிங்களவர் சிங்கள சனதொகை அதிகரிப்பு

1953 1971 1953 1971
யாழ்ப்பாணம் 477 304 673 043 6 183 20 402 14 219

மட்டக்களப்பு 130 381 246 582 31 174 94 153 62 979

திருகோணமலை 37 517 73 255 15 296 55 308 40 192

புத்தளம் 9010 30 994 31 587 309 298 277 711


மேலுள்ள புள்ளி விபரங்கள் எப்படி திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் மூலம் ஒரு இன அழிப்பை சிங்கள இனவாதிகள் நடத்தினர் என்பதை தெளிவாக காட்டுகின்றது. புத்தளத்தில் 1953 க்கும் 1971 க்கு இடையில் தமிழ் மக்களின் சன தொகை அதிகரிப்பு அண்ணளவாக மூன்று மடங்காக இருக்க, சிங்களவர் தொகை 9 முதல் 10 மடங்காக அதிகரித்துள்ளது. மட்டக்களப்பில் தமிழர் சனத் தொகை அண்ணளவாக இரண்டாக அதிகரிக்க சிங்கள மக்களின் தொகை மூன்று மடங்காகியுள்ளது. திருகோணமலையில் தமிழர் தொகை இரண்டு மடங்காக அதிகரிக்க சிங்களவர் தொகை 3.5 மடங்காக அதிகரித்துள்ளது. இதில் சில குறித்த பகுதிகள் பல மடங்காகவும், எல்லை கிராமங்களில் முற்றாகவே மாற்றி அமைக்கப்பட்டது. அம்பாறை மாவட்டத்தில் சிங்களவர் தொகை அதிகரித்துச் செல்ல, தமிழர் தொகை குறைந்து வருகின்றது. இதுவே புத்தளத்திலும் நடந்தது.


புத்தளம் தேர்தல் தொகுதியில் 1958க்கும் 1976க்கு இடையில் தேர்தல் திணைக்கள அறிக்கைப்படி இனங்களின் விகிதம்

ஆண்டு சிங்களவர் முஸ்லீங்கள் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர் ஏனையோர்

1958 34.7 41.0 18.9 - 5.4

1976 37.9 38.5 19.9 2.9 0.73



புத்தள மாவட்டத்தில் 1981 இல் எடுத்த மக்கள் தொகை கணிப்பீடுகள்



ஆண்டு சிங்களவர் முஸ்லீங்கள் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர் ஏனையோர்

1981 82.6 9.7 6.7 0.6 0.4


உண்மையில் புத்தளம் முற்றாக மாற்றியமைக்கப்பட்டுவிட்டது. எல்லையோர மீன்பிடி அபிவிருத்தி மற்றும் பல்வேறு திட்டங்களின் பெயரில் திட்டமிட்ட இன குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. தமிழர் மற்றும் முஸ்லீம்களின் வாழ்விடங்கள் சூறையாடப்பட்டன. சுதந்திரத்துக்கு முன் வரை இயல்பான மக்களின் குடிபெயர்ச்சிகள் இப்பிரதேசங்களில் இருந்துள்ளது. ஆனால் போலிச் சுதந்திரத்துக்கு முன் தொடங்கி சுதந்தித்தின் பின் திட்டமிட்ட குடியேற்றம் ஒரு போக்காக இனவழிப்பாக மாறியது. திருகோணமலையில் 1921 இல் 4.6 சதவீதமாக இருந்த சிங்கள மக்கள் 1971 இல் 28.8 யாகவும், மட்டக்களப்பு அம்பாறையில் 4.5 இல் இருந்து 17.7யாகவும் மாறியது. இந்த திட்டமிட்ட குடியேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு எமது போராட்டம் ஆரம்பிக்க தவறியதே, எமது போராடத்தின் அடிப்படையான திசை விலகலாகும. தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசம் மட்டுமல்ல, கிழக்கில் வாழும் தமிழ் மொழி பேசும் 32.4 சதவீதமான முஸ்லீம் மக்களின் நிலங்களும் இன அழிப்பின் ஊடாக சூறையாடப்பட்டன. தமிழ் பேசும் முஸ்லீம் மக்களையும் தமிழ் தேசியம் எதிரியாக காட்டிய போது அம்பாறையில் வாழும் 41.6 சதவீதமானவர்களையும், திருகோணமலையில் வாழும் 29.0 சதவீதமானவர்களையும், மன்னாரில் வாழும் 26.6 சதவீதமானவர்களையும், மட்டக்களப்பில் வாழும் 24 சதவீதமானவர்களையும், வவுனியாவில் வாழும் 6.9 சதவீதமானவர்களையும், முல்லைத்தீவில் வாழும் 4.9 சதவீதமானவர்களையும், யாழ்ப்பாணத்தில் வாழும் 2.4 சதவீதமானவர்களையும், புத்தளத்தில் வாழும் 9.7 சதவீதமானவர்களையும் நேரடியாக தமிழீழ எல்லைக்குள்ளேயே எதிரியாக மாற்றியது. தமிழ் குறுந் தேசியத்தின் பிற்போக்கான போராட்ட அடிப்படையே நண்பர்களையும் எதிரியாக்கியுள்ளது. தமிழ் தேசிய எல்லைக்குள் வாழ்ந்த சிறுபான்மை இனங்களை எதிரியாக மாற்றிய யாழ் உயர் வர்க்க தேசியம், அந்த மக்கள் உள்ளிட்ட உழைக்கும் பிரிவின் நிலத்தை பெரும் தேசிய இனவாதிகள் திட்டமிட்டு சூறையாடியபோது, அதற்காக போராட முன்வரவில்லை. அதை வரலாற்று ரீதியாக அடையாளம் கண்டு, அந்த மக்களுடன் அந்த மக்களின் பிரச்சனைகளுடாக தன்னை ஆயுதபாணியாக்கவில்லை.


ஏன் தமிழ் தேசியம் இந்த திட்டமிட்ட குடியேற்றத்தை எதிர்த்துப் போராடவில்லை. உண்மையில் இதற்காகவே தமிழ் தேசியம் போராடியிருக்க வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சனையின் அடிப்படையே இதில் தான் அடங்கியுள்ளது. இதை இன்றைய தேசியவாதிகள் முதல் அனைவரும் மறுத்து நிற்பது ஏன்? சிங்கள இனவாதிகள் தமிழ் இனத்தை அழிக்க உருவாக்கிய மிகவும் திட்டமிட்ட இனவாதச் செயலாகும். தமிழ் தேசிய தலைவர்கள் என்றும் சிங்கள தேசியவாதிகள் என்றும் பறைசாற்றிய பிழைப்புவாதிகள், கண்டு கொள்ளத் தவறியதை இன்னொரு சமகால நிகழ்வுடன் ஒப்பிட முடியும். பேச்சுவார்த்தை ஊடாகவே புத்தளத்தில் 25000 ஏக்கர் மரமுந்திரிகை உற்பத்தி செய்ய, 40 கோடி ரூபாவை நோர்வேநாட்டு பன்நாட்டு நிறுவனம் ஒன்று முதலிட்டு உள்ளது. இதுபோன்று இலங்கையில் மற்றொரு நீர்ப்பாசன குடியேற்ற திட்டமாக 400 கோடி டொலரில் உருவாக்கிய மகாவலி நீர்த் தேக்கத் திட்டம் சார்ந்து, ஒரு லட்சம் ஏக்கர் நிலம் வெளிநாட்டு பன்நாட்டு கம்பெனிகளுக்கு தாரை வார்க்கப்பட்டது. இதை இன்று வரை தமிழ் தலைமை போல் சிங்கள தலைமையும் தேசியத்தின் பெயரில் பேசியது கிடையாது. இந்த மகாவலித் திட்டம் பன்நாட்டு கம்பனிக்கு சொந்த மண்ணை தாரைவார்த்த அதே வேகத்தில், சிங்கள குடியேற்றத்தை வடக்கு கிழக்கு நோக்கி நகர்த்துவதை அடிப்படையாகக் கொண்டு இருந்தது. சிங்கள மக்களின் நிலங்களை வெளிநாட்டு கம்பனிக்கு தாரை வார்த்தபோது, சிங்கள தேசியவாதிகள் தமிழ் தேசிய வாதிகள் போல் கண்ணை மூடிக்கொண்டுதான் தேசியத்தை பற்றிப் பிதற்றினர்.


தமிழ் பாரம்பரிய பிரதேசம் திட்டமிட்ட சிங்கள குடியேற்ற ஆக்கிரமிப்பால் அழிக்கப்பட்ட போது, தமிழ் தேசிய போராட்டம் உருவாகவில்லை. ஏன்னெனின் இந்த தமிழ் பாரம்பரிய பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் விவசாயிகளும், அடிமட்ட கூலிபெறும் ஏழைக் கூலிகளுமே. அத்துடன் சாதிய ரீதியாக தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள். அந்த மக்களின் உழைப்பு மற்றும் வளங்கள் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்ட போதும் சரி, அவர்களின் நிலங்களை ஆக்கிரமித்த போதும் சரி, இதை மறைமுகமாக தமிழ் தேசியம் முண்டுகொடுத்தனர். தேசியத்துக்கு தலைமை தாங்கியவர்கள் வர்க்க ரீதியாகவும் சாதி ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் விவசாயிகளுக்கும் கூலிகளுக்கும் எதிரானவர்களாக இருந்தனர். எல்லையோரங்களில் இருந்த மக்கள் பெரும்பாலானவர்கள் சொந்த நிலம் கொண்ட ஏழை மற்றும் நடுத்தர விவசாயிகளாக இருந்தனர். ஆனால் தமிழ் தேசிய தலைவர்கள் நிலப்பிரபுத்துவ மற்றும் தரகு முதலாளித்துவ வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்தமையால், வர்க்க ரீதியாக அந்த மக்களுடன் தம்மை அடையாளம் காணமுடியாததுடன், தமது எதிரி வர்க்கமாகவே தமிழ் குறுந் தேசியம் எப்போதும் கருதியது, கருதி வருகின்றது. இன்று புலிகளின் குறுந் தேசியத்திலும் கூட இதுதான் அதன் அரசியல் அடிப்படையாகும்.



எல்லையோரங்கள் நெடுகிலும் நிலத்துடன் வாழ்ந்த விவசாயியும் சரி, மீன்பிடிப்பை அடிப்படையாகக் கொண்ட மீனவர் வாழ்விலும் சரி, அந்த மக்கள் தமது சொந்த வாழ்விடம் சார்ந்து கொண்டிருந்த சுயபொருளாதாரம் அழிக்கப்பட்டு ஆக்கிரமிப்புக்குள்ளான நிகழ்வே, உண்மையான தேசியத்தின் மையக் கூறாகும். இதைக் கொள்கை ரீதியாக கூட இன்று தேசியவாதிகள் முதல் போலி இடதுசாரிகள் வரை ஏற்றுக் கொள்ளவில்லை. தேசிய தலைமைகள் யாழ் மையவாதத்தில் இருந்தே உருவானது. யாழ் குறுந் தேசிய பண்பாடாக இருந்த பிரதேச இழிவு கண்ணோட்டம், முஸ்லீம் எதிர்ப்புடன் கூடிய இன மற்றும் மத பிரமைகள், சாதி பற்றிய பெருமித உணர்வு, உழைப்பு பற்றிய இழிவான கண்ணோட்டம், உழைக்கும் மக்களின் நிறம் பற்றிய இழிவு என்பன இணைந்து, உண்மையான தமிழ் தேசியம் அழிக்கப்பட்ட போது மௌனமாக அங்கீகரித்து, அதனை செயல்படுத்த பலமுறை இனவாத அரசில் அங்கம் வகித்து நக்கிப்பிழைத்தனர்.


நடந்து கொண்டிருக்கும் குறுந் தேசிய போராட்டம் யாழ் மையவாத நலன்களில் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து, எழுந்த ஒரு எதிர்வினைதான். இதில் ஒன்று தான் தரப்படுத்தல். யாழ் அல்லாத தமிழ் பிரதேச மக்களின் பல்கலைக்கழக கல்வி மறுக்கப்பட்டு இருந்தபோது எழாத தேசிய உணர்வுகள், யாழ் மையவாத நலன்களுக்கு பல்கலைக்கழகம் சார்ந்து பாதிப்பு ஏற்பட்ட போதே குறுந் தேசியமாக உயிர்த்தெழுந்தது. இங்கும் யாழ் அல்லாத மக்களின் நலனில் இருந்து அல்ல என்பது, இன்று வரை நிதர்சனமான உண்மையாகும். இதை யாரும் மறுக்க முடியாது. ஒரு அமைதி திரும்பும் போது தரப்படுத்தல் நீக்கப்படுமாயின், யாழ் அல்லாத தமிழ் பிரதேச மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதிக்கு இன்றைய தமிழ் தேசிய வாதிகளே வேட்டு வைப்பார்கள். ஏன் தமிழீழம் கிடைக்குமாயின் அங்கு பல்கலைக்கழக அனுமதி திறமையின் அடிப்படையிலா? அல்லது பிரதேச அடிப்படையிலா? எனின், இங்கு யாழ் மையவாத தமிழ் குறுந்தேசியம் திறமையையே முன்னிலைப்படுத்தும். மற்றைய பின்தங்கிய தமிழ் பகுதிகள் புறக்கணிக்கப்படும் என்பது, நாம் சொல்ல வேண்டியதில்லை.


தேசியம் தனது திசைவிலகலால் குறுகிய நலனை முன்னிலைப்படுத்தியது. தமிழ் பிரதேசம் நிலத்தொடர் சார்ந்து அபகரிக்கப்பட்ட போது, அதில் தேசிய பொருளாதாரம் அழிக்கப்பட்டது. அந்தப் பொருளாதாரம் சார்ந்து மக்களின் வாழ்வு சூறையாடப்பட்டது. இந்த மையமான விடையத்தை தேசியம் முன்னெடுக்கத் தவறிய வரலாற்று தொடர்ச்சியில் தான், எமது தேசியம் ஏகாதிபத்திய நுகத்தடியில் தொங்குகின்றது. எமது தேசியத்தில் பெரும்பான்மையான விவசாயிகள் தமது சொந்த பொருளாதாரம் சார்ந்து, சொந்த உள்சுற்றுச் சந்தை சார்ந்து வாழ்ந்த இந்த மக்களின் நலனையே தமிழ் தேசியமாகக் கொண்டிருக்க வேண்டும். தேசியம் என்பது சொந்த உற்பத்தி சார்ந்து, சொந்த சந்தையைச் சார்ந்து வாழ்வதைக் குறிக்கின்றது. அதாவது தேசிய பொருளாதாரம் என்பது அந்த மக்களின் உற்பத்தி மற்றும் உழைப்பு சார்ந்து அடையாளம் காணப்படவேண்டும் இதை எமது போராட்டம் இன்று வரை தேசியத்தின் பெயரில் புறக்கணித்தே வருகின்றது. மாறாக ஏகாதிபத்திய கைக்கூலிகளாக, ஏகாதிபத்திய சூறையாடலுக்கு ஏற்ற தமிழீழம் என்றும், இஸ்ரேலிய கனவுகள் பற்றியும் சிங்கப்பூர் சொர்க்கம் பற்றியுமே தமிழ் தேசியம் மார்புதட்டுகின்றது. இந்த யாழ் மையவாத பூர்சுவா கண்ணோட்டத்தையே அடிப்படையாகக் கொண்டு தேசியம் பிரதிபலிக்கின்றது. இந்த தேசியம் பொருளாதாரம் பற்றி தொடர் கட்டுரை ஒன்றில் விரிவாகப் பார்ப்போம்.


எமது தேசிய நிலம் சூறையாடப்பட்ட போதும், மக்களின் தேசிய வளங்கள் பறிக்கப்பட்ட போது, அந்த மக்களின் பொருளாதார வாழ்வு அழிக்கப்பட்ட போது உருவாகாத தேசியம், எப்படி சரியான தேசியமாக இருக்க முடியும். குறைந்த பட்சம் அந்த மக்களின் நலன்களை இன்று கூட அடையாளம் காணவும், அதை மையமான கோசமாகவும் முன் வைத்து அவர்களை அணிதிரட்டாத போது, இந்த தேசியம் ஏகாதிபத்தியத்திடம் சரணடைவது தவிர்க்கமுடியாது. தமிழ் மக்களின் தேசிய பிரச்சனையின் அடிப்படையே இதில் தான் தங்கியுள்ளது.

இலங்கையில் மக்கள் தொகையில் சிங்களவர் 72 சதவீதமாகவும், இலங்கைத் தமிழர் 11.2 சதவீதமாகவும், மலையகத் தமிழர் 9.3 சதவீதமாகவும், முஸ்லீம்கள் 7.1 சதவீதமாகவும், ஏனையோர் 0.5 சதவீதமாகவும் இருந்த போதும், உயர் வர்க்க தமிழர்களின் அரசு வேலை வாய்ப்புகள் மொத்த மக்கள் தொகையில் ஆராயும் போது ஒரு சமூகத்தின் அதிகாரத்தை தெளிவாக்குகின்றது. இதைத் தனியாக ஆராய்வோம்.



மருத்துவதுறையில் இனரீதியாக சதவீகிதத்தில் பார்ப்போம்.

சிங்களவர் தமிழர் முஸ்லிம் பறங்கியர்

1870 8.7 - - 91.3

1907 24.6 14.7 - 60.7

1910 21 28 - 51

1920 31 36 - 32

1925 42.5 30.8 - 26.7

1930 47 33 - 19

1935 55.1 25.8 - 19.1

1936 59.4 33.3 - 7.3

1956 54.1 38.1 1.5 6.3

1962 53.4 41.1 2.1 3.5



குடியியல் துறையில் இனரீதியாக சதவீகிதத்தில் பார்ப்போம்.

சிங்களவர் தமிழர் முஸ்லிம் பறங்கியர்

1870 7 - - -

1907 33.3 16.7 - 50

1925 43.6 20.5 - 35.9

1935 40.0 33.3 - 27.3

1936 59.5 26.7 - 13.8

1956 57.1 29.4 1.7 11.8

1962 73.7 17.9 2.3 6.0

1975 81.3 15.9 2 0.8


பொது துறையில் இனரீதியாக சதவீகிதத்தில் பார்ப்போம்.

சிங்களவர் தமிழர் பறங்கியர்

1907 20 10 70

1910 24 16 60

1920 26.8 17 56

1925 32.2 7.1 60.1

1930 28.1 29.6 42

1935 34.3 28.6 37.1

1936 32.2 25.4 22.4


நீதித் துறையில் இனரீதியாக சதவீகிதத்தில் பார்ப்போம்.

சிங்களவர் தமிழர் முஸ்லிம் பறங்கியர்

1935 26.7 33.3 - 40

1936 49.1 26.4 - 26.5

1956 57.6 30.3 6.1 6.1

1962 60.3 26.4 10.2 2.6

1973 77.6 18.8 3.3 0


பொறியியல் துறையில் இனரீதியாக சதவீகிதத்தில் பார்ப்போம்.

சிங்களவர் தமிழர் முஸ்லிம் பறங்கியர்

1956 42.1 47.7 1.9 8.4

1962 49.6 44.2 1.5 4.7


கணக்காளர் துறையில் இனரீதியாக சதவீகிதத்தில் பார்ப்போம்.

சிங்களவர் தமிழர் முஸ்லிம் பறங்கியர்

1956 35.8 60.2 0 3.9

1962 38.6 60.2 0 1.2


அரசு சேவையில் 1921 இல் சிங்களவர் 46 சதவீதமும், தமிழர் 31.6 சதவீதமாக காணப்பட்டனர். 1946 இல் நிர்வாக சேவை அரைப்பகுதியையும், நீதிச் சேவையில் மூன்றில் இரண்டு பங்கினையும் தமிழர்கள் கொண்டிருந்தனர். நடைமுறை ரீதியாகவே 11.2 சதவீதமான தமிழ் மக்களினதும், அதிலும் குறிப்பாக யாழ் பிரதேசத்தைச் சேர்ந்த மேட்டுக் குடிகளின் அதிகாரத்தைக் காட்டுகின்றது. யாழ் குடா நாட்டில் 40 சதவீதமான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியை மறுத்த யாழ் மேட்டுக்குடிகள், பெண்களையும் அடக்கியொடுக்கியபடி தான் உயர் சாதிய வரிசைப்படிகளில் நின்றே பிரிட்டிஸ்சாரின் கைக் கூலிகளாகி இலங்கையையே ஆண்டனர். யாழ் மேட்டுக்குடி பண்பாட்டுக் கலாச்சார கூறில் மிக மோசமான ஆதிக்க பிரிவாக திகழ்ந்தமையால், இலங்கையில் அனைத்து மக்களின் எதிர்ப்புக்கும் உள்ளாகினர். சொந்த தாழ்த்தப்பட்ட மக்கள் முதல் சொந்த இன பிரதேச மக்களாலும், சிறுபான்மை இனங்களாலும், பெரும்பான்மை இனங்களாலும் வெறுக்கப்படுமளவுக்கு ஒரு ஆளும் பிற்போக்கு வர்க்கமாக திகழ்ந்தனர். சுதந்திரத்துக்கு முன்பாக நீதிச் சேவையில் மூன்றில் இரண்டு பங்கை வைத்திருந்த இந்த ஆங்கிலம் கற்ற தமிழ் மேட்டுக் குடிகள், எப்படி இலங்கையில் நீதியாக நிர்வாகம் செய்திருப்பார்கள்;; இன்று எம் மக்கள் முதல் சிறுபான்மை இனங்களையும், அப்பாவி சிங்கள மக்களையும் ஆயுதமுனையில் அடக்கியாளும் போது, எமது மூதாதையர்கள் பண்பாட்டு கலாச்சார அதிகார வடிவங்கள் மூலம் இலங்கையையே அடக்கியாண்டனர். இங்கு மனிதத்துவம், நீதி, ஜனநாயகம் என்பதெல்லாம் சொந்த வர்க்கத்துக்கானதாகவே இருந்துள்ளது.



ஜி.ஜி.பொன்னம்பலம் 1939 இல் "இப்பாழாய்ப்போன டொனமூர் அரசியல் அமைப்பு வருவதற்கு முன்னர் அரைகுறை அறிவு படைத்த சிங்களவர் எமது கோரிக்கைகளுக்கு செவிசாய்த்தார்கள்" என்று கூறுமளவுக்கு அதிகாரத்தை இலங்கை முழுவதும் யாழ் மேட்டுக்குடிகள் கொண்டிருந்தனர். சுதந்திரத்துக்கு முன் பின் தமிழரின் அதிகாரத்துவ பங்கு எப்போதும் இலங்கையில் உச்சத்தில் இருந்துள்ளது. இந்த அதிகாரத்தை தக்கவைக்கவே ஐp.ஐp.பொன்னம்பலம் 50 க்கு 50 என்ற கோரிக்கையை மேட்டுக் குடிகள் சார்ந்து, தமிழ் தேசிய இனவாதியாகவே முன்வைத்தார். மேட்டுக் குடிகளின் அதிகாரத்தை மற்றைய மக்களுடன் ஜனநாயக பூர்வமாக பகிர்வதை மறுத்த தமிழ் மேட்டுக்குடிகள் அதைத் தக்கவைக்கவே, இனவாதத்தை தமிழ் காங்கிரஸ் மூலம் அன்று முன்வைத்தனர். இலங்கையில் இனவிகிதம் கடந்த நிலையில் பல்வேறு துறைகளில் 50 சதவீதத்துக்கு அதிகமாக அல்லது அதற்கு சற்றுக்குறைவான அதிகார பீடங்களில், யாழ் மேட்டுக் குடி தமிழரின் ஆதிக்கத்தில் இருந்தது. இதை பிரிட்டிஸ்சாருக்கு குண்டி கழுவி விடுவதன் மூலம் நக்கிப் பெறப்பட்டது. சிங்கள மக்களின் காலனித்துவ எதிர்ப்பை ஒடுக்கவும், தமிழரின் கைக்கூலித்தனமே பிரிட்டிஸ்சாரின் காலனித்துவ நீடிப்புக்கு அத்திவாரமாகியது. அதாவது பிரிட்டிஸ்சார் பிரித்தாளும் தந்திரத்தை கையாண்டனர். சிங்கள மக்களின் நீடித்த காலனித்துவ எதிர்ப்புக்கு, அவர்களின் நிலப்பிரபுத்துவ சொத்துரிமை சார்ந்த சுய உற்பத்தி ஒரு காரணமாகும். பிரிட்டிஸ்சாரின் கீழ் கூலி வேலை செய்வதை இழிவாகக் கருதி அதை எதிர்த்து நின்றனர். இதனால் இலங்கையை முழுமையாக ஆங்கிலேய காலனித்துவவாதிகள் பிடித்த பின்பும், இரண்டு எழுச்சிகளை கண்டி சிங்கள மக்களால் நடத்த முடிந்தது. இதற்கு எதிராக செயற்பட்ட யாழ் மேட்டுக்குடிகள் காலனித்துவத்தை தொடரவும், அதன் மூலம் இலங்கையையும் அயல் நாடுகளையும் சுரண்டவும் உலகளவில் செல்வாக்கு மண்டலங்களை பேணவும், யாழ் மேட்டுக்குடியின் கைக் கூலித்தனம் முண்டு கொடுத்தது என்றால் மிகையாகாது. இந்த கைக்கூலிகள் மூலம் காலனித்துவத்தை கட்டி பாதுகாக்க அதற்கு காலனித்துவக் கல்வி அவசியமாகியது. இந்த வகையில் காலனித்துவம் நவீன பாடசாலைகள் யாழ் குடா நாட்டில் உருவாக்கியது.



இதன் தொடர்ச்சியில் இலங்கையில் 1911ம் ஆண்டில் ஆங்கில அறிவு பெற்றவர்களில் தமிழர் 4.9 சதவீதமாகவும், கரையோரச் சிங்களவர் 3.5 சதவீதமாகவும், கண்டிச் சிங்களவர் 0.7 சதவீதமாகவும் இருந்தனர். இது காலனித்துவ நோக்கத்தையும், கல்வியின் பிரிட்டிஸ்சார் மையப்படுத்தி முன்னுரிமை கொடுத்த பிரதேசத்தையும் தெளிவாக காட்டுகின்றன. அதே நேரம் இதற்கு இசைவாக 1911 ம் ஆண்டில் அரசு வேலைகளில் தமிழர் 5.1 சதவீதமும், கரையோர சிங்களவர் 3.6 சதவீதமும், கண்டிச் சிங்களவர் 1.3சதவீதமாக இருந்தனர். காலனித்துவ கல்வி அது சார்ந்த அதிகாரத்துவம் யாழ் மேட்டுக்குடியின் கையில் குவிந்ததை இது காட்டுகின்றது. கல்வியுடன் தொடர்புடைய தமிழ் அதிகார வர்க்கம் ஒரு ஆளும் வர்க்கமாக உருவானது. இந்த வர்க்கம் தனது இழிந்த மனித விரோத நடத்தைகளை ஆதாரமாகக் கொண்டே இலங்கையை அடக்கியாண்டது. இந்த அதிகாரத்துவம் சுதந்திரத்தின் போது உச்சத்தில் இருந்தது. சுதந்திரத்தின் பின்பும் இனவிகிதத்தை விட அதிகமான அதிகாரத்துவ மையங்களில் வீற்றிருந்தனர். 1970 வரையிலும் இனவிகிதத்தை தாண்டியே இலங்கை அதிகார வர்க்கத்தில் தமிழர் இன விகிதத்தை கடந்து இருந்தனர். இதை கீழ் தொடர்ந்து வர உள்ள புள்ளிவிபரமும் தெளிவாக நிறுவுகின்றன. இந்த அதிகார வர்க்கத்தை உருவாக்கிய காலனித்துவ கல்வியே, இன்றைய இன தமிழ் தேசிய சிக்கலுக்கு மையமான கூறாகியது. பெரும்பான்மை இனம் அதிகாரமிழந்த ஒரு பிரிவாக இருந்தமையால், சிங்கள இனவாதத்தை முன்வைப்பது சிங்கள தலைவர்களிடம் ஒரு போக்காக மாறியது. இதை தமிழ் தலைமைகளும் சரி, சிங்கள தலைமைகளும் சரி எதிர் நிலை இனவாதத்தை ஊற்றி வளர்த்து இன்றைய நிலைக்கு இட்டுச் செல்வதில் பரஸ்பரம் ஒரு முனைப்புடன் போட்டியிட்டனர். தமிழ் தலைமை இலங்கை அதிகார வர்க்கத்தின் தமிழ் இன ஆதிக்க விகிதத்தை பாதுகாக்கவும், சிங்கள தலைமை சிங்கள இன அதிகாரத்தை நிறுவவும் நடத்திய போராட்டம், இனமோதலாக இனவழிப்பாக வளர்ச்சி பெற்றது. காலனித்துவம் இதில் குளிர் காய்ந்தது. பிரித்தாளும் இனக் கண்ணோட்டத்தை பிரிட்டிஸ்சார் முன்வைத்து, தமிழ் அதிகார வர்க்கத்தை உருவாக்க கல்வியை ஒரு தலைபட்சமாக யாழ் தமிழருக்கு சலுகை வழங்கியது. இதன் போக்கு மிக மோசமான இன ஒடுக்குமுறையை சிங்கள இனவாதம் தமிழ் மக்கள் மேல் இன்று கையாண்ட போதும், இன்று வரை யாழ் மேலாதிக்கத்தை கல்வியில் நிறுவ முடிகின்றது.



காலனித்துவ காலத்தில் பிரிட்டிஸ்சார் திட்டமிட்டு இனப்பிளவை வித்திட்டு பிரித்தாண்ட போக்கில், அதன் கைக்கூலிகளாக இருந்த தமிழ் அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை மற்றும் சுரண்டலின் தொடர்ச்சியே இலங்கையில் இனப்பிளவுக்கு வித்திட்டது. இந்த தமிழ் பிரிவு அரசியல் அதிகாரத்தில் இருந்து சுருட்டுக் கடை ஈறாக சிங்கள மக்களை படுமோசமாக சுரண்டிக் கொழுத்தது. இதற்கு எதிராக குறுந்தேசிய சிங்கள இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட சிங்கள பிரிவுகள் வளர்ச்சி பெற்றது. காலனித்துவத்தையும், அதன் தொங்கு சதைகளையும் எதிர்ப்பதற்கு பதில் தமிழர்களை எதிர்த்தே, தனது தேசியத்தை சிங்கள குறுந்தேசியம் கட்டமைத்தது. அதாவது இன்று தமிழ் குறுந்தேசியம் எப்படி நவகாலனித்துவ மற்றும் மறுகாலனித்துவ முயற்சியை எதிர்க்காது, ஏகாதிபத்தியத்துக்கு இசைவாக சிங்கள மக்களை எதிராகக் காட்டி தமிழ் இனவாதிகளாக தம்மை நிலை நிறுத்துகின்றனரோ, அதேபோல் அன்று தமிழ் மக்களை எதிரியாகக் காட்டியே சிங்கள இனம் தனது சிங்கள குறுந் தேசியத்தைக் கட்டமைத்தது.



சிங்கள இனவாதிகள் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, தமிழ் இனத்துக்கு எதிரான திட்டமிட்ட இன அழிப்பை நடைமுறைப்படுத்தினர். இது சுதந்திரத்துக்கு முன் பின்னிருந்தே இது தொடங்கியது. பெரும்பான்மை மக்கள் சிங்கள மொழி பேசுபவர்களாக இருந்தால், அதிகாரத்தில் கிடைத்த வசதிகள் அனைத்தையும் இன அழிப்புக்கு வசதியாக பயன்படுத்திக் கொண்டனர். இன அழிப்பை தொடங்கிய போது பலவீனமான இனப்பிரிவுகள் மேலும், பலவீனமான மக்கள் கூட்டங்கள் மேலும் இன அழிப்பு தொடங்கப்பட்டது. இதற்கு தமிழ் கைக்கூலிகள் மற்றும் அறிவித்துறையினரின் நடவடிக்கைகள் ஊக்கியாக இருந்தது. ஒன்று நேரடியாக அவர்களின் முயற்சிக்கு ஒத்துலைத்தனர். இரண்டாவதாக சொந்த சுயநலத்திற்காக சிங்கள மக்களை சூறையாடினர். மூன்றாவதாக பலவீனமான தமிழ் மக்களையிட்டு தமிழ் உயர்பிரிவுகள் கொண்டு இருந்த இழிவான கண்ணோட்டம் அழிப்பை ஊக்கியாக்கியது. இந்தப் போக்குகள் சிங்கள இனவாதிகளுக்கு சாதகமாக இருந்தது. இதை தெளிவாகவே பண்டாரநாயக்கா 1939ம் ஆண்டு ஒரு கூட்டத்தில் பேசும் போது "நாவலப்பிட்டி சிங்கள மகாசபா பொன்னம்பலத்திற்கு ஒரு சிலை எடுக்க வேண்டும். நாவலப்பிட்டியில் சிங்கள மகாசபாவின் கிளையொன்றை ஸ்தாபிப்பதற்கு நாம் பொன்னம்பலத்திற்கு நன்றிக் கடன் பட்டிருக்கின்றோம்." என்றார். தமிழ் மேட்டுக்குடிகளின் இனவாத முயற்சிகளே, சிங்கள இனவாதத்துக்கு அன்று தீனியாக அமைந்தது. சிங்கள இனவாதம் தமிழ் மேட்டுக்குடிகளின் இனவாதத்தின் மேலும், தமிழ் அதிகார வர்க்க மக்கள் விரோத நடத்தைகளில் இருந்தும் தன்னை கட்டமைத்து. பெரும்பான்மை இனம் சார்ந்த சிங்கள இனவாதிகள் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, தமிழர்களை எதிரியாகச் சித்தரிக்க தயங்கவில்லை. சிறுபான்மையினத்தினை ஒடுக்குவதில் தன்னை சிங்களமயமாக்கியது. அரசு நிர்வாகத்தில் தனது அதிகாரத்தை நிறுவுவதில் இனவாத அடிப்படையையே தனது கொள்கையாகக் கொண்டது. இதில் தமிழ், முஸ்லீம், மலையக தேசிய தலைவர்கள் முதல், போலி இடதுசாரிகள் ஈறாக கூட்டு அரசு அமைத்தே நடைமுறைப்படுத்தினர். இலங்கையை ஆட்சி செய்த அதிகார வர்க்கம் எப்படி தமிழரின் இனவாதிகள் கையில் இருந்து, சிங்கள இனவாதிகளின் கைக்கு மாறியதை கீழ் உள்ள புள்ளி விபரம் தெளிவாக்குகின்றது. இலங்கையை நிர்வாக ரீதியாக ஆண்டவர்கள் முதல் அரசதுறையில் வேலை வாய்ப்பை பெற்ற தமிழர்களின் பங்கை, இனவாத நடவடிக்கையால் படிப்படியாக குறைந்து வந்ததையும் நாம் பார்ப்போம்;.



1950 சதவீகிதத்தில் 1965 சதவீகிதத்தில் 1970 சதவீகிதத்தில்

இலங்கை நிர்வாக சேவை 30 20 05

எழுதுவினையர் 50 30 05

நிபுணத்துவ சேவை 60 30 10

ஆயுதப்படை 40 20 01

தொழிலாளிகள் 40 20 0,5


இது சுதந்திரத்துக்கு பின் திட்டமிட்;ட வகையில் இனவாதம் கட்டமைக்கப்பட்ட வடிவத்தைக் காட்டுகின்றது. இந்த வரலாற்று காலகட்டத்தின் தொடர்ச்சியில் தமிழ் தேசியவாதிகள் முதல் எல்லா சிறுபான்மை இனப்பிரதிநிதிகளும் இந்த பச்சை இனவாத அரசுக்கு முண்டு கொடுக்க தயங்கவில்லை. இதில் போலி இடதுசாரிகள் படிப்படியாக இணைந்து கொண்டு, இதை ஊக்குவித்தனர். போலி இடதுசாரிகள் பாராளுமன்ற வழியில் சிங்கள வாக்குகளை பெற்று பாராளுமன்ற கதிரைகளில் சுகம் காண இனவாதத்தை ஆயுதமாக்கி இனவாதிகளாக மாறினர். இலங்கையில் முற்போக்கு நடவடிக்கையாக வருணிக்கப்படும் அனைத்து தேசியமயமாக்கல் நடவடிக்கையின் பின்னும் இனவாதம் அங்கு கொழுவேற்றது. அரசமயமாக்கல் நடத்திய இனவாதிகள் அதை போலி இடதுசாரிகளின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்திய அதே நேரம், அரசுதுறையை சிங்கள இனவாதமாக்குவதில் வெற்றி கண்டனர். இதற்கு போலி இடதுகள் ஆசி வழங்கினர். இலங்கையில் நிர்வாக மற்றும் ஆளும் அதிகார வர்க்கத்தை சிங்கள இனவாதமாக்குவதின் மூலம் அதை சமூக மயமாக்கியுள்ளது. இது தமிழரின் வேலை வாய்ப்பை முற்றாகவே மறுத்துவிடுகின்றது. ஏதாவது தமிழருக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக வெளிப்படுவது கல்வித்துறை சார்ந்து மட்டுமேயாகும்;.



1956க்கும் 1970க்கும் இடையில் 189000 பேர் அரசு கூட்டுத்தாபனத்தில் வேலை வழங்கப்பட்டது. இதில் 99 சதவீதமானவர்கள் சிங்களவராவர். 1948 இல் அரசாங்க பொதுச் சேவையில் 82 000 பேர் இருந்தனர். இதில் 30 சதவீதமானோர் தமிழராவர். இதில் பெரும்பான்மையானவை யாழ் மேட்டுக்குடியினராவர். 1970 இல் 2 25 000 வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட போது அரசு கூட்டுத் தாபனத்தில் தமிழர் சதவீதம் 6 சதவீதத்தால் குறைவடைந்தது. 1971க்கும் 1974 க்கும் இடையில் 22 374 ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட போது அதில் சிங்களவர் 18000 பேரும், தமிழர் 1807 பேரும், முஸ்லீம்கள் 2507 பேரும் நியமிக்கப்பட்டனர். முஸ்லீம்களின் அதிகரித்த நியமனம் கல்வி அமைச்சு முஸ்லீமாக இருந்ததால் நிகழ்ந்தது. அரசுத்துறையில் திட்டமிட்ட இனவாதம் அடிப்படை கொள்கையாக இருந்தது.



1972 இல் அரசதுறையில் வேலை பெற்றோர் சதவீகிதத்தில்



சிங்களவர் தமிழர் ஏனையோர்.

1971 இல் சனத் தொகை 72.0 20.5 7.5

நிர்வாகம், நிபுணத்துவம், மொழில்நுட்பம் 67.7 28.5 3.8

இடைத்தரங்கள் 81.2 15.3 3.5

ஆசிரியர் 81.5 11.6 6.9

சிற்றூழியர் 86.4 10.6 3.0

தொழிலாளர் 85.5 11.6 2.9

ஏனைய பிரிவுகள் 82.6 12.9 4.5


அரசாங்க வேலை வாய்ப்புகள் 1977-1981க்கு இடைப்பட்ட கால கட்டத்தில்

மொத்த வெற்றிடம் சிங்களவர் தமிழர் ஏனையோர்.

எழுதுவினைஞர் 9965 9326 (93.6%) 492 (4.9 %) 147 (1.5%)

ஆசிரியர் 29 218 25 553 (87.6%) 2084 (7.1 %) 1581 (5.3 %)

மொத்தம் 39 183 34 879(87.6 %) 2576 (6.6 %) 1728 (5.8%)


அரசு மற்றும் கூட்டுறவுத்துறையில் 1980 இல் வேலை செய்வோர். இங்கு தமிழர் என்பது மலையக தமிழரை உள்ளடக்கியது. 1981இல் சனத்தொகை கணக்கெடுப்பில் 74 வீதம் சிங்களவரும், 12.7 வீதம் இலங்கைத் தமிழரும், 5.5 மலையகத் தமிழரும், 7 வீதம் முஸ்லீம்களும், 0.8 சதவீதம் ஏனையோருமாவர்.



மொத்தம் சிங்களவர் தமிழர் முஸ்லீம் ஏனையோர்

அரசுதுறை 3 68 849 84.34 11.61 3.33 0.72

கூட்டுறவுத்துறை 2 28 531 85.75 10.67 2.56 1.03

மொத்தம் 5 97 380 84.88 11.25 3.03 0.84


1980 ஆண்டு அரசுதுறை வேலை வாய்ப்பு சதவீகிதத்தில்



தொழில் சிங்களவர் தமிழர் ஏனையோர்

தொழிலடிப்படையிலான சிறப்பு தொழில் 82 12 6

நிர்வாக உத்தியோகம் 81 16 3

ஏனைய தொழில்கள் 84 12 4


1980ம் ஆண்டு அரசு கூட்டு ஸ்தாபனங்களில் வேலை வாய்ப்பு சதவீகிதத்தில்



தொழில் சிங்களவர் தமிழர் ஏனையோர்

தொழிலடிப்படையிலான சிறப்பு தொழில் 82 13 5

நிர்வாக உத்தியோகம் 83 14 3

ஏனைய தொழில்கள் 85 11 4


அரசு மற்றும் கூட்டுறவுத்துறையில் 1985லான வேலை செய்வோர். சதவீகிதத்தில்



மொத்தம் சிங்களவர் இலங்கைத்தமிழர் மலையகத் தமிழ்ர் முஸ்லீம் ஏனையோர்

அரசுதுறை 4 06 359 85.64 9.9 0.25 3.44 0.9

கூட்டறவுத்துறை 3 22 617 85.54 9.38 1.25 2.35 1.48

மொத்தம் 7 28 976 85.8 9.67 0.64 2.95 1.14


அரசு மற்றும் கூட்டுறவுத்துறையில் 1990லான வேலை செய்வோர். சதவீகிதத்தில்



மொத்தம் சிங்களவர் இலங்கைத் தமிழர் மலையகத் தமிழ்ர் முஸ்லிம் ஏனையோர்

அரசுதுறை 1 98 425 91.2 5.9 0.1 2.0 0.3

மாகணத்துறை 2 22 584 87.7 7.1 0.2 4.6 0.4

கூட்டுறவுத்துறை2 79 584 88.1 8.2 0.5 2.2 1.0

மொத்தம் 7 00 593 88.8 7.2 0.3 2.9 0.8


வெளிநாடுகளில் இலங்கை தூதரகங்களில் 1994 இல்.



மொத்தம் சிங்களவர் தமிழர் முஸ்லிம் ஏனையோர்

தூதுவர்கள் 32 65.6 9.4 18.8 6.2

ஏனைய ஊழியர்கள் 216 88.4 4.2 6.0 1.4


1994 இல் இலங்கையில் அரசு மற்றும் கூட்டுறவுத்துறையில் வேலை வாய்ப்பு பகிரப்பட்ட விதம் சதவீகிதத்தில்



ஜனத்தொகை அரசுதுறையில் மாகாணசபையில் அரசு உதவி பெறும்

சிங்களவர்கள் 73.9 91.2 87.7 88.1

இலங்கைத் தமிழர் 12.7 5.9 7.1 8.2

மலையகத் தமிழர் 5.5 0.1 0.2 0.5

முஸ்லீங்கள் 7.0 2.0 4.6 2.2

ஏனையவர்கள் 0.9 0.8 0.4 1.0


இலங்கையில் அரசு மற்றும் கூட்டுறவுத்துறையில் சிறுபான்மை இனங்கள் வேலை இழப்பை ஆராய்வோம். சதவீகிதத்தில்

1980 1985 1990

சிங்களவர் 84.8 85.8 88.8

தமிழர் 11.25 9.67 7.2

மலையகத் தமிழர் - 0.64 0.3

முஸ்லீம் மக்கள் 3.03 2.95 2.9

ஏனையோர் 0.84 1.14 0.8

அரசு மற்றும் கூட்டுறவுத்துறையில் மொத்த வேலைகள் 597 380 728 976 700 593


1980 குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரத் திணைக்களத்தால் இன அடிப்படையிலாக தொழில்கள் பற்றி வெளியிட்ட அறிக்கையைப் பார்ப்போம். இங்கு தமிழர் என்பது மலையகம் உள்ளிட்டது. மலையர், பறங்கியரும், மற்றவர்களும் உள்ளடக்கப்படவில்லை.



அரசு துறையில் சதவீகிதத்தில்



சிங்களவர் தமிழர் முஸ்லிம் மொத்த வேலை

உயர்தொழில் நுட்பம் ஏணையவை 82.4 12.11 5.09 141387

நிர்வக முகாமைத்துவம் 81.3 15.54 1.91 3705

ஏழுதுவினையர் அது தொடர்பானதும் 83.7 13.21 2.16 72997

விற்பனையாளர் 83.1 14.81 2.19 2094

சேவைத்துறை 86.9 9.01 2.43 27428

விவாசயம், மிருக வளர்ப்பு, காட்டு தொழில், மீன் பிடி,வேட்டை73.2 21.09 4.98 2930

உற்பத்தி, போக்குவரத்து, 85.5 11.05 2.32 100841

எந்திர இயக்குநர்கள் மற்றவர்கள் 93.8 3.28 1.29 17467

மொத்தம் 84.3 11.43 3.33 368849

மக்கள் தொகை 73.98 18.16 7.12 100


கூட்டுத்தாபன வேலை சதவீகிதத்தில்



சிங்களவர் தமிழர் முஸ்லிம் மொத்தம்

உயர்தொழில் நுட்பம் ஏணையவை 75.5 21.33 1.87 10801

நிர்வக முகாமைத்துவம் 83.3 12.51 2.33 5448

ஏழுதுவினையர் அது தொடர்பானதும் 86.5 9.92 2.32 72323

விற்பனையாளர் 87.2 8.31 2.15 1022

சேவைத்துறை 87.6 8.39 2.93 13240

விவாசயம், மிருக வளர்ப்பு, காட்டு தொழில், மீன் பிடி,வேட்டை 60.8 35.81 1.15 7458

உற்பத்தி, போக்குவரத்து, எந்திர இயக்குநர்கள் 88.0 8.36 2.83 115735

மற்றவர்கள் 69.7 26.27 2.59 2504

மொத்தம் 85.74 10.66 2.55 228531


இனவாதம் கூர்மையடைந்ததன் விளைவை நாம் மேலே காண்கின்றோம். படிப்படியாக இனவிகிதத்துக்கு கீழாக அனைத்து சிறுபான்மை இனங்களும் அரசு மற்றும் கூட்டுறவுத்துறையில் வேலை இழந்து செல்லுகின்றன. மாறாக பெரும்பான்மை இனம் அதிக சலுகை பெற்று வருகின்றது. அத்துடன் உலகமயமாதல் அரசு மற்றும் கூட்டுறவுத்துறையில் தனியார் மயமாக்கலையும், வேலை நீக்கத்தையும் கோருகின்றது. இதனால் வேலை வாய்ப்பு வேகமாக குறைந்து செல்லுகின்றது. பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனங்களை விட அதிக சலுகைகளை இனவாத அரசிடம் தொடர்ந்து பெறுகின்றது. உலகமயமாதலின் விளைவை சிறுபான்மை இனங்கள் மேல் இனவாத அரசு சுமத்துவதன் மூலம், ஒட்டுமொத்த சமூக நெருக்கடியில் இருந்து அரசு தப்பிச் செல்லுகின்றது. இந்த நிலையில் தேசிய இனங்களுக்கிடையில் ஐக்கியப்பட்ட நாட்டில் ஒன்றாக வாழ்வதற்காக, குறைந்த பட்சம் இனவிகித அடிப்படையில் வேலை வாய்ப்புகள் பகிரப்பட முடியாத உலகமயமாதல் நிபந்தனை உள்ளது. அரசு துறையில் வேலை வாய்ப்பை குறைக்கக் கோரும் நிபந்தனையும், வேலை நீக்கக் கோரும் நிபந்தனையும், அரசுதுறையில் தமிழருக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பை வழங்குமளவுக்கு, உலகமயமாதல் சகாப்தத்தில் நிலவும் சமூக அமைப்பால் சாத்தியமில்லை. தமிழருக்கு இனவிகித அடிப்படையில் வேலை வழங்க அரசு முன்வந்தால், சிங்கள மக்களை வேலையில் இருந்து நீக்கவேண்டும். உண்மையில் இனப்பிரச்சனையை இந்த உலகமயமாதல் நிபந்தனைக்குள், ஜனநாயக கோரிக்கையின் அடிப்படையில் தீர்க்க முடியாது. மாறாக ஐக்கியப்பட்ட ஒரே நாட்டில் தீர்க்க இரண்டு தரப்பும் உடன்பட்டால், தமிழரும் சிங்களவரும் இணைந்து மலையக மற்றும் முஸ்லீம் மக்களுக்கு, மற்றும் யாழ் அல்லாத பிரதேசத்துக்கும் நியாயமாக கிடைக்க வேண்டியதை சூறையாடியே அமைதியை ஏற்படுத்துவர். இதையே தமிழ் குறுந் தேசியம் தனது அரசியலாக ஆணையில் வைத்துள்ளது. வேறு எந்த வழியிலும் தீர்க்க முடியாது.



இதை நான் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுமாயின் 1981 ஆண்டு சனத் தொகை அடிப்படையில், 1990ம் ஆண்டில் அரசு மற்றும் கூட்டுறவுத்துறையில் உள்ள வேலை செய்வோரை இனவிகித அடிப்படையில் பகிரப்பட வேண்டுமாயின் என்ன நடக்கும் எனப் பார்த்தாலே போதும். 1981ம் ஆண்டு மக்கள் தொகையடிப்படையில் சிங்களவர் 74 சதவிகிதமும், தமிழர் 12.7 சதவிகிதமும், முஸ்லீம்கள் 7 சதவிகிதமும், மலையகத்தார் 5.5 சதவிகிதமாகவும், ஏனையோர் 0.8 சதவிகிதமாகவும் இருந்தனர். 1990 இல் அரசு மற்றும் கூட்டுறவுத்துறையில் மொத்தமாக வேலை செய்தோர் அண்ணளவாக 700593 பேராவர். இதில் சிங்களவர் 622126 பேரும், தமிழர் 50442 பேரும், முஸ்லீம்கள் 20317 பேரும், மலையகத்தார் 2101 பேரும், ஏனையோர் 7005 பேரும் வேலை செய்தனர். ஆனால் இன விகித அடிப்படையில் வேலை செய்திருக்க வேண்டியவர்கள் சிங்களவர் 518438யும், தமிழர் 88957யும், முஸ்லீம்கள் 49041யும், மலையகத்தார் 38532யும், ஏனையோர் 5604ம் ஆகும். இனவாதத்தால் இதில் உள்ள இடை வெளியை சிங்களவர் 103688 கூடுதலாகவும், தமிழர் 38533 குறைவாகவும், முஸ்லீம்கள் 28724 குறைவாகவும், மலையகத்தார் 36431 குறைவாகவும், ஏனையோர் 1401 அதிகமாகவும் காணப்படுகின்றனர். அதாவது இனவிகிதத்தை அடிப்படையாகக் கொள்ள வேண்டுமாயின் சிங்களவர் 103688 பேரின் வேலையை பறிக்கவேண்டும். இது மொத்தமாக வேலை செய்வோரில் 14.8 சதவிகிதமாகும். இது சாத்தியமில்லை. மற்றொரு வழியில் வேலை செய்யும் சிங்களவர் எண்ணிக்கையை இனவிகிதமாக்கி, சிங்களவர் அல்லாதவருக்கு வேலை வாய்ப்பை கொடுப்பதாயின் மொத்த வேலைசெய்வோரை 840710 யாக அதிகரிக்க வைக்க வேண்டும்; இது மேல் அதிகமாக சிறுபான்மை இனங்களுக்கு 140117 வேலை வாய்ப்பை அரசு மற்றும் கூட்டுறவுத்துறையில் வழங்க வேண்டும். இதுவும் இந்த உலகமயமாதல் சமூக அமைப்பில் சாத்தியமில்லை.



தமிழீழம் கிடைக்குமாயின் கூட இது சாத்தியமில்லை. யாழ் அல்லாத பிரதேசத்துக்கு பிரதேச ரீதியில் பெரும் தொகையான வேலை வாய்ப்பை தமிழீழம் வழங்காது மட்டுமின்றி வழங்க முடியாது. தமிழீழம் உலகமயமாதலை ஆதரிப்பதாக பிரகடனம் செய்கின்றது. உண்மை யதார்த்தத்தில் வெட்ட வெளிச்சமாக எம்முன் உள்ளது. சிங்கள, தமிழ் ஆளும் வர்க்கங்கள் செய்து கொள்ளும் ஒப்பந்தங்கள், சாதிய ரீதியாகவும், சிறுபான்மை இனங்களையும், பிரதேசங்களையும் சூறையாடியே இன ஒற்றுமையை அல்லது இனப் பிளவை வித்திடுகின்றன.